/* */

Family Kavithai in Tamil: குடும்பம் என்பது மகிழ்ச்சியான தருணம்.. சில கவிதைகள்

Family Kavithai in Tamil: குடும்பம் என்பது மகிழ்ச்சியான தருணம்.. சில கவிதைகளை பார்ப்போம் வாங்க..

HIGHLIGHTS

Family Kavithai in Tamil: குடும்பம் என்பது மகிழ்ச்சியான தருணம்.. சில கவிதைகள்
X

குடும்பம் என்பது ஒரே வீட்டில் வசித்து, ஒரே சமயலறையில் சமைத்துப் சமைத்து பகிர்ந்துண்டு வாழ்கிற வாழ்தைகயை குறிப்பதாகும். குடும்பத்தில் தனி குடும்பம், சிறிய குடும்பம், கூட்டு குடும்பம் என்று பல வகை இருக்கிறது. எந்த ஒரு பிரச்சனை மனதில் சோகம் இருந்தால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் அமர்ந்து பேசினால் போதும் மனதானது அமைதி நிலை அடையும். குடும்பம் என்பது மகிழ்ச்சியான தருணம். இந்த பதிவில் குடும்பம் பற்றிய கவிதை (family quotes in tamil) வரிகளை இமேஜஸ் மூலம் பார்க்கலாம் வாங்க..!

குடும்பம் என்பது குருவி கூடு

பிரிப்பது எளிது

இணைப்பது கடினம்

ஆனந்தமாக வாழ்க்கை வாழ

ஆடம்பரம் தேவை இல்லை

அன்பானவர்கள் நம்முடன்

இருந்தாலே போதும்


குடும்பம் என்பது

கடவுள் நமக்காக பூமியில்

ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்

அதை சொர்க்கமாக்குவதும்

நரகமாக்குவதும்

நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது


குடும்பம்

அன்பின் பிறப்பிடம்

மகிழ்ச்சியின் இருப்பிடம்

பாசத்தின் வளர்ப்பிடம்

பக்குவத்தின் காப்பிடம்


மண்ணில் இறக்க போகிறோமே தவிர

மீண்டும் மண்ணில் ஒன்றாக

யாரும் பிறக்க போவதில்லை

வாழும் போது பிரியாமல்

சொந்த பந்தங்களோடு இருப்பதும்

ஓர் வரம்


எல்லா நேரங்களிலும் மனம் விட்டு பேசுவதற்கும்,

அன்பு காட்டுவதற்கும், ஓர் உறவு கிடைத்து விட்டால்,

வாழும் வாழ்க்கை சொர்க்கம் தான்.


உங்கள் மனைவியை அடுத்தவரிடம் அறிமுகப்படுத்தும் பொழுது, 'She is my wife!" ன்னு சொல்றதுக்கு பதிலாய், "She is my life!" ன்னு சொல்லுங்கள். வாழ்க்கை சந்தோசமாய் நகரும்!


புரிந்து நடக்க ஒரு துணையிருந்தால், சரிந்து விழாமல் வாழ்ந்திடலாம்! வாழ்க்கை முழுவதும்!


அழகான அறிவார்ந்த பெண் மனைவியாக அமைவது அதிர்ஷ்டம் மட்டுமே! அமைந்த மனைவியை ஆயுள் வரை கண் கலங்காமல். அழகாக வைத்திருப்பதே ஆண்மை!


கடந்த காலத்தை மறக்கடிக்கும் அளவுக்கு அன்பு செய்யும் துணை கிடைப்பது வாழ்வின் வரம்.


நீயா நானா என்பதல்ல! நீயும் நானும் என்பதே! இல்வாழ்க்கை


குடும்பம் என்பது குருவி கூடு. பிரிப்பது எளிது, இணைப்பது கடினம்.


"உனக்காக எதையும் இழப்பேன்" என்று சொல்லும் உறவை விட, "நீ எதை இழந்தாலும் உன்னுடன் நான் இருப்பேன்" என்று சொல்லும் உறவே சிறந்த வரம்.


சில உறவுகள் உடன் இருந்தாலே போதும்! மனசுக்கு சந்தோஷமாகவும்! நமக்கு தெம்பாகவும் இருக்கும்!


மிகப்பெரிய சொத்து எதுவென்றால்: எந்த பிரச்சினையாக இருந்தாலும் "கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்லும் ஒரு உறவு தான்.


ஆசையை பகிரவோ இல்லை அன்பை பொழியவோ! ஆறுதலுக்காகவோ இல்லை அணைத்து உறங்கவோ! புரிந்து கொண்ட புனிதமான ஓர் உறவு தேவை அனைவருக்கும்!


நீ யாருக்காக வாழ்கிறாயோ அவர்களுக்காக பலமுறை விட்டு கொடு. உனக்காக யார் வாழ்கிறார்களோ அவர்களை ஒருமுறை கூட விட்டு கொடுக்காதே.


பணமும் புகழும் மரத்தின் கனிகள்! நட்பும் உறவும் வேர்கள்! கனிகள் இன்றி வாழ இயலும்! வேர்கள் இன்றி வாழ இயலாது!


வாழ்க்கை என்ற புத்தகத்தில் சில உறவுகள் பாடம் படித்து, கிழித்து, கசக்கி எறிய வேண்டியவை! சில உறவுகள் படித்து, பிடித்து, பக்குவப்படுத்தி, பத்திரப்படுத்தி, மடித்து வைக்க வேண்டியவை!


நீ காட்டும் அன்பு உலகை மாற்றிடாது. ஆனால் நீ விரும்பும் உறவுக்கு உன்னை உலகமாக மாற்றிடும்.


நல்லதொரு குடும்பம்

பல்கலைக்கழகம்

இங்குதான்

தோல்வியின் போது

தன்னம்பிக்கையும்

வெற்றியின்போது

நிதானத்தையும்

கற்றுக்கொடுக்கப்படுகிறது

பெற்றோர்களால் ....

Updated On: 22 Oct 2023 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்