/* */

வேஷம்போட்டு ஏமாற்றும் போலி ஆசாமிகளை நம்பாதீங்க.... படிச்சு பாருங்க

Fake People Quotes in Tamil - ஏங்க பொருட்களில்தான் போலிகளைப் பார்த்திருக்கிறோம்.மனுஷாளிலுமா? என கேட்கீறீர்களா...ஆமாங்க.. ஆமாம்.. சுயநலத்துக்காக இரட்டைவேடம் போடுபவர்கள் அதிகமாகிவிட்டனர்.

HIGHLIGHTS

Fake People Quotes in Tamil
X

Fake People Quotes in Tamil

Fake People Quotes in Tamil

Fake People Quotes in Tamil

உலகில் தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் அன்றாடம் ஒவ்வொருவரையும் சந்தித்து உஷாராக வாழ்வதன்பெதே பெரிய சாதனையாக உள்ளது. காரணம் கேட்கிறீர்களா? அந்த அளவுக்கு மோசடி, பித்தலாட்டம், புறம் கூறுதல், சொத்துக்கு ஆசைப்பட்டு உறவுகளே விபரீத செயல்களில் ஈடுபடுதல், கொலை, கொள்ளை என நாடு போய்க்கொண்டிருக்கும் நிலையில் நாம் எப்படி உஷாராக வாழ்வது என்பதையே இக்கால இளைய தலைமுறையினருக்கு நாள் முழுக்க கிளாஸ் எடுக்க வேண்டும்போல் தெரிகிறது.

காரணம் இக்கால இளைய தலைமுறைகள் அனைவருமே யாருடனும் அதிகம் பேசுவதில்லை. அவர்கள் பேசுவது முழுக்க செல்போனுடனும், லேப்டாப்புடன்தான். ஆசை, பாசம், ஏமாற்றம் இவையெல்லாம் அவர்களுக்கு தெரியுமா? என்பதே சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. காரணம் என்னவெனில் நாள்முழுக்க செல்போனுடனும், லேப்டாப்புடனும் வேலை செய்யும் அவர்கள் மனசு பெருமளவில் பாதிப்படைகிறது. அதாவது நிரந்தர ஸ்ட்ரெஸ்சில்தான் எப்போதுமே காணப்படுவார்கள். அவர்களை சொல்லி குற்றம் இல்லை. அவர்கள் பார்க்கும் வேலை அப்படித்தான். லட்சக்கணக்கில் சம்பளத்தினை கொடுத்துவிட்டு பிழிந்து எடுக்காமல் என்ன செய்வார்கள்.

போலி மனிதர்கள்

நம் நாட்டில் போலி மனிதர்களை எப்படி அடையாளம் காணுவது? ஒண்ணுமே இல்லீங்க... போலிமனிதர்கள் என்பதெல்லாம் தனியா இறக்குமதியெல்லாம் ஆக மாட்டாங்க. உங்களுக்கு அருகாமையில் இருப்பவர்களே போலிமனிதர்களாக மாறிவிடுகிறார்கள். காசு பணத்துக்கு ஆசைப்பட்டு உங்களுடனே இருந்துகொண்டு எதிர்முகாமுக்கு ஸ்பை வேலை பார்ப்பார்கள். அது உங்களுக்கே பல நாட்கள் கழித்துதான் தெரியவரும். நாம் எப்படி திட்டம் போட்டாலும் கவிழ்க்கிறார்களே? என நீங்கள் டீப்பாக யோசிக்கும்போதுதான் அந்த கறுப்பு ஆடு எது என உங்களுக்குதெரியவரும். எல்லாம் பணம் செய்யும் வேலைதான்.பல நிறுவனங்களில் இதுபோல் எம்டிக்கு அருகாமையில் உள்ளவர்கள் டபுள் கேம் ஆடி இரண்டு சம்பளத்தினை வாங்கிக்கொண்டிருக்கின்றனர். அதாவது அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஒரு சம்பளம், எதிர்முகாமுக்கு ஸ்பை வேலைபார்ப்பதால் அங்கிருந்து தானாக மாதாமாதம் அவர்களுடைய பேங்க் அக்கவுண்டுக்கு. இவையெல்லாம் நம்பிக்கை துரோகம்தான்.

ஆனால் நியாயம், தர்மம், நீதி இவைகள் எல்லாம் இதுபோன்றவர்களால் கெட்டுவிட்டதுஎன்று கூட சொல்லலாம். உண்மைக்கே வேலை இல்லீங்க... பொய்க்கு தான் நல்ல எதிர்காலம் உள்ளது. சரியான ஆட்கள் பல நிறுவனங்களுக்கு தேவையில்லை. எல்லா வேலையும் பார்க்ககூடிய ஆட்கள்தான் தேவை போல் சமூகத்தின் நிகழ்வுகள் நடக்கிறது. என்ன செய்ய?

உன்னிடம் அன்பாக பேசும் அனைவருமே, உண்மையாக உன்மீது அன்பு வைத்துள்ளார்கள் என நினைக்காதே... அந்த போலி அன்பிற்கு பின்னால் அவர்களுக்கான தேவை உன்னிடம் இருக்கிறது என்பதை நீ மறந்துவிடாதே.

தேவைக்கு தான் நம்மை தேடுகிறார்கள் என்பது தெரிந்த பின்பும், மனம் அவர்களை தேடுவதை நிறுத்தி கொள்ளவில்லை!

வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும், சிலரிடமிருந்து விலகி இருப்பதும் நல்லது. சுயநலத்துக்காக அல்ல, நம் தன்மானத்துக்காக.

படிப்பு கற்றுத்தருவதை விட சிலரின் நடிப்பு சிறப்பாக கற்றுத்தரும் வாழ்க்கையை!


முகத்திற்கு முகமூடி போடுபவர்களை விட, அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம் தான்!

உன்னை அனுசரித்துப் போகிறவர்களை, முட்டாள் என்று நினைத்து விடாதே! அனுசரித்துப் போகும் உறவு கிடைப்பதெல்லாம் பெரிய புண்ணியம்!

தவறான நபரை கடந்த காலத்தில் சந்தித்து, நிகழ்காலத்தில் காதலைத் தவறென சொல்லாதீர்கள்!

நல்லது செய்து கெட்டவன்னு பேர்வாங்குறதவிட, கெட்டவன் என்ற முகமூடிக்குள், நல்லவனாகவே இருக்கலாம்!

நீ கேட்டு வாங்கும் அன்பு, கடைசி வரை வருவதில்லை!

சில உறவுகள் நம்முடன் இருப்பதை விட, விலகிச் செல்வதே சிறந்தது!

கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால், அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது!

முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே கிடைத்து விடும்!

அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்!!

பணம் புகழ் என்று எவ்வளவு இருந்தாலும், பெரியவர்களை மதிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம்!

பொய்களை எளிதாக நம்பும் இந்த உலகம்... உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும்!

உண்மையான காதலனுக்கு கிடைத்த பரிசு, துரோகி என்ற பெயர் மட்டுமே!

கட்டாயத்தினால் காட்டப்படும் அன்பு, கண்டிப்பாக நிலைக்காது!

ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்; ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாகிவிடாதீர்கள்...

நாம் சில நேரங்களில் காட்டும் உண்மையான அன்பு போலியாக நேசிப்பவர்களை காட்டி கொடுத்துவிடுகிறது!

அளவோடு பழகணும், எல்லைகள் தெரிந்திருக்கணும் என்பதெல்லாம் தெருவில் வீசப்பட்ட பின்னர்தான் அறிவுக்கு தெரியவரும்!

தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசம் இருக்கும்.

சிரிப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள், அழுவதற்கு உடன் இருப்பவர்கள் கற்றுக் கொடுப்பார்கள்!

நாம் தேடிச்சென்றுபேசி பழகிய உறவு, நம்மை தேடுவது இல்லை!

தோற்றுவிட்டேன். போலியான உறவுகளின் செயல் உண்மை என்று எண்ணி!

அளவு கடந்த அன்பின் முடிவு, கவலை, கண்ணீர் ஏமாற்றம்.

எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. நமக்குதான் எவ்வளவு பட்டாலும் புரியறது இல்ல.

நிச்சயம் இல்லா ஒன்றின் மேல், அதீத நேசம் வைத்துவிடாதே! நிரந்தரமான நினைவுகளைக் கொடுத்துவிட்டு, உன் இரவுகளை களவாடிச் சென்றுவிடும்!

இங்கு பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றுதான்! அவர்கள் செய்தால் சரி, நாம் செய்தால் தவறு!

சில பாடங்களை கற்று கொள்ள புத்தகங்கள் தேவை இல்லை! புத்தி புகட்டும் மனிதர்களே போதும்!

மறந்து விட நினைக்கிறேன்! உதாசினப்படுத்தும் பேச்சுக்களையும், வறுப்பாய் பார்க்கும் உறவுகளையும்!

எதிரியை கூட நம்பு! ஆனால், உறவுகளை நம்பாதே! ஏனென்றால், எதிரி கொடுக்கும் வலியை விட, உறவுகள் தரும்வலியே வலிமை வாய்ந்தது!

உன்னை விட்டு விலகி செல்பவை எதுவாக இருந்தாலும், சந்தோசமாக வழி அனுப்பி வை! நீ இழந்ததை விட, சிறப்பாக தர வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது!

தேவை முடிந்ததும் நண்பன் துரோகி ஆகிறான்... தேவை தொடங்கும் போது துரோகி நண்பன் ஆகிறான்... இதுதான் உலகம்... எவர் தேவைக்கும் நீ பொருள் ஆகாதே!

தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும்! சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசமும் இருக்கும்!

நீ சிரிக்க வைக்க விரும்புவர்கள் புன்னைகைத்து கடந்த செல்வார்கள்! நீ அழ வைப்பவர்கன் தான் கண்ணீரையும் துடைத்து உன் காத்திருப்பார்கள்!

உன் வலிகளையும், வேதனைகளையும் எங்கு பகிர்ந்து கொள்கிறாயோ, அங்கு உன் சுதந்திரத்தை நிச்சயம் இழப்பாய்!

இழந்தவை பலவாயினும், இழக்க நினைப்பவை சில உண்டு. அதிலொன்று போலியான முகத்திரையில் உறவாடும் ஒருசிலரை!

தொல்லை செய்யாமல் தொடர்பில் இருங்கள்! யாரும் உங்களை தொலைக்க முயற்சிக்க மாட்டார்கள்.

தன் பொது நலத்திற்காக, நம்மை பலர் சுயநலமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 March 2024 5:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய