/* */

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாடி நின்றால் ஓடி விடாது.

Ennam Pol Valkai Quotes in Tamil-வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது.

HIGHLIGHTS

Ennam Pol Valkai Quotes in Tamil
X

Ennam Pol Valkai Quotes in Tamil

Ennam Pol Valkai Quotes in Tamil-ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக்கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.

அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட்டான் என்கிறது ஒரு ஜெர்மனிய பழமொழி.

நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும்.

உலக அறிஞர்கள் கூறிய வாழ்வியல் சார்ந்த பல தத்துவ சிந்தனைகளை உங்களுக்காக வழங்குகிறோம்

காலம் எந்தக் காயத்தையும் ஆற்றுவது இல்லை! அது நம் மனதை பக்குவபடுத்துகிறது அவ்வளவு தான்

உங்கள் சிந்தனையில் சிறிது மாற்றம் செய்தால், வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் அடையலாம்! எண்ணம் போல் வாழ்க்கை!

Life is like riding a bicycle. To keep your balance, you must keep moving — Albert Einstein

இந்த நொடி மகிழ்ச்சியாக இருப்போம்! இந்த நொடி தான் வாழ்க்கை! மகிழ்ச்சி என்ற சாவியை தேடி அலைய வேண்டாம்! அது நம்மிடம் தான் உள்ளது!

சிறு சிறு நீரோட்டங்கள் தான் நதியை உருவாக்குகிறது, சிறு சிறு போராட்டங்கள் தான் நம் வாழ்க்கை உருவாக்குகிறது

நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது கண்டிப்பாக கிடைத்தே தீரும்!

Curiosity about life in all of its aspects, I think, is still the secret of great creative people. – Leo Burnett

சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள்! ஏனெனில் அதற்கு இன்று ஒருநாள் கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக்கொள்ளும்.

வயிற்றுக்கு மட்டுமே உணவளிப்பதை சிந்திப்பவன் தன் தலையை பட்டினி போடுகிறான்.

உலகில் நரைத்த தலைகள் அதிகமாகவே உள்ளன. ஆனால் அறிவாளிகள்தான் குறைவாக உள்ளனர்.

ஏதாவது தவறு செய்துவிட்டால், ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!" என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.

Many of life's failures are people who did not realize how close they were to success when they gave up."– Thomas A. Edison

இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள்.

இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.

உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது.

"நான் ஒரு வெற்றி வீரன்' என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள்.

மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால்,

எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.

The purpose of our lives is to be happy. — Dalai Lama

உண்மைக்காக எதையும் துறக்கலாம்;

ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே

தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான்.

அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.

பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.

Life is what happens when you're busy making other plans. — John Lennon

நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது.. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது.. நீ துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.

புகழைப் பொருட்படுத்தாதீர்கள், ஆனால் புகழ் பெறுவதற்கு தகுதி உடையவராக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இலக்குகளை அடைய முடியாது என்று தெரியும் போது, நமது செயல்பாட்டு முறையினை சரி செய்ய வேண்டுமே தவிர இலக்குகளை சரி செய்யக்கூடாது.

துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறமோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தை கடந்து விட்டோம் என்பது உறுதி.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 27 March 2024 5:26 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்