/* */

கல்யாண தம்பதிகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்து சொல்வோம்........படிங்க...

Kalyana Valthukkal Tamil-கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிரு...என்று பந்தத்தின் உறுதியை உணர்த்தினர் நம் முன்னோர்கள். அந்த வகையில் திருமண வாழ்த்து சொல்லலாம் வாங்க...

HIGHLIGHTS

Kalyana Valthukkal Tamil
X

Kalyana Valthukkal Tamil

Kalyana Valthukkal Tamil-திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிரு... ஆயிரம்பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம்... என்பது நம் பேச்சு வழக்கில் இருந்தாலும் இது அந்த காலத்திற்கு பொருந்தியதால் இதுபோன்ற சொலவடைகள் உருவாகின என்று கூட சொல்லலாம். ஆனால் தற்கால நாகரீக மோக உலகில் இது வெல்லாம் எதற்கும் சரியாக படுவது போல் தெரியவில்லை.

திருமணங்கள் அக்காலத்தில் பெரியவர்களால் பார்த்து நடத்தப்பட்டதே அதிகம். பெண் என்பவள் அச்சம், மடம்,நாணம், பயிர்ப்பு போன்ற குணநலன்களுடன் இருக்கவேண்டும். அக்காலத்தில் பெண்கள் அடிமைத்தனமாக நடத்தப்பட்டனர் என்பதற்கு பல சான்றுகள்உள்ளன. அதேபோல கணவன் பெயரைக்கூட சப்தமாக வெளியில் அக்காலத்தில் பெண்கள் சொல்லமாட்டார்கள். இதனை பழைய சினிமாக்களில் இப்போது கூட காணலாம். கணவன் வாழை இலையில் உணவு உண்ட பின் அதே இலையில் மனைவி அமர்ந்து சாப்பிட்ட காலங்கள்உண்டு. இதுவெல்லாம் இப்போது நடைமுறையில் உள்ளதா என கேட்கிறீர்களா? அதுதான் இல்லை.

''அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு'' என்று இருந்த நிலை மாறி பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்ற அளவிற்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியில் உள்ளனர். முண்டாசுக்கவி பாரதி புதுமைப்பெண் என்ற வார்த்தையினை உச்சரித்ததோடு அவர் வாழ்ந்த காலத்தில் பலமாற்றங்களைக்கொண்டு வர பாடுபட்டதோடு பல கவிதைகளில் இதனை வெளிப்படுத்தியும் உள்ளார். அக்காலத்தில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அக்காலத்தில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் படிக்கும் பழக்கம் இல்லாமல் இருந்தது. அதாவது பருவம் அடைந்து விட்டால் உடனடியாக திருமணம் என்ற நிலைஇருந்தது. மேலும் பல பெண்கள் கல்விச்சாலை பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்தவர்களும் இருந்தனர். இவையெல்லாம் காலப்போக்கில் மாறி இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டதோடு, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்று சொல்லும் அளவிற்கு பல துறைககளில் சாதனை படைத்து வருகின்றனர்.

அக்கால வழக்கத்தில் கல்வியைக் கற்க முடியாத தாய், தந்தையர் தற்போதுள்ள பெண் குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என விரும்பி குறைந்த பட்சக்கல்வியாக இருந்த பிளஸ் 2 படிப்போடு நிறுத்திவிடாமல் உயர்கல்வி கற்க காலேஜிற்கும் அனுப்பினர். இதனால் பெண்கள் கல்வித்துறையில் சாதனை படைக்க துவங்கினர். இதனால் அவர்களால் எளிதில் வேலைகளையும் பெற முடிந்தது. இன்றளவில் கல்வி, வேலைவாய்ப்புகளில் அனைத்து துறைகளிலும் பெண்களின் எண்ணிிக்கையானது கணிசமாக உயர்ந்துள்ளது. ஐ.டி. துறைகளில் இவர்களே அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதை யாராலும் மறுக்க முடியாது. சொல்லப்போனால் ஆண்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் நிலைக்கு உயர்ந்ததால் திருமணத்திற்காக இவர்களுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது பல கன்டிஷன்களை பெண் வீட்டார் போடும் நிலையே இன்றளவில் தொடர்கிறது.

நாடு முழுவதும் திருமண புரோக்கர்கள், மேட்ரிமோனியல் நிறுவனங்கள் என பல இருந்தாலும் அவைகள் மூலமாக திருமணங்கள் நடப்பது தற்போது குறைந்து வருகிறது. மீடியேட்டர்களை நம்பி ஒரு சில பெற்றோர்கள் பெண்களையோ, ஆண்களையோ திருமணம் செய்ய விரும்புவதில்லை. பல தகவல்கள் முன்னுக்குபின் முரணாக இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அதோடு இதற்காக வாங்கும்கட்டணமும் உச்சபட்சமாக இருப்பதால் தானாகவே உறவினர்கள் தெரிந்தவர்கள் மூலம் வரன் பார்க்க களத்தில் இறங்குகின்றனர். இது போல் அவர்கள் தேடினாலும், அவர்கள் போடும் கன்டிஷன்களுக்கு எவர் ஒப்புக்கொள்கிறாரோ அவரையே மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்கின்றனர்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவரோடு திருமணம் நடக்கும்போது உறவினர்கள்,நண்பர்கள், அலுவலக பணியாளர்கள், கல்லுாரி பள்ளி காலத்து நண்பர்கள்,நண்பிகள் என பலருக்கும் திருமண அழைப்பிதழைக்கொடுப்பதால் பலரும் திருமணத்திற்கு ஆஜராக வாழ்த்துகளை தெரிவிப்பார்கள். அத்தகைய வாழ்த்துகள் இதோ.....

திருமண வாழ்த்துக்களின் வாசகங்கள் இதோ....

பத்துப் பொருத்தங்களைப் பார்த்து, ஒன்பது கோள் நிலைகளை அறிந்து, எட்டுத்திசையிலிருந்தும் உறவை அழைத்து, ஏழு அடி எடுத்து வைத்து, அறுசுவை உணவு படைத்து, பஞ்ச பூதங்களும் சாட்சியாக, நான்கு வேதங்கள் முழங்க, மூன்று முடிச்சுகளால் இரு மனங்கள் ஒன்று சேரும், ஓர் அற்புத பந்தத்தின் உறவே, திருமணம்

கருத்தொருமித்த தம்பதியராய்... சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்.. உதாரணத் தம்பதியராய்... ஊர் போற்ற உறவும் போற்ற... இணைபிரியாத வாழ்வினிலே.. நூறாண்டு காலம் வாழ்ந்திடவே... உளம் கனிந்த நல்லாழ்த்துக்கள்.. திருமண நாள் நல்வாழ்த்துகள்

இந்த பந்தத்தில் அளவில்லா இன்பத்தை பெற வாழ்த்துகிறோம்

என் உடன்பிறவா தோழன் தோழி கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது நடந்து வாழ்க்கை எனும் பாதை சீராகி இரு மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடூழி வாழ வாழ்த்துக்கள்

ஊரே வியக்கும் வண்ணம் சிறந்த அன்பு கொண்ட நேசங்களாகி திருமண வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து வாழும் தம்பதியராக இல்லறத்தில் புரிதல் உணர்வுடன் இரு நெஞ்சங்களும் சுற்றத்தாரின் வாழ்த்துகளோடு நூறாண்டு காலம் வாழ்ந்திட இந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

திருமண நாள் நல்வாழ்த்துக்கள். செல்வங்கள் கோடிகள் சேர்த்து, இலக்குகளை அன்பால் கோர்த்து, வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் தடையின்றி மின்னிட கவி பாடுகிறேன்

கண் மூடி கண்ட கனவெல்லாம் கண் எதிரே காணும் விழாக்கோலம் கனவும் நினைவாக வாழ்வில் நகரும் அன்பின் தோரணம் திருமணம்

பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால் உன் இலக்கும்

அவன் பயணமும் ஒன்றாகும் ஒருவரை ஒருவர் ஆழமாக புரிவதில் தான் வாழ்க்கையின் ரகசியம் ஒளிந்துள்ளது. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே கட்டப்பட்ட காதல் பாலத்தில் நகரும் பயணங்கள் இனித்திடும் உயிர்களின் இணைவு திருமணம்.

மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக.... நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக... என் அன்பான வாழ்த்துக்கள்...!

மஞ்சள் குங்குமம், மயக்கும் மலர்மணம்... கொஞ்சும் குழந்தையோடு, குலைவாழையென குலம் செழிக்க... நெஞ்சம் நிறைய, கொஞ்சம் குறையா குணம் கொண்டு... இப்பிரபஞ்சம் காணா எம்மன்பு சகோதரனே! வாசம் குறையா, வனப்பு குறையா அன்பு மலர்ந்திட வீசும் தென்றலாய், விடியல் வெளிச்சமாய்.... என்றும் உம் விழியில் சுமந்திடும் உம் ஒவ்வோர் உயர்விலும் உற்றாறோடு உறுதுணையாய் எப்போதும் நாங்கள்! மனதோடு உறவாடி நிறைகுடமாய் நீடூழி வாழ...

நிலவிலிருந்து கைப்பிடி மண் கொண்டு வந்தமைக்கே கும்மாளமிடுவோர் மத்தியில் அமைதியாய் ஒரு நிலவையே தன் சொந்தமாக்கி குடிப் புகுகின்றான் இவன் இன்று

மிகப்பெரிய பூஞ்சோலை ஒன்று சில மலர்களை கையில் வைத்திருக்கிறது ..... நீ என்னுடன் பூபந்து விளையாடுகிறாய் !!!

காலமெல்லாம் - ஆம் உங்கள் ஆயுள் காலமெல்லாம் இதே நெருக்கம், அன்பு, உறவு, மகிழ்ச்சி நீடித்து இல்லற வாழ்வில் ஜோடியாய் திரியும் பறவைகளாய் வாழ வாழ்த்துகிறோம்....

இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும். திருமண நாள் வாழ்த்துக்கள்

இணைபிரியா தம்பதியினராய் நூறாண்டு காலம் வாழ்க.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...

வெட்கங்கள் ஊமை மொழியாகும், ஆசைகள் உணர்வின் மொழியாகும், பாஷைகள் இதழின் மொழியாகும், காதல் திருமணத்தின் மொழியாகும்

பால் நிலவும் பகல் சூரியனும் நல் சொந்தங்களும் இனிய நட்புகளும் இணைந்து மகிழ்ந்து வாழ்த்தும்.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

மௌனங்களாலும் வார்த்தைகள் மொழிபெயர்ப்பாகி வாழ்வின் பக்கத்தில் அவைகள் கவிதையாகி ஆனந்தம் வாழ்த்திட இரு உயிர்களின் புரிதலில் தான் விடையுண்டு. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

இரு உள்ளங்கள் இணையும் ஆரம்பம் திருமணம் இணைந்த இரு கரம் அன்பினில் எழுதிய காவியம் இல்லறம்..

வாழ்க்கைப் பயணத்தின் இனிய துவக்க விழா துணையொடு கரமிணையும் வண்ணமிகு திருமண விழா

இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் மனமார்ந்த... இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லி வந்த என் உயிரே இந்நாளில் நான் என் வாழ்க்கைக்கு அர்த்தமாக வந்தாய் நீ. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

வெள்ளி பாத்திரத்தில் மோதிரம் தேடும் போட்டி உனக்கும் எனக்கும்...... உன் தங்க விரல்களை பிடிப்பதற்காகவே உன்னிடம் தோற்க பழகுகிறேன் முதன் முறையாக....!

அன்பை சுமக்கும் நீயும் அழகை சுமக்கும் அவளும் இணையும் திருமணத்தில் வாழ்த்துக்களை சுமந்து பூக்களாய் உங்கள் மீது போடுகின்றோம்.... வாழ்க வளமுடன்...

வானம் போல எங்குமே நீயும் அவளும் நீக்கமற நிறைந்து காதலில் வற்றாத நீரை போல உங்கள் வாழ்வில் புன்னகை என்றுமே நீங்காமல் இருவருக்குள்ளும் ஒற்றுமை தழைத்தோங்கி நீண்ட ஆயுசோடு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வேண்டி வாழ்த்துகிறேன். இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்.

கதிரும் கிழக்கும் போல நிலவும் ஒளியும் போல என்றும் ஒற்றுமையாய் வாழ வாழ்த்துகிறோம்

நம் திருமண நாளில் என் மனதும் உன் மனதும் இடமாற்றம் செய்யப்பட்டதை உலகிற்கே காட்டவே இந்த மாலை பரிமாற்றம்...!

மெட்டி அணிவித்து உன்னை எனக்குள் கட்டிப்போட்டு கொண்டேன்

நம் பயணிக்க இருக்கும் வாழ்வில் எதிர் கொள்ள இருக்கும் துன்பம் என்னைக் கடந்தே உன்னை நெருங்க வேண்டும் என்பதற்கே உன் கரம் பற்றி அக்னி வலம் வருகிறேன் நான்

சூரியனும் சந்திரனும் சாட்சியாய் நின்று சொந்தங்களும் பந்தங்களும் சுற்றத்தாரும் தொலை தூரத்து உறவினர்களும் நண்பர்களும் நெருக்கமான நேசங்களும் ஒன்று சேர வாழ்த்தும் பொன்னான இந்த திருமண விழா உனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமையட்டும்.....

பல தேவதைகள் கூடி வாழ்த்து சொல்ல பதுமை அவள் மணமேடை ஏற பூ மழையாய் மகிழ்ச்சி பொழிய காதல் கணவனுடன் கை கோர்க்க உன் வாழ்வில் என்றும் இன்பம் திளைக்க என் உயிர் தோழிக்கு மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்

அன்பு எனும் வடம் பிடித்து திருமணம் எனும் தேர் இழுக்கும் உங்கள் வாழ்வில் புயல் போல் வரும் துன்பங்கள் தென்றலாய் மாற வாழ்த்துகிறோம்...! மனமாற வாழ்த்துகிறோம்...

நீங்கள் இருவரும் எத்தனை ஆண்டுகளாக ஒன்றாக இருந்தீர்கள் என்பது பற்றி அல்ல.' நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறீர்கள் என்பது பற்றியது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த உங்கள் திருமண வாழ்க்கை இனிதாய் அமைய வாழ்த்துகிறேன்.

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை…

நான் உன்னைபார்த்த பின்புதான் என் வாழ்க்கையை வாழ தொடங்கினேன்.

எது நாள் வரை உனக்காக காத்திருந்திருக்கிறேன்…

மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை,அவர்கள் செய்யும் செயலை பொறுத்து வருகிறது…

ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒருநல்ல பாடத்தைக் கற்றுக்கொள்வோம்… அதுவே

நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்…

திருமணம் என்பது அழகான கலை அதில் ஆயிரம் வாழ்க்கைக் கிளை ஒன்று முறிந்தாலும் மரமே விழுந்துவிடும்

நீ என்ற சொல்லில் அவள் என்பதைப் பொருளாக்கி வாழ்ந்திடு அவள் என்ற பொருளில் நீ என்பதைச் சொல்லாக்கி வாழ்ந்திடு இதை விட ஆனந்தம் யுகத்திலில்லை

எழில் பொங்கும் உன் முகம் அதை என் விழி காணும் போதிலே வழிமாறிப் போகுதே என் வாழ்க்கையின் பாதை அப்பாதையெங்கும் என் கைகோர்த்து நடக்குதே என் தேவதை அது நீதானே

முத்துக்கள் எடுக்கும் கடலைவிட அன்புகள் நிறைந்த பேரானந்த வாழ்க்கையே பெறுமதியானது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 27 March 2024 5:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...