/* */

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் - இது பாரதி சொன்னதுங்க..

Best Humanity Quotes in Tamil-மண்ணில் மலர்ந்து விட்ட ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்தும் உயிர்களே! அதனால்தான் ' காக்கை குருவி எங்கள் ஜாதி ' என்று மகாகவியால் பாட முடிந்தது.

HIGHLIGHTS

Best Humanity Quotes in Tamil
X

Best Humanity Quotes in Tamil

Best Humanity Quotes in Tamil-மனித நேயமிக்க மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் வள்ளுவர்,

"பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன் "

என்று கூறியுள்ளார்,

விலங்குகள்கூட பல நேரங்களில் தம் இனத்துக்காகப் போராடி தங்களுக்கு மனிதநேயம் இருக்கிறது என மெய்பிக்கப் போராடும் காட்சிகளைக் நாம் கண்டிருக்கிறோம். அதுவும் இல்லாத மனிதர்களை என்னவென்பது?

சந்திரனில் முதன் முதலாக கால் வைத்ததும் என்ன நினைத்தீர்கள் என்று ஆம்ஸ்ட்ராங்கிடம் கேட்கப்பட்டதாம். அதற்கு ஆம்ஸ்ட்ராங், "எத்தனையோ லட்சக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள சந்திர மண்டலத்தில் இடம் பிடித்த மனிதனால் பக்கத்து வீட்டில் இருக்கும் மனிதன் மனதில் இடம்பிடிக்க முடியவில்லையே என வருத்தப்பட்டேன்" என்று மனித யம் இல்லா நிலையில் மனிதர்கள் வாழ்வதைச் சுட்டிக்காட்டி வருந்தினாராம்.

மனித நேயம் என்றால் என்ன என்று கேட்டால் சக மனிதர்கள்மீது இரக்கம் காட்டுவது, அதாவது உயிர்கள்மீது கருணை காட்டுவது என்பது எல்லோரும் சொல்லும் செய்திதான்.

அந்தக் கருணையும் இரக்கமும் உள்ளதால்தான் அன்னை தெரசாவையும் அப்துல் கலாமையும் காந்தியடிகளையும் மனிதநேயம் மிக்க மாமனிதர்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

விரல்விட்டு எண்ணும்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித நேய மாந்தர்கள் நடமாடிக் கொண்டிருப்பதால் மனிதம் தழைத்ததாகுமா?

இந்த பதிவில் மனித நேயம் குறித்து அறிஞர்களும், தலைவர்களும் கூறியதை உங்களுக்கு தொகுத்து அளித்துள்ளோம்

மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை இழக்கக் கூடாது. மனிதநேயம் ஒரு கடல் போன்றது; கடலின் சில துளிகள் அழுக்காக இருந்தால், கடல் அழுக்காகாது - மகாத்மா காந்தி

நான் மனிதகுலத்தை நேசிக்கிறேன், ஆனால் நான் மனிதகுலத்தை ஒட்டுமொத்தமாக எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ, அவ்வளவு குறைவாக மனிதனை நேசிக்கிறேன் என்பதை நான் ஆச்சரியப்படுகிறேன் - தஸ்தாயெவ்ஸ்கி

ஒற்றை மரணம் ஒரு சோகம்; ஒரு மில்லியன் இறப்புகள் ஒரு புள்ளிவிவரம் - ஜோசப் ஸ்டாலின்


"மக்கள் படித்தவர்களாகிவிட்டனர் ஆனால் மனிதர்களாக மாறவில்லை." – அப்துல் சத்தார் எதி

"அன்பும் இரக்கமும் தேவைகள், ஆடம்பரங்கள் அல்ல. அவர்கள் இல்லாமல் மனிதகுலம் வாழ முடியாது. - தலாய் லாமா

மனிதகுலத்தைப் பற்றி அதிகம் கற்பிப்பவர்கள் எப்போதும் மனிதர்கள் அல்ல. – டொனால்ட் எல். ஹிக்ஸ்

"மனிதகுலத்தை உயர்த்தும் அனைத்து உழைப்பும் கண்ணியமும் முக்கியத்துவமும் கொண்டவை. அவை கடினமான சிறப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்." - மார்ட்டின் லூதர் கிங்

"மனித இரக்கம் நம்மை ஒருவரை மற்றவருடன் பிணைக்கிறது - பரிதாபமாகவோ அல்லது ஆதரவாகவோ அல்ல, ஆனால் நமது பொதுவான துன்பங்களை எவ்வாறு எதிர்கால நம்பிக்கையாக மாற்றுவது என்பதைக் கற்றுக்கொண்ட மனிதர்களாக." - நெல்சன் மண்டேலா

"தன்னலமற்ற சேவை மட்டுமே ஒருவரது இதயத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனிதகுலத்தை எழுப்புவதற்குத் தேவையான வலிமையையும் தைரியத்தையும் தருகிறது." – சாய்பாபா

ஒரு மனிதனுடனான ஒவ்வொரு தொடர்பும் மிகவும் அரிதானது, மிகவும் விலைமதிப்பற்றது, அதை ஒருவர் பாதுகாக்க வேண்டும்

வாழ்க்கை வாழ வேண்டும், கட்டுப்படுத்தக்கூடாது; சில தோல்விகளை எதிர்கொண்டு தொடர்ந்து செல்வதன் மூலம் மனிதநேயம் வெற்றி பெறுகிறது.

உலகில் மிகவும் தெய்வீகமானது, சக மனிதரிடம் நீங்கள் காட்டும் அன்பும் பரிவும் தான்

பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட, பழகிய மனிதர்களிடம் இருப்பதில்லை,

பொருட்களை பயன்படுத்துங்கள், நேசிக்காதீர்கள்

மனிதர்களை நேசியுங்கள், பயன்படுத்தாதீர்கள்

மனிதனாய் வாழ்வதை விட மனித நேயத்துடன் வாழ்வதே சிறப்பு

மனிதர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டியது குறைகளை மட்டுமே தவிர அவர்கள் செய்த குற்றங்களை அல்ல

அன்பும் இரக்கமும் தேவைகள், ஆடம்பரங்கள் அல்ல. அவர்கள் இல்லாமல், மனிதகுலம் வாழ முடியாது.

நீங்கள் மக்களைப் பொருட்களாகக் கருதத் தொடங்கும் போது தீமை தொடங்குகிறது

கண்ணுக்கு முன் தெரியும் மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்குத்தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை

மக்கள் தொகை பெருக்கத்தால் இல்லங்கள் நெருக்கமாகி விட்டன. ஆனால் உள்ளங்களோ துாரமாகி விட்டன. அருகருகே இருந்தாலும் அந்நிய தேசத்தில் வாழ்பவர்களைப் போல வாழ்கிறோம். திறக்கப்படாத வீட்டுக் கதவுகளைப் போலவே நம் மனங்களும் பூட்டியே கிடக்கின்றன. அதில் அன்பும் , நேயமும் , உதவும் எண்ணமும் மாட்டிக்கொண்டிருக்கின்றன. எங்கோ இருப்பவர்களைக் கைகாட்டிவிட்டு, இருக்கும் இடத்தில் மனிதத்தைத் தொலைத்துவிட்டு வெறுமனே மனிதன் என்ற போர்வையில் நடமாடிக் கொண்டிருக்கிறோம்.

மனிதர்கள் மனதில் இடம் பிடிப்பவன்தான் மனிதநேயம் மிக்க மனிதனாக இருப்பான். மனிதனாய் இருப்போம். மனிதனை நேசிப்போம். மனிதத்தைப் போதிப்போம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 5 April 2024 6:12 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!