/* */

கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?- வங்கி வட்டியை விட இதில் அதிகம்

Kisan Vikas patra scheme in Tamil - பண மடங்கு இரட்டிப்பு, வங்கி வட்டியை விட அதிகம் மட்டுமல்லாது வரிச்சலுகை உள்ளிட்ட வசதிகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது இந்திய தபால் துறையின் கிசான் விகாஸ் பத்திரம் திட்டம்.

HIGHLIGHTS

கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?- வங்கி வட்டியை விட இதில் அதிகம்
X

Kisan Vikas patra scheme in Tamil - கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?

Kisan Vikas patra scheme in Tamil - பண மடங்கு இரட்டிப்பு, வங்கி வட்டியை விட அதிகம் மட்டுமல்லாது வரிச்சலுகை உள்ளிட்ட வசதிகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது இந்திய தபால் துறையின் கிசான் விகாஸ் பத்திரம் திட்டம்

இந்திய தபால் துறையில் பல முதலீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்கள் இருந்த போதிலும், அதில் மிகவும் பிரபலமான திட்டம் என்றால் கிசான் விகாஸ் பத்திர திட்டம் தான் ஆகும்.

தபால் துறையில் இருக்கும் PPE, NSE திட்டங்கள் போலவே கிசான் விகாஸ் பத்திர திட்டத்திலும் பல நன்மைகளும் மற்றும் சில இடர்களும் உள்ளது. பொதுவாக சிறு முதலீட்டாளர்கள் இத்திட்டத்தை வங்கி வைப்பு நிதிகளுடன் ஒப்பிடுவார்கள் எனவே சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான திட்டமாக கிசான் விகாஸ் பத்திரம் உள்ளது.

Kisan Vikas patra scheme in Tamil - இது அரசின் ஒரு பாதுகாப்பான, நிரந்தர வருவாய் தரக்கூடிய திட்டம் என்பதால், இதில் சந்தை அபாய பயம் அறவே இல்லை.

இரட்டிப்பாகும் முதலீடு : குறிப்பிட்ட காலத்தில் உங்களின் முதலீடு இரட்டிப்பாகும். மேலும் இந்த திட்டத்திற்கு காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும். எனினும் இந்த திட்டத்தின் நல்ல அம்சமே நீங்கள் இணையும்போது கிடைக்கும் வட்டியை போல, இறுதி வரையிலும் கிடைக்கும்.

எவ்வளவு முதலீடு செய்யலாம்? : இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம், 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களது வருமானத்திற்கான ஆவணத்தினை நீங்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள், அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து இரட்டிப்பாகிறது.

தகுதிகள் : அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய 18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும், இந்த திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் ஆவர். இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கு தேவையில்லை. ஒரு குழந்தை அல்லது முதியவர்களுடனும் இணைந்தும் முதலீடு செய்யலாம். அப்படி இணையும் போது குழந்தையின் வயது, பாதுகாவலரின் பெயர் அல்லது பெற்றோர் பெயரை மறக்காமல் கொடுக்க வேண்டும்.

வரிச்சலுகை : அரசின் இந்த கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்குத் தங்களது பங்களிப்பு மற்றும் லாபம் என இரண்டுக்கும், மற்ற திட்டங்களை போல் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை. எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகு எடுக்கும்போது டிடிஎஸ் விலக்கு அளிக்கப்படுகிறது.

Kisan Vikas patra scheme in Tamil - என்னங்க கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் சேர புறப்பட்டுட்டீங்களா?

Updated On: 20 July 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  2. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  4. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  6. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  7. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  8. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  9. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  10. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு