/* */

சும்மா காமெடி பண்ணாதீங்க..! சிரிப்பு..இது சிரிப்பு..!

Comedy Quotes in Tamil-சிரிக்க வைப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால் சிலரது முகத்தை பார்த்தாலே சிரிப்பு தானாகவே வந்துவிடும், நம்ம வடிவேல் சாரைப்போல..

HIGHLIGHTS

Comedy Quotes in Tamil
X

Comedy Quotes in Tamil

Comedy Quotes in Tamil

மனிதனின் சிறப்பு அடையாளமே சிரிப்புதான். ஆனால், இன்று பல மனிதர்கள் பணத்துக்கு பின்னால் அலைந்து திரிவதால் சிரிப்பை மறந்து முகம் இறுகிக்கிடக்கின்றனர். சிரிப்பதால் மனம் இலகுவாகும். எத்தனை துன்பங்கள் இருந்தாலும் அத்தனையும் பறந்தோடும். ஆதலினால் சிரிப்பீர்களாக..! உங்களுக்காக சில காமெடி வாசகங்கள்..

நாம் எத்தனை தடவை அடித்தாலும்

திரும்ப திரும்ப நம்ம கிட்டயே வரும்

ஒரே ஜீவன், கொசு மட்டுமே. ஹி..ஹி ..ஹி..

மனைவிகளுக்கு எப்போதும்

கணவன் தான் குழந்தை என்கிறார்கள்.

அதுக்குன்னு எப்போ பாத்தாலும்

என்னையே கடைக்கு போக சொல்றா...ம்கூம்..

திருமணத்திற்கு சென்றால்

கல்யாண ஜோடியை கவனிப்பதை விட

நமக்கான ஜோடியைம் தேடுபவர்கள் தான் அதிகம்.(அட செருப்பு ..செருப்பு ..)

Comedy Quotes in Tamil

நவரசனை உள்ள பெண் தான் எனக்கு வேண்டும்

என்பவனுக்கு புளிரசம் கூட வைக்க தெரியாத

பெண் தான் மனைவியாக அமைவாள்

ஏன் என்றால் விதி வலியது.(மாட்டிக்கொண்டான்..மார்த்தாண்டன்..)


நம்ம வாழ்க்கைல சந்தோஷம் மட்டும்

Short flim மாதிரி டக்குனு முடிஞ்சுடும்

இந்த பிரச்சனை மட்டும் கருமம்

English படம் part 5, part 6 மாதிரி வந்துட்டே இருக்கும். (விதின்னு வாழறோம்)

காதல் வலிதான்

இந்த உலகத்துலயே பெரிய வலின்னு

சொல்லிக்கிட்டு திரியரவங்க

கதவுக்கு நடுவுல கைய வெச்சு பாருங்க

அப்புறம் தெரியும் எது பெரிய வலின்னு..(நாமளும் வச்சி பார்ப்போமா..வடிவேல் பாணியில்..)

எந்த புக் பாத்தாலும் தூக்கம் தூக்கமா வருது

ஆனா இந்த பேஸ் புக் பாத்தா மட்டும்

தூக்கமே வர மாட்டிங்குது.(பிடிக்காத முகத்தைப் பார்த்தா தெரியும்)

Comedy Quotes in Tamil

இந்த உலகத்துலயே பெரிய ஏமாற்றம்

செல் போன் சார்ஜ் போட்டுட்டு

ரெண்டு மணி நேரம் கழிச்சு பாக்கும் போது

சுவிட்ச் போடாமல் இருப்பது தான்...! (மறந்தே தொலச்சிட்டேன்)


பசங்க லவ் பண்ணும் போது என்னா பொண்ணுடா அவ..என்றவன்

லவ் தோல்விக்கு பிறகு பொண்ணா டா அவ...பிசாசு..(எல்லாம் கிடைக்காத ஏக்கம்தான்)

EB ஆபீஸ் க்கு போன் பண்ணி

மழை நின்னு 7 மணி நேரம் ஆகுது

எப்போ கரண்ட் வரும்னு கேட்டா

உன் போன்ல இன்னுமா சார்ஜ் இருக்கு

என்ன மாடல்னு கேக்குறான். ( அப்ப கரண்ட் நிருத்தரத்துக்கு இதுதான் காரணமா..-ரொம்ப அப்பாவி)

எதுக்குங்க பையனை அடிக்குறீங்க.

எதோ பாவம்னு பாஸ் பண்ணி விட்டிருக்கானுங்க.

இந்த நாய் குடிச்சுட்டு வந்து என் கிட்டையே.

I AM DEGREE HOLDER னு கை கொடுக்குறான்டி.(ஐயையோ..அப்புறம்..?? வடிவேலு பாணியில்)


மனைவி : என்னங்க நான் மாசமா இருக்கேன்...

கணவன் : உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னியா?

மனைவி : போங்க நான் காலேஜ் படிக்கும்போது

சொன்னதுக்கே அடிச்சாங்க.

இப்ப எப்படி சொல்றதாம்...!

கணவர் : ஹாம்...(முறைப்பாக-ஏமாந்து தொலைச்சிட்டோமா..)

Comedy Quotes in Tamil

மனைவிக்கு கணவன் தான் முதல் குழந்தையாம்.

அதற்காக பொழுதன்னைக்குமா என்னை

மளிகை கடைக்கு போயிட்டு வா..காய்கறி கடைக்கு போயிட்டு வான்னு

சொல்லுவீங்க...!

டாக்டர் இடது கால் ரொம்ப வலிக்குது.

வயசு ஆயிடுச்சு அதான்.

வலது காலுக்கும் அதே

வயசுதானே ஆச்சு. ( அப்பாவி பெரியவர்)

செய்தி: முகநூலில் பழகிய 11 நாட்களில் 11 பவுன் நகையை கொடுத்த பெண்...

நம்ம குருப்லையும் இருக்காங்களே தெண்டத்துக்கு...

சோத்துக்கு பழைய குழம்பு கூட வாங்க முடியாது...

இவங்க கிட்ட...! ( நாமளே ஏதாவது கிடைக்குமான்னுதான் பழகறோம்..)

Comedy Quotes in Tamil

மனிதன்-1: எங்க ஊர் வரைக்கும் கொரோனா வந்துடுச்சி...

மனிதன்-2: அதுக்கு ஈ பாஸ் யார் கொடுத்தது...( ஈ..தான் ஈ பாஸ் குடுத்து பறக்க வச்சிடுச்சோ..?)

அன்பே..ஆருயிரே..

உன் கை பிடித்து

நகைக் கடை வரை செல்ல

ஆசை.....(கணவன் ஓட்டம் பிடித்தார்)


கணவன்

நாசாவுக்கு போறதும்

நாசமா போறதும்

கட்டிய மனைவியே தீர்மானிக்கிறாள்( யாருக்கு யார் யாரோ..?)


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 March 2024 5:33 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!