/* */

இதயத்தை பரிசாக தந்த நீ..வலியை ஏன் தந்தாய்..? கண்ணீரில் நான்..!

Relationship Pain Quotes in Tamil-வலி பெரும்பாலும் காதலின் பிரிவால் வருவதே அதிகம். காதலன் பிரிந்தால் காதலியும், காதலி பிரிந்தால் காதலனும் கண்ணீர் விடுவதே தொடர்கதை.

HIGHLIGHTS

இதயத்தை பரிசாக தந்த நீ..வலியை ஏன் தந்தாய்..? கண்ணீரில் நான்..!
X

Relationship Pain Quotes in Tamil

வலி என்பது என்ன? காயம் ஏற்பட்டால் ஏற்படும் வலியா..? இல்லை காயத்தால் மட்டுமே வலி ஏற்படாது. மனம் காயப்படும்போதும் வலி ஏற்படும். அது ஏற்பட்ட புண்ணைக்காட்டிலும் வலிமிகுந்தது. கண்ணீர் இல்லாமல் காதல் இல்லை. வலி நிறைந்த வாழ்க்கையில் காதலின் வலியையும் சேர்த்து அனுபவிப்பது மிகவும் கொடுமையானது. வாழ்க்கையில் காதல் எப்படியெல்லாம் வழியை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம் வாங்க.

நாம் நேசிப்பவர்களின் சின்னச் சின்ன மாற்றங்கள் கூட நம்மை பெரிய அளவில் வேதனைப்படுத்தும்.ஆனால், அவங்க புரிஞ்சிக்கிறது இல்ல.

காதலின் தொடக்கம் கண்களாக இருந்தால் அதன் முடிவு கண்ணீராக மட்டும் தான் இருக்கும்.

நாம் யாரை அதிகமாக நேசிக்கின்றோமோ அவர்கள் தான் நம்மை அதிகமாக அழ வைக்கிறார்கள்

உன்னோடு நான் சிரித்த நாட்களை விட உனக்காக நான் அழுத நாட்கள் தான் அதிகம். அது அந்த இரவுக்கு மட்டுமே தெரியும்..!

சிரிக்கின்ற முகம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அழுகின்ற மனம் யாருக்கும் தெரிவது இல்லை..!

உலகில் சிரிக்க வைக்க பல விஷயங்கள் இருந்தாலும் நம்மை அழ வைப்பதை மட்டுமே நினைக்கிறது மனது

என் வாழ்க்கையில் அழுவது ஒன்றும் புதிதல்ல என்னை அழ வைப்பவர்கள் தான் புதிது

காதலின் ஆழத்தை விவரிப்பது கண்ணீர் துளிகள். பிரிவின் வலியை தங்குவது இதயம்.

நாம் அழுதால் பிடிக்காது என்பவர்களுக்கு நம்மை அழ வைப்பது மட்டும் பிடிக்கும் போல. நாம் அழுவதை ரசிப்பதற்காக..

அளவுக்கு அதிகமாக உன்னை நேசித்ததால்தான் இன்று அளவுக்கு அதிகமாக உன்னால் அழுது கொண்டிருக்கிறேன் நான்..!

அன்பிற்கு அழவும் தெரியும்..! அழ வைக்கவும் தெரியும்..! புரிந்துவைத்து பிழிந்து எடுக்கும் மனசு.

நம் வார்த்தைகளால் சொல்ல முடியாத வலிகளை நம் கண்ணீர்கள் தான் பிரதிபலிக்கின்றன..!

கண்ணீரின் காரணமும் வலியும் நம் கண்களுக்கு தெரிவது இல்லை. நம் இதயத்திற்கு மட்டும் தான் தெரியும்.

அளவோடு இருக்கும் வரை மட்டும் தான் அதன் பெயர் அன்பு..அளவுக்கு அதிகமானால் கண்ணீர்..!

இதயத்தை உடைத்தவர்களால் தான் அதை ஒட்ட வைக்கவும் முடியும். ஆனால் உடைந்தது உடைந்ததுதானே..!

நம் வலியை புரிந்து கொள்ள முடியாதவர்களால் நம் அன்பையும் புரிந்துக் கொள்ள முடியாது..!

புரிந்து கொள்ளப்படாததை விட கொடுமையானது, நம்மை நேசிப்பவரே நம்மைப் பற்றி தவறாக புரிந்து கொள்வது

ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட முடியாத தருணம் மிக கொடுமையானது..!

இதயத்திற்கு அருகில் இருப்பவர்கள் கொடுக்கும் காயத்திற்கு வலி கொஞ்சம் அதிகம் தான். அவர்களால் அதற்கு மருந்தும் போடமுடியும் என்பதை மறந்துவிடுகிறார்கள்..!

அளவுக்கு அதிகமாக நான் உன் மீது வைத்த அன்பிற்கு நீ வைத்த பெயர் தொல்லை..!

வலிகளும் பழகித் தான் போகிறது. நாம் நேசிப்பவர் தினமும் நம்மை காயப்படுத்துகையில்..வலிகளிலும் சிறு சுகம் அன்பே உந்தன் முகம் காண்கையில்..!

சில வலிகளுக்கு ஆரம்பமே அளவுக்கு அதிகமான அன்பு ஒன்று மட்டும் தான்..!

நம்மை விட்டு செல்பவர்களுக்கு நம் வலியும் வேதனையும் புரிவதில்லை. புரிந்திருந்தால் நம்மை விட்டு செல்ல நினைத்திருக்க மாட்டார்கள்.

உலகத்திலேயே ரொம்ப கொடுமையான வலி வலிக்காதது மாறி நடிக்கிறது தான்..!

காயத்தால் ஏற்பட்ட வலியை விட வலியை மறைக்க உதவும் புன்னகைக்கு தான் வலி அதிகம்..!

மனம் வாடினாலும் முகம் வாடாதவாறு நடிப்பதும் தனித் திறமை தான் ஒரு சிலருக்கு

புன்னகை ஒருவருடைய காயத்தை மறைக்க உதவுமே தவிர காயத்தை மறக்க உதவுவது இல்லை..அது ஒரு வடு..!

மற்றவர்களிடம் காட்டப்படும் பொய்யான சிரிப்பினை உண்மையாக நேசிப்பவர்களிடம் நம்மால் காட்ட முடியாது..நம் இயல்பும் மாறிப்போகும் என்கிற கவலை எனக்குள்..!

மரணத்தைக் காட்டிலும் கொடுமையானது மனக்கவலை. மரணம் ஒருமுறை தான் கொல்லும். மனக்கவலை நொடிக்கு நொடி கொல்லும். அப்பப்பா எத்தனை முறைதான் நான் சாவது?

சிலரின் மௌனம் திமிரல்ல அவர்களுக்குள் இருக்கும் வலி..!

பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட, பழகிய மனிதர்களிடம் இருப்பதில்லை.!

ஒருதுளி அன்பைக் கொடுத்து நூறுதுளி கண்ணீரை விலை கேட்பதுதான் இந்த வாழ்க்கை..!

காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை..!

உயிரோடு இருக்கிறேன். ஆனால் உடைந்து இருக்கிறேன். என்னவென்றே தெரியாத பல காரணங்களால்..!

விதியே,ஒருநாளாவது என்னை நீ நிம்மதியாக உறங்க வை. அது என் மரணமாக இருந்தாலும் பரவாயில்லை..!

நான் நேசிக்கும் ஒரு உறவும் எனக்கு நிரந்தரமில்லை என்பது கடவுளால் அளிக்கப்பட்ட சாபம் போயிருக்கிறது…!

நானே வறுமையில் வாழ்கிறேன். வறுமையோ என்னிடம் வசதியாய் வாழ்கிறது..!

ஏமாற்றம் எனக்கு புதிதல்ல. நான் ஏமாறும் விதம்தான் புதிது. சிலநேரம் அன்பால். சிலநேரம் நம்பிக்கையால்..!

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்துவிட்டால் நினைவின் மொழியும்,பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்..! அதற்கான பாடங்கள் தான் வலியோ..?

என்ன நடந்தாலும் உன்னிடம் சொல்லியே பழகிவிட்டேன்.. நீ போனதை யாரிடம் சொல்ல?

என் இதயமும் உணர்வற்று உன் நினைவால் என் உயிர் மட்டும் வாழுதடி..!

மறக்கத்தான் நினைக்கிறேன் உன்னை முடியவில்லை.. நீ என்னை மறந்து விட்ட போதிலும் கூட..

நீ அளித்த அன்பளிப்புகளிலேயே அற்புதமான அன்பளிப்பு இந்த வேதனைதான்…அதை சுமக்கமுடியாமல் தவிக்கிறேன்..!

பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோசமாக இருக்கின்றனர். உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுகின்றனர்..

எங்கு சென்றாலும் தொடரும் நிலவாய் என்னை எப்போதும் பின் தொடர்கிறது உன் நினைவுகள்…

விடைபெறாத என் வார்த்தைகளால்..விடுபட்டு நிற்கிறது என் காதல் உந்தன் முன்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 March 2024 11:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!