/* */

ஏமாற்றாதே..... ஏமாற்றதே..... ஏமாறாதே.... ஏமாறாதே..... அழகிய தமிழில் .....

Husband Cheating Quotes in Tamil இவ்வுலகில் பிறந்த யாவருமே ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றமடைந்தவர்களாகவே இருப்பார்கள். ஏமாற்றம் என்பது எதிர்பாராததா? அல்லது எதிர்பார்த்ததா? .... வாசகங்களை பார்ப்போமா?

HIGHLIGHTS

Husband Cheating Quotes in Tamil
X

Husband Cheating Quotes in Tamil

Husband Cheating Quotes in Tamil- இவ்வுலகில் பிறந்தவர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் ஏமாந்திருப்போம்...அல்லது ஏமாற்றப்பட்டிருப்போம்.. அந்த வகையில் தற்போதைய நாகரிக உலகில் அடுத்தவர்களை ஏமாற்ற பலர் தேடிக்கொண்டிருக்கின்றனர்.உழைக்காமல் எப்படி முன்னேறுவது? என்று ஒரு கோஷ்டியினர் அலைந்துகொண்டிருக்கின்றனர். ஏங்க... ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்... சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது.

ஏமாற்றத்தில் பல வகைகள் உண்டு. தெரிந்தவர்களிடம்ஏமாறுவது,தெரியாதவர்களிடம் ஏமாறுவது... உடன் பிறந்தவர்களிடம்ஏமாறுவது, உறவுகளிடம் ஏமாறுவது, பெற்ற பிள்ளையிடம் ஏமாறுவது, காதலன் காதலியிடம்ஏமாறுவது, காதலி காதலனிடம் ஏமாறுவது என பல வகைகள் உண்டு. ஏங்க வீட்டு வாசப்படி வந்து உங்கள் நகைகளை பாலீஷ் போட்டு தருகிறேன் என வாங்கி கழற்றி கொடுத்தபின் பாலீஷ் போட்ட பின் பார்த்தால் ஏதோ எடை குறைந்தது மாதிரி உள்ளதே என மனசு சொல்லும்போது திரும்பி பார்த்தால் பாலீஷ் போட்டவன் எஸ்கேப்... எப்படிங்க... நவீன முறையில் ஏமாத்துறாங்க...

தானாக வந்து உதவி செய்பவர்களைக் கண்டால் நடுக்கமா இருக்குதுங்க... இதுபோல் ஏமாந்து போய்விடுவோமா? என பலர் வலிய வந்து உதவினால்கூட இக்காலத்தில்ஏற்றுக்கொள்வதில்லை. அதுவும் இந்தியாவில் ஏமாற்றத்திலேயே உச்ச கட்டம் எது தெரியுமா? அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட யாருக்கும் கொடுக்காமல் முடக்கி வைத்திருந்த பணத்தினை நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து அப்புறம் அவன் காணாமல் போகும்போதுதான் அய்யோ...போச்சே ... என்ற புலம்பலில் வரும்போதுதான் பலருக்கும் உண்மை தெரிகிறது.

அதுவும் ஒரு சிலர் தெரிந்தவர் என கடன் லட்சக்கணக்கில் வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுப்பார்கள். அவர்களும் ஒரு சில மாதங்கள் கரெக்டாக கொடுப்பார்கள். அப்புறந்தான் இவர்கள் வேலையை காண்பிப்பார்கள். அதாவது ஆளே அப்ஸ்காண்ட். அவ்வளவுதான்... தலையில் தான்அடித்துகொள்வார்கள்...என்ன செய்ய...போயே ...போச்சுங்க.....

நாம் இது வரை பார்த்தது எல்லாம் நேரடி ஏமாற்றங்கள். தற்போது இதிலும் தொழில்நுட்பம் பரவி விட்டதுங்க.. ஆன்லைன் மோசடி அதிகம் நடக்க ஆரம்பித்துவிட்டன. ஆன்லைனில் பணத்தினை செலுத்த சொல்லிவிட்டு இதனை நம்பி பலர் அவரவர்களுடைய பேங்க் அக்கவுண்டில் பணத்தினை கட்டிவிட்டு பின்னர் போன் செய்தாலும் ஸ்விட்ச் ஆப்தான்.. நிரந்தரமாக... யார் என்னவென்னு கூட தெரியாம பணம் போயே போச்சுன்னு... புலம்ப வேண்டியதுதான். இதுபோல் இந்த உலகம் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான்செய்வார்கள். நாம்தான் உஷாராக இருக்கவேண்டும் என்ன நான் சொல்றதுங்க....

ஏமாற்றத்தின் வாசகங்களை இப்போ பார்க்கலாமா?

ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது-ஆப்ரஹாம் லிங்கன்.

ஒரு பெண் ஏமாற்றப்படும்போது அவளை ஏமாற்றியவனை பழிவாங்க நினைப்பது இயற்கையாக இருந்தாலும் ஒரு பெண் ஏமாறும்போது இயற்கையும் அ வளை பழிவாங்குகிறதே ஏன்?

தெரிந்தே தவறு செய்தவர்களிடம்நியாயம் கேட்காதே...

அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள்

உண்மையாய் இருப்பதால்தான் அதிகம் காயப்படுகிறோம்..நேர்மையாய் இருப்பதால்தான் அதிகம் சோதிக்கப்படுகிறோம்

உரிமையாய் இருப்பதால்தான் அதிகம் கோப்பப்படுகிறோம்..

யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாய் இருங்க..இல்லாவிட்டால் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கமாட்டீர்கள்..

ஒருவரை பிடிக்கவில்லையெனில் உண்மையாக வெறுத்துவிடு ஆனால் பொய்யாக நேசிக்காதே..

ஒருவரை நீ ஏமாற்றும்போது ஏமாறுகிறவரை ஒரு நிமிடம் நினைத்துப்பார். உன்னை அவர் நம்புவதால்தான் ஏமாறுகிறார் என்பதை மறவாதே...

மன்னித்துவிடுங்கள் உங்களை ஏமாற்றியவர்களை ஆனால் மறந்தும் கூட நம்பி விடாதீர்கள் மறுபடியும் அவர்களை

ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால்உண்மையாக வெறுத்து விடுபொய்யாக நேசிக்காதே.

உங்களிடம் ஒருவர் ஆறுதல் தேடி வரும் போதுஆறுதல் சொல்லி விட்டு, பிறகு அவரைமற்றவரிடம் குறை கூறினால் அது நம்பிக்கை துரோகம்.

நீ யாருக்காக அழுது அழுதுஇறந்து கொண்டிருக்கிறாயோஅவர்கள் வேறு யாருடனோசிரித்து சிரித்து வாழ்ந்துகொண்டு இருப்பார்கள்.

பல பேரின் மாற்றங்களுக்கு காரணமேசிலர் தரும் ஏமாற்றங்கள் தான்!துரோகங்கள் வலியை விடஆச்சரியத்தை தான் தருகின்றனஇவ்வளவு சிறப்பாக எப்படி நடித்து ஏமாற்றினார்கள் என்று.

தன்னோட தேவைக்காக மட்டுமேஉறவு வைத்துக் கொள்ளும் உலகம்!கண்டிப்பாக தேவைகள் முடிந்ததும்தூக்கி எரிந்துவிடும்.

என்னை ஏமாற்றியதுஉனது தவறல்லஎன்னை ஏமாற்றும் அளவிற்குஉன் இடம் நான் உண்மையாய்இருந்தது தான் என் தவறு.

நீ மேலே மேலே உயரும்போது நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள். ஆனால் நீ கிழே போகும்போது, உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிவாய்.

ஒருவர் உங்களிடம் ஆறுதல் தேடிவரும் போது, அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு, பிறகு அவரை பற்றி மற்றவரிடம் குறை கூறினால், அதை விட நம்பிக்கை துரோகம் என்ன இருக்கு....

வலிகளைத் தரும் உறவுகள் வேண்டாம் ஆறுதல் தரும் தனிமையே போதும்...

பொய்யான அன்பை தேடிச் செல்லும் சிலர், உண்மையான அன்பை மதிப்பதில்லை ....!! உண்மை புரியும் போது, அன்பானவர்கள் ...... அருகில் இருப்பதில்லை ....!

எவ்வளவு தான் நன்றாக பழகினாலும், ஒரு சிலரின் உண்மை குணம் சில சந்தர்ப்பங்களில் தான் நமக்கு தெரிகிறது...! இவ்வளவு நாட்கள் அவர்களின் உண்மை குணத்தை மறைத்து, வைத்திருந்தது அவர்களின் திறமையா... அல்லது, அறியாமல் இருந்தது நமது அறியாமையா என்று...

யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதில் தெளிவாய் இருங்கள். இல்லையெனில் நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க மாட்டீர்கள்....

துரோகிகள் யார் தெரியுமா..? துரோகத்தை செய்து விட்டு... அந்த குற்ற உணர்வு சற்றும் இல்லாமல் திரிபவர்கள் தான்... மிகச் சிறந்த துரோகிகள்...!

நேர்மையாக இருப்பவர்களைத் தான் வாழ்க்கை அதிகம் ஏமாற்றி விடுகின்றது...!

நீ யாருக்காக அழுது அழுது இறந்து கொண்டிருக்கிறாயோ அவர்கள் வேறு யாருக்காகவோ சிரித்து சிரித்து வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.........

விட்டு விடவும் முடியாமல், விலகி நிற்கவும் முடியாமல், விரும்பி ஏற்கின்றேன் சில வலிகளை ..!!

அவள் என்னை பார்த்து சிரித்தாள் அவள் கன்னத்தில் குழி விழுந்தது, நான் அவளை பார்த்து சிரித்தேன் என் வாழ்க்கையே குழியில் வழிந்தது.

பலரின் மாற்றங்களுக்கு காரணம் சிலர் தரும் ஏமாற்றங்கள் தான்

ஒரு பெண்ணை உன்னிடம் அதிகமாக பேச அனுமதிக்காதே பின் அவள் உன்னை அதிகமாக பேச வைத்துவிடுவாள் "தனியாக "

வழிய வந்து வலியை தந்து விலகி செல்கிறார்கள் வேஷம் போடும் மனிதர்கள்

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்..! அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்..!

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது சிறந்தது.

துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையால்தான் தூவப்படுகிறது!

நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாள் ஏமாற்றலாம், கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது

கிழிந்த முகமூடிகளுக்கு பின்னால் இருப்பதெல்லாம் நிஜமல்ல. இன்னொரு முகமூடியாகவும் இருக்கலாம்..!

தன்னோடத் தேவைக்காக மட்டுமே உன்னோடு உறவு வைத்துக் கொள்ளும் உலகம்...! தேவைகள் முடிந்ததும் கண்டிப்பாக தூக்கி எறியப்படுவாய்.....!

நாம் பிறர்க்கு செய்வது மற்றொருவர் மூலமாக நமக்கே வந்து சேரும்..! அது உதவியாக இருந்தாலும் சரி துரோகமாக இருந்தாலும் சரி...!

என்னை ஏமாற்றியது உன் தவறல்ல என்னை ஏமாற்றும் அளவிற்கு நான் உன் மீது அன்பாய் உண்மையாய் இருந்தது தான் என் தவறு...

உனக்கு நான் உயிராக இருப்பேன், எனக்கு நீ உண்மையாக இருக்கும் வரை

துரோகங்கள் நமக்கு கற்றுக் கொடுப்பவை ஒன்று தான், சற்றே சுயநலமாய் இருந்திருக்கலாம் என்று ...

தெரிந்தே தவறு செய்தவர்களிடம் நியாயம் கேட்காதே அவர்கள் செய்த தவறுகளை நியாயப்படுத்த பல பதில்களை வைத்திருப்பார்கள்

காதலிப்பதற்கு முன்பு வரை ரசிக்கப்படும் பொய்கள் காதலிக்க தொடங்கிய உடன் காதலையே வெறுக்க வைத்து விடுகிறது

நிரந்தரம் இல்லாத உலகம் சுயநலம் நிறைந்த உலகம் யாரும் யாருக்காவும் இல்லை என்பது மட்டும் இங்கு நிஜம் ...!

வழிகளைத் தேடிதான் செல்கிறோம்....! போகும் இடமெல்லாம் காத்திருப்பது என்னவோ வலிகள் மட்டுமே....

பிடிக்கவில்லையெனில் நண்பனுக்கு எதிரியாய் கூட இருந்து விடும, ஆனால் துரோகியாய் நொடியேனும் மாறி விடாதே !

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்..

விரும்பி காதலித்தேன் அவளை நான் விரும்பாமலே கொடுத்தாள் வலிகளை இருந்தும் ஏற்றேன் அவள் கொடுத்ததற்காக

உனக்காக சிரிக்கும் உதடுகளை விட....!! உனக்காக கண்ணீர் விடும் கண்களை நேசி.....!! அது உப்பாக இருந்தாலும் உண்மையாக இருக்கும் ...!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 April 2024 5:56 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...