/* */

ஊக்கமளிக்கும் வார்த்தைகளோடு வணக்கம் சொல்லிப் பாருங்க...

Kaalai Vanakkam Quotes-காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியோடு மற்றவர்களுக்கு வணக்கம் சொல்லிப் பாருங்களேன்... உங்களுக்கே புல்லரிக்கும்..?

HIGHLIGHTS

Kaalai Vanakkam Quotes
X

Kaalai Vanakkam Quotes

Kaalai Vanakkam Quotes-உங்களுக்கு தெரியுமா? தற்போதுள்ள வாழ்க்கை முறையில் மனிதர்களின் வாழ்க்கையானது ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படுகிறது. காரணம் பெருகி வரும் நோய்களால் மனிதர்களுக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதே தெரியாத புதிராக போய்விட்டது. திடீரென கொடிய நோய் கொரோனா வந்து உடல் நல ஆரோக்யத்தோடு இருப்பவர்களை எல்லாம் வாரி எதிர்பார்க்காமல் சுருட்டிக்கொண்டு போனது . அந்த வகையில் இப்போதுள்ள நிலையில் மனிதர்கள்இரவில் படுத்து காலை எழுந்தாலே போதும் என்றாகிவிடுகிறது. அந்த அளவிற்கு இனம் புரியாத நோய்களின் தாக்குதல்கள். போராட்டமான வாழ்க்கைதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

அந்த வகையில் நாம் காலையில் படுக்கையை விட்டு எழும்போது என்ன மனநிலையில் உள்ளோமோ? அதேதான் அன்றைய நாள் முழுவதும் நடக்கும். காலையில் நம் மனமானது சந்தோஷமாக இருக்கும்போது அன்றைய செயல்பாடுகளும் மிக வேகமெடுக்கும்.அதுவே நாம் காலையில் மனக்கிலேசத்துடன் இருக்கும்போது செயல்கள் சிறப்பதில்லை. எனவே எப்போதும் காலை நேரத்தில் நமக்கு பிரச்னைகள் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் புத்துணர்ச்சியோடு வணக்கம் சொல்லுங்க. அப்புறம் பாருங்கள் அன்றைய நாளை...வெற்றி மேல் வெற்றிதான் போங்க...

வணக்கம். இந்த வார்த்தை ஆத்மார்த்தமானது. வெறும் வாயில் இருந்து வரும் வார்த்தை அல்ல.

காலை வணக்கம் இது மனதோடு ஒன்றிப் போன வார்த்தை. அதுபோல் சந்தோஷத்தோடு சொல்லப்படும் வணக்கங்களுக்கு பல ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

காலையில் எழுந்ததும் உங்கள் நண்பர்கள், உறவுகள், உடன் பணிவோர், அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உங்கள் அடிமனதில்இருந்து சந்தோஷத்தோடு காலை வணக்கத்தினை அழகு தமிழில் சொல்லிப் பாருங்க... உங்கள் மனசுல ஒரு பாசிடிவ் வைப்ரேஷன் ஏற்படும்.

*தினமும் காலையில் எழுந்த உடன் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அன்றைய தினம் இனிமையானதாக அமையும். நமக்கு பிடித்தமானவர்களிடம் இருந்து வரும் குறுந்செய்தி நம்மை இன்னும் மகிழ்ச்சி ஆக்கும்.

*காலையில் உங்கள் மன நிலையானது மகிழ்ச்சியுடன், புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொண்டால் அந்த நாள் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியான சம்பவங்களே நிகழ வாய்ப்புண்டு. அதைத்தான் மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும் என சொன்னார்கள். அதன் படி மனசு நல்ல நிலையில் வச்சுக்க பாருங்க.. காலை வணக்கத்திலிருந்து....

*தலையணையின் அணைப்பிலிருந்து கனவுகளின் பிணைப்பிலிருந்து நித்திரையின் இணைப்பிலிருந்துஇமைகளை அவிழ்த்துநேற்றை மறந்து இன்றை தொடர்இனிய காலை வணக்கம்!

*கதிரவனின் கடைக்கண் பார்வையில் மறைந்திருக்கிறது உனக்கென ஒரு நாள்புன்னகையுடன் தொடங்குபூக்களாக நிறையட்டும்இந்த தினம்.

*புன்னகையும் மௌனமும் மிக பெரிய ஆயுதங்கள் புன்னகை பல பிரச்னைகளை தீர்க்கும் மௌனம் பல பிரச்னைகளை வர விடமால் தடுக்கும். காலை வணக்கம்!

*புத்துணர்ச்சியோடு காலை வணக்கம் சொல்லுங்க...வாசகங்கள்...

*வாழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி முள்ளும் இருக்கும்

*மலரில் இருக்கும் முள்ளைக் கண்டு பயந்து விடாதேமலரை கண்டு மயங்கி விடாதே. இனிய காலை வணக்கம்!

விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு.. சாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!

தவறி விழுந்த விதையே முளைக்கும் போது தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை மட்டும் சிறக்காதா. காலை வணக்கம்!

எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை ஆனாலும் எதிர் பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை. இனிய காலை வணக்கம்!

இன்று வரும் துன்பங்களை கண்டு ஒழிந்தால் நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது. காலை வணக்கம்!

ஒரு குறிக்கோளை முடிவு செய்த பின் அதற்கான முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இனிய காலை வணக்கம்!

உன்னை போல இந்த உலகில் யாரும் இல்லை அதற்கு உன் கை ரேகைகளே சாட்சி! இனிய காலை வணக்கம்

முன் வைத்த காலை பின் வைக்காதே வெற்றியோ தோல்வியோ இறுதி வரை முயற்சி செய்.அடுத்தவர்களிடம் குறைகளை தேடுவதை விட நிறைகளை தேடு உன் மனம் பக்குவமடையும். இனிய காலை வணக்கம்!

தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம் பனிக்கட்டியாக ஆகும் வரை காத்திருந்தால். இனிய காலை வணக்கம்!

ஆவலாய் காத்திருக்கிறோம் மழைக்காக குடையும் உனக்காக நானும் காலை வணக்கம்

இந்த உலகில் நீ மாற்றத்தை விரும்பினால் முதலில் உன்னிடம் இருந்து தொடங்கு.நம் வாழ்வில் திரும்ப பெற முடியாதவைஉயிரும் ,நேரமும் ,சொற்களும்.இனிய காலை வணக்கம்!

வேதனைகளை வென்று விட்டால் அதுவே ஒரு சாதனை தான்.இனிய காலை வணக்கம்!

எல்லா சமயமும் கூறுவது தீமையை செய்யாதே நன்மையை செய்.இனிய காலை வணக்கம்!

உதிக்கும் சூரியனைப் போல உங்கள் வாழ்க்கை நன்கு மிளிரட்டும்.இனிய காலை வணக்கம்!

தோல்வி உன்னை துரத்தினால் வெற்றியை நோக்கி நீ ஓடுஇனிய காலை வணக்கம்!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 17 April 2024 9:14 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  3. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  4. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  5. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  6. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  7. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  8. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!