/* */

பிறந்த நாள்...இன்று பிறந்த நாள் நாம் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்......ஹேப்பி....ஹேப்பி

Birthday Wishes Quotes in Tamil-பிறந்த நாள் என்பது ஒவ்வொருவருக்குமே முக்கியமான நாள். அன்றைய தினம் நாம் உலகை கண்ட நாள். சந்தோஷமான நாள் அனைவருக்குமே.

HIGHLIGHTS

Birthday Wishes Quotes in Tamil
X

Birthday Wishes Quotes in Tamil

Birthday Wishes Quotes in Tamil

Birthday Wishes Quotes in Tamil

பிறந்த நாள்... நாம் ஒவ்வொருவருமே இந்த உலகை கண்ட நாள். ஆம் ஜனித்த நாள். இந்த நாள் நாம் உயிருடன் உள்ளவரை அனைவராலும் மறக்க முடியாத நாள். இந்த நாளை இல்லாதவர் முதல் இருப்பவர்கள் வரை அனைவரும் அவரவர்களின் வசதி. வாய்ப்புக்கு ஏற்ப கொண்டாடிவிடுகின்றனர்.

யாராக இருந்தாலும் அன்றைய தினம் புத்தாடை உடுத்தி பெற்றோரை வணங்கிவிட்டு பின்னர் கோயில்களுக்குசெல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். கோயில்களில் அபிஷேகம்,ஆராதனை என களை கட்டுவதோடு ஒரு சிலர் அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்துவிடுகின்றனர். ஒருசிலர் பிரசாதத்தினை மட்டும் விநியோகிக்கின்றனர்.

பெரும்பாலானோர் தற்போது ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அல்லது அவர்கள் வசிக்கும் நகரத்தில் தெருவில் வாழும் ஏழைகளுக்கு முடிந்த நலத்திட்ட உதவிகளை அளித்து ஒரு வேளை உணவையும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதுவே அரசியல்வாதிகளின் பிறந்த நாள் என்றால் நாடே கொண்டாடுகிறது. அவர்களும் இதேபோல் கோயில்களில் விசேஷ பூஜை, அன்னதானம் ,ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் என நடத்துவர்.

அன்றைய நாளில் பலரும் வாழ்த்துகளை தெரிவிப்பர். அந்த வாழ்த்துகளைப் பற்றி பார்ப்போம்...

Birthday Wishes Quotes in Tamil

Birthday Wishes Quotes in Tamil

மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக.. நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....

வந்த கஷ்டங்கள் எல்லாம் பனி போல தூர விலகி மகிழ்ச்சி என்ற ஒன்றின் ஒளிவீசி தித்திக்கும். எதிர்காலம் சிறப்பாக அமைய உன் பிறந்த நாளில் மனதார வாழ்த்துகிறேன்.

பூவினம் சேராத பூவொன்று பூமியில் பூத்த நாள் இன்று வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதித்த நாள் இன்று

பிறப்பு என்பது அழகான விபத்து இறப்பு என்பது ஆபத்தான விபத்து இரண்டுக்குமிடையில் சில நாள் வாழ்க்கை இன்றுமொருமுறை பிறக்கவும் இறக்கவும் அஞ்சாதே.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வருடத்தில் பல வண்ணங்கள் மலரும் விடியலில் பிறந்தாயோ காற்றால் மலர்களை உதிர்த்து மழைத்துளியில் வெண்பகலை அழைத்து இதயத்தால் உன்னை வாழ்த்துகிறேன்

வாழ்க்கை என்ற கடலில் மகிழ்ச்சி என்ற படகில் வாழ்நாளெல்லாம் பவனி வந்து வளம் பல பெற்று வாழ்க நீடும் வளர்க வையத்தில் நின் புகழ் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

உனக்கு வாழ்த்து சொல்ல புதிதாய் பிறந்தது நீயா இல்லை நானா? உன்னை வாழ்த்த புதிதாய் யோசித்து, யோசித்து நானே புதியதாய் மாறிப்போனேன். யோசித்து யோசித்தும் பிறக்கவில்லை கவிதை? புதியதாய் இன்று பிறந்த நீயே கவிதைதானே எனக்கு.

பிறந்தநாள் மட்டுமல்ல நீ என்னுள் பிறந்த நாளையும் கொண்டாடுவேன் நான்....

சிறப்பான என் கணவருக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

குறிஞ்சி பூப்பது 12 வருடத்திற்கு ஒரு முறையாம்.. யார் சொன்னது ஆண்டுக்கு ஒரு முறை பூக்கிறது... அது உன் பிறந்த நாள்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

ஒளிக்கை நீட்டி வாழ்க்கை காட்டிய வசந்த நாள் நீ பிறந்த நாள்

வாழ்க்கையில் நாம் பிறந்ததை அடையாளம் காட்டும் மிக சிறந்த நாளே "பிறந்த நாள்"

நிலவை கொண்டு வந்து உன்னிடம் நான் தந்தாலும் அதன் பெறுமதி குறைவே உன்னை கட்டியணைத்து அன்பாய் பேசும் வார்த்தைகள் பல்லாண்டு வாழச்செய்யும்

உங்களை பற்றி ஒன்றும் தெரியாமல் மணவறைக்குள் அமர்ந்தேன், இன்று உங்களை பற்றி முழுவதும் புரிய வைத்து என் இல்லறத்தை அழகாக்கி விட்டீர்கள், என் சார்பில் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் என் ஆசை நாயகனுக்கு

காலங்கள் கடந்து நீ ஒரு மூலை நான் ஒரு மூலை என்று இருந்தாலும் நம் சொந்தம் எனும் பந்தத்திற்கு என்றுமே அழிவு இல்லை . என் பணிவான பிறந்த தின வாழ்த்துக்கள் என் சகோதரனே.

கண்களுக்கு என்றுமே மனதின் மொழி புரியும். அதனால் தான் என்னவோ என்னை உன்னிடம் சேர்த்து உன்னவளின் உனக்கான பிறந்த தின நல்வாழ்த்துகள்

அனைத்து குறைகளும் இன்று நிறைகளாகி போயின நீ பிறந்த போது. என் தேவதை என்றுமே என் மனதின் மஹாராணி தான் வாழ்த்துக்கள் மகளே.

யாரென்று அறியாது உரிமையாய் பழகினோம். இன்னார் என்று தெரியாது உண்மையாய், இருந்தோம். என்றுமே நம்முடைய நல்லுறவு நீடிக்க வேண்டி உன் பிறந்த தினத்தில் இறைவனிடம் வேண்டுகிறேன்.

நம் இருவரின் கண்ணீரை பார்க்கும், இறைவனின் இதயம் கூட உருகும் நம் பிரிவை எண்ணி. இந்நாளில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உன் பிறந்தநாளின் சிறந்த பரிசுப்பொருள் உன் காதல் தீபம் ஏற்றிய என் இதயமாக தான் இருக்கும்..!!

புத்தம் புது நாள் புத்தம் புது வருடம் புத்தம் புது வாழ்க்கை எல்லா சோகங்களும் கஷ்டங்களும் கரைந்துவிட இனி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்குவதற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

உன்னை சந்தித்த பிறகு என் ஒவ்வொரு பிறந்தநாளும் பரிசாக உன்னை மட்டுமே எதிர்பார்க்கிறது....... நீயோ .. மலர் கொத்து தருகிறாய்....

உன் பிறந்தநாளில் வாழ்த்து அட்டைகளில் வாழ்த்துச் சொல்லி உன் வீட்டு அலமாரியில் ஒளிந்து கொள்ள ஆசையில்லை எனக்கு.... உன் இதயத்தில் வாழ ஆசைப்படுகிறேன்!

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

அன்பே எனக்கு வரம் ஒன்று கிடைத்தால் உன் பிறந்த நாளையே வருடத்தின் முதல் நாளாக அறிவிக்க ஆசை இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

பிறப்பின் நொடிகள் என்றும் அழகானது. அதை மீண்டும் காலத்தின் நகர்வால் அடையும் போது வாழ்த்துகள் அழகானது

என்னில் கலந்து இருந்த கவிதையே உன்னை என் வரிகள் வாழ்த்தும் இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்க உன்னை என் இதயம் வாழ்த்தும் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

இனி வரும் நாட்களில் உங்கள் ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேற எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த சிறப்பான நாளில் மட்டும் அல்லாமல் வாழ்க்கை முழுவதும் அழகாகவும் ஆனந்தமாகவும் அமைய எனது வாழ்த்துகள்

பிறந்த நாள் என்பது இழந்த வாய்ப்புகள் மற்றும் தோல்விகளைப் பற்றி மறந்துவிடும் நாள், இது ஒரு புதிய நம்பிக்கை, புதிய யோசனைகளுடன் புத்தாண்டின் தொடக்கமாகும். இந்த ஆண்டு நல்ல வாய்ப்புகள் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் உங்கள் காணலாம் என்று நம்புகிறேன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே .

என்றென்றும் போற்றத்தக்க ஏராளமான இனிப்பான நினைவுகளை காண இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 March 2024 4:16 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...