குழிபறிக்கும் நண்பனைவிட நேரில் எதிர்க்கும் எதிரியே மேலானவன்..!
Fake Friends Quotes Tamil-போலி நண்பர்களை சரியாக அடையாளம் காணாவிட்டால் வாழ்க்கை முழுதும் சோகங்களைத்தான் சுமக்கவேண்டும்.
HIGHLIGHTS
Fake Friends Quotes Tamil-போலி என்பது நிஜத்தின் எதிர்ப்பதம். உண்மையற்ற பொருள். நம்பிக்கைக்குரியது அல்ல என்பதாகும். நல்லவர்கள், போல நம்மோடு பழகும் பலருக்கு இன்னொரு முகமும் இருக்கும். அந்த நிஜ முகத்தை கண்டுபிடிப்பதே முக்கியமாகும். கூட இருந்து குழிபறிக்கும் நண்பனைவிட நேரடியாக நம்மை எதிர்க்கும் எதிரி மேலானவன். முகத்திற்கு ஒன்று பேசி பின்னால் ஒன்று பேசுபவர் போலியின் அக்மார்க். இதோ உங்களுக்காக போலி நட்புகளின் மேற்கோள்கள்.
எந்த சூழ்நிலையலும் எவரையும் நம்பாதிருங்கள்.இப்போதுள்ள மனிதர்கள் எல்லாம் எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் துரோகமிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளனர்..!
தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது. தேவைக்காக பேசவும் தெரியாது.
மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில் தான், மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்..!
ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள். ஆனால், அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்..!
இன்று பழகுவர், நாளை விலகுவர்..! உறவு தொடங்கும் முன்பே பிரிவிற்கும் தயாராகிக்கொள்ளுங்கள்..! பிரிந்தாலும் வலி தெரியாது..!
பல முகமூடி மனிதர்களால் சில நல்ல மனிதர்களும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள் இன்று..
இந்த உலகத்தில் யாரையும் நம்பாதீர்..உன்னிடம் ஒன்று பேசிவிட்டு வெளியே ஒன்று பேசும் மோசமான மனிதர்கள் வாழும் உலகம் இது…!
ஏமாந்து போறத விட பெரிய வலி, இப்படி நாம் ஏமாந்துட்டு இருக்கோம்ன்னே இருக்குறது தான்…!
போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும், உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள்..புரிந்துகொண்டால் இழப்புகள் இருக்காது..!
என்னை பிடித்துப் பழகியவர்களை விட என்னை ஒரு பொழுதுபோக்காய் நினைத்து, நடித்துப் பழகியவர்கள் தான் அதிகம்..நினைத்தால் கண்ணீர் வருகிறது..!
தேவைக்காக பழகும் நண்பர்களை விட பழி தீர்க்கும் எதிரிகளே மேலானவர்கள்..!
நம்மை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவர்களைத் தான் நாம் தேவையானவர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறோம்..!
எவ்வளவு தான் பாசம் வைத்தாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நாம் மூன்றாவது மனிதர்கள் தான்..!
கழன்றுவிழும் வரை சிலரது முகமூடிகளை உண்மை முகம் என்றே நம்புகிறோம். அதனால்தான் இழப்புகளில் தவிக்கிறோம்..!
துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையால்தான் தூவப்படுகிறது..!
போலி நண்பர்கள் நிழல் போன்றவர்கள். அவர்கள் உங்களை வெயிலில் பின்தொடர்வார்கள். ஆனால் இருட்டில் கை விட்டுவிடுவார்கள்..! வெளிச்சத்தில் உதவாதவர்கள் இருட்டிலா உதவப்போகிறார்கள்..?
காயப்படுவதற்குப் பழகுங்கள்.உங்களை காயப்படுத்தவே நிறைய போலி நண்பர்கள் காத்திருக்கிறார்கள்..! பிறரை காயப்படுத்தாத நீங்கள் அதற்காக காயப்பட்டே ஆகவேண்டும்..!
முகத்திற்கு முகமூடி போடுபவர்களை விட, அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம் தான்..!
விஷத்தோடு பிறந்த பாம்பின் பிறவி குணத்தை மாற்ற நினைப்பது முட்டாள்தனம். அது போல் தான் சில உறவுகளும்..! விஷத்தை விலைக்கு வாங்க ஏன் முயற்சிக்கவேண்டும்..?
வேசம் போடும் உறவுகளுக்கு நடுவில் உண்மையான பாசம் தோற்றுத்தான் போகிறது. மானங்கெட்ட நம் மனசுக்குத் தான் தெரியவில்லை, அது பாசம் அல்ல வேசம் என்று..!
நிரந்தரம் இல்லாத உலகம், சுயநலம் நிறைந்த உலகம், யாரும் யாருக்காகவும் இல்லை என்பது மட்டும் இங்கு நிஜம்..!
போலியான உறவுகளுடன் பொய்யான வாழ்க்கை வாழ்வதை விட 'தனிமை' ஒன்றும் கொடுமை அல்ல..!
உண்மை இல்லாத உறவுகளுடன் ஒட்டி இருப்பதைவிட ஒதுங்கி இருப்பதே நல்லது..!
அன்பிற்கு அதிகம் ஆசைப்படாதே..! ஆரம்பத்தில் மனதை அள்ளுவாங்க.. பின்பு மனதைக் கொல்லுவாங்க..!
முகத்திற்கு முன்னால் பாசமும் முதுகிற்கு பின்னால் வேசமும் போடும் உலகம் இது…!
வாழ்க்கை நேர்மையாக உள்ளவனை அழ வைக்கிறது. நேரத்திற்கு ஏற்ப மாற்றி பேசுபவனை வாழ வைக்கிறது..! இதுதான் உலகம்..!
எல்லோரும் அழகாக நடிக்கிறார்கள். நமக்குத் தான் தெரிவது இல்லை. வேசம் கலையும் வரை நடந்தது அனைத்தும் நாடகம் என்று..!
பாசமாய் நடிப்பவர்கள் வேஷம் களையும் போது வீணாய் கோஷம் எழுப்புவார்கள், வெற்றுப்பாத்திரம் சப்தம் எழுப்புவதுபோல..!
என்னதான் கலர் கலரா பெயிண்ட் அடித்தாலும், தகரம் என்றைக்கும் தங்கம் ஆகாது. சில மனிதர்களும் அப்படித்தான். ஆனால், சுட்டாலும் தங்கம் கறுக்காது. கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே..!
முகத்தை வைத்து அகத்தை முடிவு செய்யாதே..! அது முகமா? இல்லை முகமூடியா என்று தெரியும் முன்..!
எல்லா வகை முகமூடிகளையும் அணியத் தெரிந்தவர்கள், வாழ்க்கையில் மிக அழகாக நடித்து ஜெயித்து விடுகின்றனர்..! நடிக்கத்தெரியாதவர்கள் தோல்வியின் கைப்பிடிக்குள்..!
ஏமாறாமல் இருப்பதற்கு அறிவு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதயம் இல்லாமல் இருந்தால் போதும்..!
ஒருவரை நம்புவதாக இருந்தால் அவர் சொல்லைக் கேட்டு நம்பாதே..! அவர் செயலைப் பார்த்தப் பின் நம்பு..!
பொய் பேசி பொய்யுடன் கூட்டமாக வாழ்வதற்குப் பதிலாக மெய் பேசி மெய்யுடன் தனிமையில் வாழ்வது சிறந்தது..!
இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே. எல்லோரும் ஒருவகை முகமூடியுடனே சுற்றி வருகின்றனர். உன்னை நம்பு. உன் செயலை நம்பு..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2