வாழ்க்கை வலிகள் கவிதை தமிழில்..
Pain Kavithai in Tamil-வாழ்க்கை வழிகள் கவிதை நம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தட்டும்.
HIGHLIGHTS
Pain Kavithai in Tamil
எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் தள்ளிவிடுகிறது, வாழ்க்கை.
சுலபமாக கிடைத்துவிடும் எந்த பொருளுக்கும் இவ்வுலகில் மதிப்பில்லை, அது அன்பாக இருந்தாலும்.
நடிக்க தெரிந்தவன் எல்லாராலும் மதிக்கப்படுகிறான்! நடிக்க தெரியாதவன், எல்லாராலும் மிதிக்கப்படுகிறான்!
சில வலிகளுக்கு மருந்தே இல்லை என்று தெரிந்தும், மறைத்து வைத்து கொள்கிறேன், சிறு புன்னகையில்!
வாழ்வில் வலிகளும் காயங்களுமே மனிதனை மாற்றுகிறது! சிலரை அமைதியாகவும், சிலரை அரக்கனாகவும்!
மரணத்தை விட கொடுமையானது, மறக்கப்படுதலும், புறக்கணிக்கப்படுதலும்
முதல் முறை வெறுக்கும் போதே விலகி விடுங்கள்! பின், அவர்களுக்கு பிடித்ததே செய்தாலும், வெறுப்பாக தான் இருக்கும்!
எல்லாப் பக்கமும் உறவுகள் கசக்கும் போது, மனதிற்கு பிடித்தவரிடம் தான் மனம் ஓடி வருகிறது!அந்த உறவும் புரிந்துகொள்ளாமல் வதைக்கும் போது, வாழ்க்கை வெறுத்துத்தான் போகிறது!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2