/* */

நல்ல வாழ்க்கைக்கான மேற்கோள்கள்..! நல்லது செய்து வாழலாமே ..!

Ithuvum Kadanthu Pogum Quotes-நல்லது செய்தல் என்பது பிறருக்கு உதவுவது மட்டுமல்ல..தீங்கு செய்யாமல் இருப்பதுமே ..!

HIGHLIGHTS

Ithuvum Kadanthu Pogum Quotes
X

Ithuvum Kadanthu Pogum Quotes

Ithuvum Kadanthu Pogum Quotes

வாழ்க்கை என்பது ஒருமுறை. அதை சொர்க்கமாக்குவதும் சேதமாக்குவதும் நம்ம கையில்தாங்க இருக்கு. நீங்க உங்க வாழ்க்கையை வசந்தமா மாத்திக்கங்க. உங்களுக்காக வாழ்க்கை பற்றிய சில மேற்கோள்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

  • வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்..! சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்..!

பலர் அதையும் கேட்பதில்லை..!

  • வாழ்க்கை அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறது, சிலவற்றை சந்தோஷங்களாக...! சிலவற்றை சங்கடங்களாக..!
  • பிரபல்யமும், செல்வமும் கடல் நீரைப் போன்றது...! அதனைக் குடிக்கக் குடிக்க..தாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்..!
  • தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ..அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும் நிம்மதியும் கூடும்..!
  • விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்..விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்..இவை தான் மனிதனின் எண்ணங்கள்...!
  • பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நம்பிக்கையை கொடுங்கள்..!ஆயுள் முழுவதும் அதுவே போதுமானதாக இருக்கும்..!
  • பழிவாங்குதல் வீரம் அல்ல, மன்னித்து அவரை ஏற்றுக்கொள்வதே வீரம்..!
  • பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது..பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும்..! இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது..! அதேபோல் தான், நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது..! நம் சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்..!
  • வாழ்க்கை எப்படி வேண்டுமெனாலும் மாறட்டும்..! எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்..! அதுவும் இதுவும் எதுவும் கடந்து போகும்..! ஆனால் எதுவும் மறந்து போகாது...!
  • ஞானிகள் ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்ந்தாலும், உன் வாழ்க்கையில் உன் அனுபவங்களே உன்னை

ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது..!

  • காணாமல் போனவர்களை தேடலாம்..அதில் சிறிதும் தவறு இல்லை..! கண்டும் காணாமல் போனவர்களை மட்டும் உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே...!
  • அனைவருக்கும் இனிமையாக இருக்க அந்த இறைவனானாலும் கூட முடியாது..! அனைவரிடமும் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க முயற்சி செய்..!
  • எந்த செயல் செய்தபோதிலும் திறமை என்ற ஒன்றை மட்டும் வளர்த்து கொள்..! உன்னிடம் பணம், பொருள் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்..ஆனால் இந்த திறமையின் மூலம் ஜெயித்து விடலாம், வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம்..!
  • வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும் இருப்பது கரை என்னும் நம்பிக்கை...!

அதில் பீறிட்டு ஓடுகிறது விதி என்னும் வேடிக்கை...!

  • கொடுப்பது சிறிது என்று தயங்காதே..! வாங்குபவருக்கு அது பெரிது..! எடுப்பது சிறிது என்று திருடாதே..!

இழப்பவருக்கு அது பெரிது..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 March 2024 9:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!