/* */

tamil quotes about life in one line வாழ்க்கையின் அனுபவங்கள்.... ஒத்தை வரியில... உங்களுக்காக....

tamil quotes about life in one line வாழநினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்... என்ற பாடலைப்போல் வாழ்வதற்கு பல வழிகள் உள்ளன. அதனை நாம் தேடிச்செல்லவேண்டும்.... அதுதான் வாழ்க்கை. வாழ்ந்து பார்க்கவேண்டும்... எப்படி என்று-?

HIGHLIGHTS

tamil quotes about life in one line  வாழ்க்கையின் அனுபவங்கள்....  ஒத்தை வரியில... உங்களுக்காக....
X


tamil quotes about life in one line



tamil quotes about life in one line

வாழ்க்கை - இதனை அனைவரும் வாழ்ந்து பார்க்க வேண்டும். வாழ்ந்து ரசிக்க வேண்டும்.நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு புது புது அனுபவங்களை கற்றுணர்த்துகிறது வாழ்க்கை. வருடத்திற்கு 365 நாட்கள் என்றால் நமக்கு 365 அனுபவங்கள் கிடைக்கிறது. ஒரே நாளில் எத்தனை எத்தனை அனுபவங்களை பார்ப்பவர்களும்இருக்கிறார்கள்.

அதேபோல் வாழ்க்கை என்பது நாம் சுலபமாக பயணித்து விடமுடியாது. பள்ளங்களும், மேடுகளும் போல் இன்பங்களும், துன்பங்களும் மாறி மாறி வரும். அதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டுமே தவிர உதாசீனப்படுத்த முடியாது. விலகி செல்லவும் முடியாது. அடுத்ததாக வாழ்க்கையில் பிரச்னைகள் என்று ஒன்று இல்லாதவர்களே கிடையாது என உங்களால் விரல் விட்டு எண்ண முடியுமா?

குடிசையில் வாழ்பவர்கள் முதல் பிரச்னைகள் உண்டு. அவரவர்களின் வாழ்க்கைக்கு தகுந்தாற்போல் பிரச்னைகளின் அளவு மாறுபடும், தன்மை மாறுபடும். வாழ்க்கையின் எல்லா நாட்களும் எல்லா தருணங்களிலும் நாம் சந்தோஷமாக வே இருக்க முடியாது. துக்கங்களும் அவ்வப்போது பனித்துளிகள் போல வந்து செல்லும்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? தினந்தோறும் பிரச்னைகளையே வாழ்க்கையாக நடத்தி வருபவர்கள் எத்தனையோ பேர் இந்த உலகில் உள்ளனர். எனவே நாம் வாழ்க்கையில் மற்றவர்களோடு ஒப்புமைப்படுத்தி வாழ்வதை முதலில் கைவிட வேண்டும். நமக்கு என்னவோ அதன்படி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அகலக்கால் வைத்தாலும் ஆபத்துதான்.

வரவறியாமல் செலவினமென்றால் நிலவரமெல்லாம் கலவரமாகிவிடும் அந்த சொற்றொடருக்கு ஏற்ப உங்கள் வருமானத்திற்கேற்ற செலவுகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தினம் தினம் கலவரந்தான்.

tamil quotes about life in one line


ஒரேவரியில் வாழ்க்கையின் அனுபவங்கள் ,,, அழகு தமிழில் ..... இதோ உங்களுக்காக....

போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல்.

வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும்.

வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.

தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்பதில் தவறில்லை.

ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்!

நோயும் கடனும் எதிர்பார்ப்பும் இல்லாதவனின் தூக்கம் மிகவும் சுகமானது.

அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்.

சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்

இழப்புகள் தான் பல வலியையும் சில வலிமையையும் தருகின்றன.

தெளிவாக செய்யாத காரியங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதில்லை.

அன்பு செய்யும் ஒருவனால் தான் பிறருடைய அன்பை உணர முடியும்.

அளவில்லா அன்பு இருந்தாலும் அளவோடு கொடுத்தால் தான்.. மதிப்பு இருக்கும்.!!!

நடக்காத.. கிடைக்காத.. ஒன்றின் மீது தான் ஆசை அதிகமாக வருகிறது..!

துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்.

யாரையும் நம்பாதே.. இந்த உலகில் தேவை இல்லாமல் யாரும் பழகமாட்டார்கள்…!

கண்டும் காணாமல் சென்று விடுங்கள் பார்த்தும் பார்க்காமல் செல்பவர்களை.

ஏமாற்றம் ஏற்படும் போது நிதானமாக யோசித்தால் நம் எதிர்பார்ப்பே தவறு என்று புரியும்..!

முடிக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் முயன்று பார்க்க மட்டும் தயங்காதீர்கள்…

யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு. அது தெரியாதவரை அனைவரும் நல்லவர்களே!

தவறவிட்டதை திரும்ப பெற முடியாது.. வாய்ப்பாக இருந்தாலும் வாழ்க்கையாக இருந்தாலும்!

இல்லாத போது தேடல் அதிகம்… இருக்கின்ற போது அலட்சியம் அதிகம்.. இதுதான் வாழ்க்கை…

எண்ணமும், பேச்சும், செயலும் ஒரே மாதிரி இருந்தால்… வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..!!

அழகாய் பேசும் பல வரிகளை விட.. அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்…!

தாமரை இலையை போல இரு. தேவையில்லாத சிந்தனைகளை மனதில் ஒட்டிக்கொள்ளாதே!

ஆண்களின் கண்ணீருக்கு வலி அதிகம், பெண்களின் கண்ணீருக்கு வலிமை அதிகம்…




Updated On: 26 Aug 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  2. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  4. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  5. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  6. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  7. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  8. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  10. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...