/* */

தூங்கச்செய்வது கூட சில நம்பிக்கைத்தரும் வார்த்தைகளே..! இமைகள் மூடி உறங்குங்கள்..!

Good Night Quotes in Tamil-வாழ்க்கையில் எதை இழந்தாலும் நம் நம்பிக்கையை இழக்கக்கூடாது. நம்பிக்கையே வாழ்க்கை. நம்பிக்கை தரும் வார்த்தைகளை அள்ளித் தெளியுங்கள்.

HIGHLIGHTS

தூங்கச்செய்வது கூட சில நம்பிக்கைத்தரும் வார்த்தைகளே..! இமைகள்  மூடி உறங்குங்கள்..!
X

good night quotes tamil-இனிய இரவு வணக்கம் மேற்கோள்கள்.( கோப்பு படம்)

Good Night Quotes in Tamil-எல்லோருக்குமே நம்பிக்கை வாழ்வில் அவசியம். இறை நம்பிக்கை கூட மனிதனின் நம்பிக்கையை வளர்க்கும் ஒரு மாற்று வழி. மனம் நம்பிக்கை பெறும்போது இறைவன் நம்மோடு இருந்து நமக்கு வழி காட்டுவார் என்ற நேர்மறை எண்ணம் ஏற்பட்டுவிடும். அந்த நம்பிக்கையே பல காரியங்களை செய்வதற்கான தூண்டுகோலாக அமையும். காலி எழுந்து நம்பிக்கையுடன் ஒருவருக்கு காலை வணக்கம் சொல்வதும், இரவானால் நம்பிக்கையுடன் அடுத்த நாளை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையுடன் உறங்குவதற்கும் வணக்கம் சொல்வது சம்பிரதாயம் ஆகிவிட்டது. கூடவே நம்பிக்கை தரும் வார்த்தைகளுடன் கூறும்போது அதற்கான மதிப்பும் கூடுகிறது.


இதோ உங்களுக்காக இரவு வணக்கம் சொல்ல நம்பிக்கைத் தரும் மேற்கோள்கள்.

பயந்தால் வருவது தோல்வி. துணிந்தால் வருவது வெற்றி...எது உனக்கு வேண்டும் தோழா..? முடிவு செய். இனிய இரவு வணக்கம்.

இருப்பதைக் கொண்டு சந்தோசமடையாதவரை சந்தோஷம் யாருக்கும் நெருங்குவதில்லை..! இனிய இரவு வணக்கம்

தூக்கம் ஒரு பெரிய கொள்ளையன். பாதி வாழ்நாளை கொள்ளையடித்துவிடுகிறான். இனிய இரவு வணக்கம்

வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்ல. அந்த உறவை வாழ்நாள் முழுவதும் தக்கவைத்து அன்பாக இருப்பதே முக்கியம்...! அன்புடன் இனிய இரவு வணக்கம்

ஒரு நாள் உனக்கு பிடிச்ச மாதிரி உன் வாழ்க்கை மாறும். அது நாளையாகக் கூட இருக்கலாம்..! நம்பிக்கையே வாழ்க்கை.. இனிய இரவு வணக்கம்.

இன்று கை கொடுக்க யாரும் இல்லையே என்று கவலைப்படாதே. நாளை உனக்காகக் கைதட்ட இந்த உலகமே காத்திருக்கிறது. உன் திறமை மீது நம்பிக்கைக் கொள்..! இனிய இரவு வணக்கம்

திருந்திய ஒருவனை உன்னால் மன்னிக்க முடியவில்லை என்றால், உனக்கான தகுதியை நீ இலக்கிறாய்..! அவனது பார்வையில் நீயும் ஒரு குற்றவாளிதான். இரவு வணக்கம்

உயர்வான ஒரு விஷயத்தை எளிய முறையில் கூறுவதே அறிவின் லட்சணம். இனிய இரவு வணக்கம்

இனிய இரவு வணக்கம். இந்த இரவு முடியும்போது நம் கவலைகளும் முடிவதாக இருக்கட்டும். மலரும் காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும்..!

உனக்கும் எனக்குமான அன்பு தொடரும் வரை நமது நட்பும் தொடரும். இரவு வணக்கம்என்னுடன் அன்பாய் பேச நீ எனக்கு வேண்டும். ஆசையாய் கோபிக்கவும் நீ வேண்டும். தவறுகளை சுட்டிக்காட்ட நீ வேண்டும். என் பெருமைகளை நிலை நாட்டவும் நீ வேண்டும். இரவு வணக்கம்.

முடியும் வரை முயற்சி செய். உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்ததை சாதித்து முடிக்கும் வரை. இனிய இரவு வணக்கம்.

என் இதயமாக நீ இருப்பது கூட எனக்கு சுமையாக இருக்கிறது. ஏனெனில் துடிப்பது நீ அல்லவா..? இனிய இரவு வணக்கம்.

எங்கோ இருந்து உனக்காக நான் உழைத்தாலும், நலமாய் வாழவே தனித்திருக்கிறோம். அன்பான நினைவுகளை நினைத்திருப்போம். நாளைய விடியலுக்கு காத்திருப்போம். அன்புடன் இரவு வணக்கம்

குளிர் தென்றல் காற்றில் நிலவு இளைப்பாறும்..! நிலவின் அழகில் மேகக்கூட்டம் கவிதைகள் பாடும். அன்பு இதயங்களின் வருகையால் மரங்கள் மகிழ்வுறும். பூக்களைத்தூவி வாழ்த்துக்கூறும்..! கனவுகளால் நிறையும் விழிகளை இயற்கை தாலாட்டி உறங்கவைக்கும்..! இனிய இரவு வணக்கம்.

வீழ்ந்தாலும், வீழ்ந்தபின் எழுந்து முட்டி மோதி உனை காண மீண்டு வந்தேன், இனிய தென்றலாக..! இனிய இரவு வணக்கம்

பிரச்னைகள் நம் கை மீறும்வரை காத்திருக்கவேண்டாம். தீர்க்க முயற்சி செய்..! நம்பிக்கையோடு இருக்க முயல்வோம்..! நல்லிரவாகட்டும். இனிய இரவு வணக்கம்.

பகல் முழுவதும் இமைத்து, இமைத்து களைத்துப் போன இமைகளுக்கு சிறிது ஓய்வு கொடுப்போம். உறங்க விடுங்கள்..! இனிய இரவு வணக்கம்

இரவென்பது ஓய்வெடுக்கக் கிடைத்த ஒரு அழகான பரிசு. அந்த அழகிய பரிசை திறந்துப் பார்க்க உங்கள் இமைகளை மூடியே ஆக வேண்டும். இனிய இரவாகட்டும்.

நீயும் நானும் நம் காதலைத் தொடர இந்த இரவு தன்னை நீட்டித்துக்கொள்ளாதா என்று இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன், இந்த இரவு விடியாமல் இருக்க. இனிய இரவு வணக்கம்


நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும். எனில் கசப்பான நிலை உனக்கு வாராது. இனிய இரவு வணக்கம்

முயலும் ஒவ்வொன்றும் வெல்லும். முயலும் வெல்லும்;ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமை என்றும் வெல்லாது. இனிய இரவு வணக்கம்

எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மை இருக்கவேண்டும். உண்மை இருந்தால் மட்டுமே நாம் விலகிப் போனாலும் அது நம்மை விரும்பித் தேடி வரும்..! இனிய இரவு வணக்கம்

அந்தி வானம் சிவக்கும்போது அவள் ஒளிர்கிறாள்..! அடிவானில் மறைந்திருந்து நிலாவைப்பார்த்து கண்சிமிட்டி முத்தமிட்டு நிலவை வரவேற்கிறான் கதிரவன்..! இரவெனும் கவிதையின் நாயகி அவள்..! இனிய இரவு வணக்கம்.

ஏழையாய் இருக்கும்போது, இன்பம் காணாத மனிதன் செல்வந்தனாய் ஆனபின்னும் இன்பம் காண மாட்டான். இனிய இரவு வணக்கம்.

யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே..! ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும். உன் இயல்பை எப்போதும் மாற்றிக்கொள்ளவேண்டாம்..! இனிய இரவு வணக்கம்

பல மணி நேரம் பேசும் உதடுகளை விட, சில நிமிடம் நினைக்கும் இதயத்திற்குத் தான் பாசம் அதிகம். இரவு வணக்கம்

பிரிவு என்பது யாராலும் மறுக்க முடியாத வலி. ஆனால், நினைவு என்பது யாராலும் திருட முடியாத பொக்கிஷம். நினைவுகளில் ஆழ்ந்து நிம்மதியாக இமை மூடு. இரவு வணக்கம்

வாழ்க்கையில் துன்பங்கள் அதிகமாக வரவில்லை என்றால் பல கஷ்டங்களின் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியாமலேயே போய்விடும்... இனிய இரவு வணக்கம்.

மகிழ்ச்சி தரும் நிஜங்கள் பல அருகில் இருந்தாலும் கூட உன் அருகாமை தரும் மகிழ்வை அவை தருவதில்லை. இனிய இரவு வணக்கம்.


உலகுக்கு ஒளி தரும் சூரியனே உறங்கச் சென்றுவிட்டது. என் உயிருக்கு ஒளி தரும் நட்பே நீ மட்டும் ஏன் உறங்காமல் விழித்த்திருக்கிறாய்..? போய் கண் உறங்கு. கனவில் மீண்டும் சந்திப்போம். இனிய இரவு வணக்கம்

ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் எதிர்பார்ப்புகள் விரிந்து கிடக்கின்றன..! ஆனால் அந்த நாட்களின் முடிவிலும் ஒவ்வொரு அனுபவம் பாடங்களாக..! இதுதான் வாழ்க்கை. இனிய இரவு வணக்கம்

தூக்கம் வருகிறது. இமைகள் மூடி உறங்குவோம். கனவில் வா மீண்டும் சந்திப்போம். இனிய இரவு வணக்கம்.

நேற்று வந்த மேகங்கள் இன்று வானில் கிடையாது. இன்று வந்த சோகங்கள் நாளை நம்மைத் தொடராது. நம்பிக்கையுடன் விழிமூடி ஓய்வெடு. இனிய இரவு வணக்கம்

பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகம் காயப்படுகிறான். அதிகம் நேசிப்பவனிடம் அன்பைத்தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. இனிய இரவு வணக்கம்

தேவையில்லாமல் நாளை நடக்கப் போவதை எண்ணி இக்கணத்தை தொலைப்பதால் வாழ்க்கையை தொலைப்பதற்கு சமம். நாளை என்பது வினா..? இன்று என்பது நிஜம். நிஜத்தை அனுபவி..! இனிய இரவு வணக்கம்

இரவை ரசிப்போம்..நிலவை ரசிப்போம். இயற்கையோடு மனதை இணங்கச் செய்வோம்..! இனிய இரவு வணக்கம்.

இழக்க விரும்பாவிட்டாலும் கூட வாழ்க்கையில் சிலவற்றை இழந்து தான் ஆக வேண்டி உள்ளது. இனிய இரவு வணக்கம்

தூங்கும்போது மட்டுமே அனைத்து கஷ்டங்களும் மறந்து போகின்றன. அதனால் உறக்கம் கூட கடவுள் கொடுத்த வரமே..! இனிய இரவு வணக்கம்.

கண்கள் உறங்கும் நேரம் கனவுகள் விழித்துக் கொள்ளும் தருணம். நித்திரையைத் தேடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய இரவு வணக்கம்


கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும் என்று தெரிந்தும் கண்கள் கனவு தேடி பயணிக்கிறது. இனிய இரவு வணக்கம்

கீழ் இமையை மேல் இமை தொட்டு தொட்டு ரசிப்பதற்கு அனுமதித்த நாம் கொஞ்ச நேரம் கட்டி அணைக்க அனுமதிப்போம். அவைகள் ஒன்று கூடி இருக்கட்டும்..! இனிய இரவு வணக்கம்

சந்திரனே உன் வெளிச்சத்தை சற்றுக் குறைத்துக் கொள், காற்றே நீ வீசும் வேகத்தைச் சற்று குறைத்துக் கொள், பூமியே நீ சுற்றும் வேகத்தை சற்று குறைத்துக் கொள், பூவே நீ திறக்கும் ஓசையினை சற்று குறைத்துக் கொள், நான் கூட உங்களிடம் ரகசியமாகவே கூறுகிறேன், இனிமையாய் என் இனிய நட்புகள் உறங்கட்டும். இனிய இரவு வணக்கம்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 18 April 2024 6:28 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  4. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  7. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  8. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  9. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  10. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...