/* */

பிள்ளைகளுக்காகவே வாழ்க்கையை தியாகம்செய்யும் ஜீவன்கள்..... பெற்றோர்

Parents Quotes in Tamil-வாழ்க்கையில் பல நிலைகளில் பெற்றோர்கள்தான் நமக்கு வழிகாட்டியாக உள்ளனர்.அவர்களின்பெருமை நாம் இறக்கும் வரை இருக்கும்...இருக்க வேண்டும்...

HIGHLIGHTS

Parents Quotes in Tamil
X

Parents Quotes in Tamil

Parents Quotes in Tamil

மனிதனாக பிறந்தவர்கள் தன் வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் கடந்து செல்ல பெற்றோர்களே முக்கிய காரணமாக அமைகின்றனர். தனக்கு பிறக்கும் ஆண், பெண் எந்த குழந்தையாக இருந்தாலும் அதனை சீராட்டிவளர்த்து நல்ல கல்வியை தந்து சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்தினை அடைய பெற்றோர்களின் பங்கானது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

பல பெற்றோர்கள் தங்கள் வாழ்நாளை தனது குழந்தைகளுக்காக வாரிசுகளுக்காகவே செலவிடுகின்றனர் என்பதே உண்மை. பலர் ஒருசில பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தாலும் பெரும்பான்மையான பெற்றோர் வாழ்நாளை தங்களுடைய வாரிசுகளுக்காகவே கழிக்கின்றனர், வாழ்கின்றனர் என்பதே உண்மையான கூற்றாகும்.

பிள்ளைகளுக்காக தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியினை தியாகம் செய்கின்றனர் பல பெற்றோர்கள். அது எந்த வித தியாகமாக இருந்தாலும் அவர்கள் செய்ய தயார். ஆனால் ஒரு சில வாரிசுகள் இவ்வளவு கண்ணும் கருத்துமாய் பார்த்த பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்ப்பதுதான் மனதிற்கு பெரும்வேதனையை அளிக்ககூடிய நிகழ்வாகி விடுகிறது.

பத்து மாதம் சுமந்துபெற்றெடுத்த பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் நாம் அவர்கள் வாழ்நாள் வரை கூடவே வைத்திருந்து அவர்களுக்கு தேவையான பணிவிடைகளை செய்யும் மகன், மகள்களே பெருமைக்குரியவர்கள். இது சொல்லப்போனால் அவர்கள் அக்காலத்தில் செய்த உதவியினை அவர்களுடைய முதுமையில் நாம் செய்கிறோம்.

முதுமை என்றாலே சிறுகுழந்தைகள் போல் ஆகிவிடுவார்கள். அவர்களை நாம் அருகில் வைத்தோ ஆள் வைத்தோ கண்காணிக்க வேண்டுமே தவிர முதியோர் இல்லங்களில் சேர்க்ககூடாது. வயதான காலத்தில் நம்மிடமிருந்து அவர்களைபிரிப்பது அவர்களுக்கு காலம் எல்லாம் பெருத்த மனஉளைச்சலைத் தரும். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பாதுகாவலர்கள் தாத்தா, பாட்டிதான். உங்களுக்கு நேரம் இல்லாவிட்டாலும் அவர்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்வார்கள். பெற்றவர்களை விட உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் யார் கிடைப்பார் இவ்வுலகில். எனவே வயதான காலத்தில் உடனிருந்து அவர்களை கவனியுங்க... அவர்களின் ஆசி உங்களுக்கு என்றென்றும் கிடைக்க வேண்டும்.. நல்ல மனதோடு...

பெற்றோர்கள் குறித்த வாசகங்கள் அழகு தமிழில்...

பிறப்பு முதல் இறப்பு வரை மாறா அன்பும், ஆதரவும், அக்கறையும் கொண்ட ஒரே உறவு தாய், தந்தை உறவு மட்டுமே.

எதை கொடுத்தும் வாங்க முடியாத அரியாசனம்.. தந்தையின்தோள்யாரும் இழக்க விரும்பாத தொட்டில்.. அன்னையின் மடிஉலகில் யாராலும் கொடுக்க முடியாத விலை மதிப்பில்லாத பொக்கிஷம். பெற்றவர் அன்பும் அரவணைப்பும்

அம்மா என்னும் சொல் முதல் மொழி அப்பா என்னும் சொல் முகவரிதன்னலம் இல்லாதது தகப்பன் பாசம்.. ஈடு இணை இல்லாதது அன்னையின் நேசம்

நீ மற்றவர் மத்தியில் பெருமையாக வாழ்வதைவிட உற்றவராம் பெற்றவர்களை மதித்து பெருமை சேர்க்கும் விதம் வாழ்வதே சிறப்பு

எவ்வித பலனும் எதிர்பார்ப்பும் இல்லாமல் இவ்வுலகில் என்னை நேசிக்கவும் ஆதரிக்கவும் இருக்கும் ஜீவன்கள் அப்பா, அம்மா,

தன்னலம் கருதாமல் தியாக உணர்வோடும் அர்ப்பணிப்போடும் தங்களது குழந்தைகளை வளர்க்கும் தியாகிகள் பெற்றோர்

ஒரு வழிகாட்டியைப் போல என் வாழ்க்கையில் என்னை வழிநடத்தியதற்கும் உண்மையான நண்பரைப்போல என்னை ஆதரித்தமைக்கும் நன்றி.

ஒருவருக்கு உபகாரம்செய்ய வேண்டும் என்றால்முதலில் தாய்க்கு செய்ஒருவருக்கு மரியாதைசெய்ய வேண்டும் என்றால்முதலில் தந்தைக்கு செய்.

அம்மா அப்பா தினம் கொண்டாடஅவர்கள் உறவுகள் அல்லஉயிர்கள்! அவர்களைஒவ்வொரு நாளுமேகொண்டாடத்தான் வேண்டும்.

நீ தேடி சென்றாலும்விலகி செல்வது மற்றவர்கள்நீ விலகி சென்றாலும்உன்னை தேடி வருவதுபெற்றவர்கள்!

அம்மாவின் வயிற்று கருவறை பாக்கியமும்அப்பாவின் மார்பின் கருவறை பாக்கியமும்வாழ்நாளில் என்றுமே தீர்க்க முடியாத கடன்கள்!

நல்லதோர் குடும்பம்பல்கலைக்கழகம் என்பர்!அம்மா அப்பா என்பதேதாரக மந்திரம் பின்பற்றிவாழ்ந்து பார் படைப்பாய்பல சரித்திரம்!

ஆரம்பம் முதல் கடைசி வரைநமக்கு மாறாமல் கிடைக்கும்ஒரே அன்பு அது அம்மா அப்பாஅன்பு மட்டுமே.

வாழ்க்கையில் கடைசிவரைதனக்குனு சமைக்காத ஜீவன்"அம்மா"

தனக்குனு சம்பாதிக்காத ஜீவன்"அப்பா"

காதல் மட்டுமேபுனிதமானது அல்ல!கைகால் வலிக்க நாள்முழுவதும்உழைத்த தாய் தந்தையரின்உழைப்பு அதைவிட புனிதமானது!

பெற்றோர்களுக்காக எதாவதுஒன்றை விட்டு செல்லுங்கள் பெற்றோர்களை எதாவதுஒன்றிற்காக விட்டு செல்லாதீர்கள்.

எதை கொடுத்தும் வாங்க முடியாதஅரியாசனம் தந்தையின் தோள்யாரும் இழக்க விரும்பாததொட்டில் அன்னை மடி.

"எந்தப்புள்ளியிலும் நமக்குதீங்குநினைக்கா உயிர்வாழ்வின் ஆதாரத்தை நமக்குநன்மையருளும் உயிர்பெற்றோர்கள் மட்டுமே

"நம்மை கண்டோர் எல்லாமேஎன்ன நினைத்தார் தெரியாதேஉன்னை முப்பொழுதும் மறவாதஉயிர் என்றால் பெற்றோரே!

"வந்து போனவன் பலநூறுதினம் இருப்பவனோ சிலநூறுஅதில் நினைப்பவனோ ஐந்தாறுநலம் விரும்பியோ யார்தேடு

உன்தன் பெற்றோரே நீபாரு!

"இந்த வாழ்விலே யாரோநீஎந்த கனத்திலே அறிவாய்நீவந்த பொழுதிலே புரியாநீஉந்தன் பெற்றோரின் செல்வம்நீ!

"நம்மை கவனிக்கவே நாமுமேஉம்மை உயிராக தாமுமேவிண்ணை தாண்டியே நீரூம்அன்பை விதைக்குமே எப்பொதும்

வியப்பை அருளுமே எந்நாளும்!

"கனவு தட்டையாய் மாறுமோவாழ்வு வீழ்வாய் வீணாகுமோதினம் மகிழ்ந்து மூழ்கவேதனம் அருள்வது பெற்றோரே

"தினம் தினம் ஏன் என்று நம்மை நாமேவதைத்து வெறுத்து கொள்ளும் இந்நாளில்தினம் தினம் நம்மை அன்பாலே

அணைத்து மகிழ்ந்து கொள்வது பெற்றோர்களே!

"கவிதை எழுதலாம்பாடல் பாடலாம்ஓவியம் வரையலாம்ஆனால் எவற்றிலும்பெற்றோரின் தூய்மையைகடத்த முடியாது

"கோடையில் குளிரில்நன்மையில் தீமையில்ஏற்றத்தில் இறக்கத்தில்எல்லாவற்றிலும்துணையிருப்போரே பெற்றோர்

"அவர்களது வியர்வைத்துளிகளில்நமது மகிழ்ச்சி தருணங்கள்அவர்களது புதைந்த துயரத்தில்நாம் கண்டது புன்னகைகள்

நம்மை மகிழ்ச்சி ததும்ப செய்யஅவர்களின் இன்னல்கள் பலஅத்தனை இன்னல்களையும்இன்பமாய் ஏற்றவர்கள் பெற்றோர்கள்

"மகன்களோ மகள்களோநாளை நம்மை கவனிக்காமல் போகலாம்ஆயினும்மகன்களுக்கோ மகள்களுக்கோஇன்பத்தை தருவது வாழ்வை தருவதுபெற்றோர்களின் இன்ப வாழ்வின் ஆதியே.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 April 2024 9:12 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!