/* */

சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை... அர்த்தமுள்ள வாசகங்களை படிங்க....

Face Beauty Quotes in Tamil- வாழ்க்கையினை ரசித்து வாழ வேண்டும். மேடு, பள்ளங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை... பிரச்னைகளைக் கண்டு மலைத்துவிடக்கூடாது.

HIGHLIGHTS

சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...  அர்த்தமுள்ள வாசகங்களை படிங்க....
X





Face Beauty Quotes in Tamil-வாழ்க்கை என்பதே வாழ்வதற்குத்தான்... வீழ்வதற்கல்ல.. வாழ்க்கையில் எந்த பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்த்து போராட வேண்டும்.. பின் வாங்க கூடாது. ஒரு பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கைக்களம் என்பது போராட்டம் தான்.

அவரவர்களின் வாழ்க்கை முறைக்கேற்ப பிரச்னைகளின் தன்மையானது வேறுபடுகிறதே தவிர யாருக்குமே பிரச்னை இல்லை என்று சொல்லிவிடமுடியாது. காலை எழுந்தது முதல் இரவு படுக்க செல்லும் வரை எத்தனையே பிரச்னைகளை நம் அனுபவங்கள் வாயிலாக தினம் தினம் சந்தித்து வருகிறோம். எந்த பிரச்னைக்கும் தீர்வு ஒன்று உண்டு. பேசித்தீர்த்துக்கொள்ளலாம்.. எந்த வன்முறையும்இல்லாமல்.

நாம் வாழும் வாழ்க்கையானது ஆத்மார்த்தமானதாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் தொந்தரவு தரக்கூடாது. நம்மால் முடிந்த உதவிகளை வாழும் வரை செய்ய முயற்சிக்க வேண்டும். காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எனவே நேரத்தினை வீணாக்காமல் நல்ல செயல்பாட்டிற்காக பயன்படுத்தவேண்டும் என்ற கொள்கைளை வகுத்துக்கொண்டு ரசித்து வாழ கற்றுக்கொள்ளவேண்டும்..

வாழ்வின் உன்னதமான அழகாக வாசகங்கள்இதோ...

உறவுகள் தூக்கி எறிந்தால் வருந்தாதே..! அவர்கள் முன் வாழ்ந்து காட்டு! மகிழ்ச்சியாக, நிம்மதியாக..!

தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி கட்டாயம் வேண்டும்! இல்லையேல், வார்த்தையும், வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்...

"உன் வாழ்க்கை உன் கையில்" என்பதை நீ புரிந்துகொள்ளும் வரை, வாழ்க்கை என்னும் ஆசான் பாடம் நடத்துவதை நிறுத்துவதில்லை!

வாழ்க்கை வாழ பல வருடங்கள் இருப்பினும், வாழ்க்கை மாற சில நிமிடங்கள் போதும்!

beautiful quotes in tamil



beautiful quotes in tamil

நேசிக்க யாருமில்லாத போது, நம்மை யோசிக்க வைக்கிறது இந்த வாழ்க்கை!

வாழ்கையின் இரு பகுதிகள் - 1. எதிர்காலத்தின் கனவு, 2. கடந்த காலத்தின் நினைவு

சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை! சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை!

கரையை தொட்டுச் செல்லும் அலைகளுக்கு தெரிவதில்லை, சில சுவடுகளை விட்டுச் செல்கிறோம் என்று!

-பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள். இனி பிறக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடன் வாழுங்கள்!

உயிர் வாழக் கற்றுக்கொள் போதும். எவ்வாறு வாழ்வது என்பதை காலம் கற்றுத்தரும்.

அடுத்தவர் உணர்வுகளை புரிந்துவிட்டால், உதிரங்கள் கண்ணீர் ஆகாதோ?

கஷ்டங்கள் வரும்போது எதிர்நீச்சல் போட கற்றுக் கொள்ளவில்லை எனில், நீச்சல் தெரிந்தும் பயனில்லை!

தத்துவத்தை படிச்சா என்னடா வாழ்க்கை இது அப்படி தான் தோணும்! அதே தத்துவத்தை புரிஞ்சிகிட்டா இதான் வாழ்க்கை அப்படின்னு தோணும்!

வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும், வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும் அர்த்தங்கள் ஆயிரம் உண்டு.. வலிகளை சுமந்து வழியைத் தேடும் பயணம் தான் வாழ்க்கை!

தொலைத்தவனுக்கே தேடுதலின் அருமை! இழந்தவனுக்கே பிரிவின் அருமை! எதிர்பார்ப்பவனுக்கே அன்பின் அருமை! ஒவ்வொரு நிகழ்வாய் வாழ்க்கை!

beautiful quotes in tamil


beautiful quotes in tamil

அடுத்தவர் விரும்பியபடி தான் பேச வேண்டுமானால், பொய் தான் பேச வேண்டும்! அடுத்தவரின் விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டுமானால், நடிக்கத்தான் வேண்டும்! நம் வாழ்வை நாம் வாழ்வோம், நமக்கு பிடித்தபடி!

யாரையும் கஷ்டப்படுத்தி கிடைக்கிற சந்தோஷமும் வேண்டாம்! நாம சந்தோஷமா இருக்க யாரையும், கஷ்டப்படுத்தவும் வேண்டாம், நீ நீயாக இரு!

அன்பை அள்ளி கொடுத்தால் விரைவில் திகட்டி விடும்! ஆயுள்வரை தித்திக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி கொடு

பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக்கொள்ளமாட்டாள்! அவள் சிக்கிக்கொள்வதெல்லாம் அவளிடம் மட்டுமே!

வாழ்க்கையில் உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால், அந்த கடவுளே நேரில் வந்தாலும் பயன் இல்லை!

மரத்தின் இலைகள் உதிர்வது போல, காலம் மாறும் போது சில கவலைகளும் தானாகவே உதிர்ந்து விடும்

எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்ளாதீர்கள்.. ஏனெனில் இங்குப் பணிவுக்கும், அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம்தெரியாத மேதாவிகள் உண்டு

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே, ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் மாற வேண்டி வரும்.

அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி, ஒரே தவற்றைத் திரும்பத்திரும்பச் செய்பவன்முட்டாள்!ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை தன்னையறியாமல் தவறு செய்து தன்னையறிந்து திருத்திக்கொள்பவன் மனிதன்..!

பணத்தை வைத்து எந்தவொரு உறவையும் , மனிதரையும்தாழ்வாக கருதாதீர்கள்..! ஏனெனில் வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது..நொடியில் அனைத்தும் மாறிவிடும்..

தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தவறில்லை ஆனால்ஆசைப்பட்ட பிறகு, அதை அடைய, உன் தகுதியை வளர்த்து கொள்ளாமல் இருப்பதே தவறு.

வாழ்க்கையில் கஷ்டங்கள்அதிகமாக வரவில்லை என்றால், பல விஷயங்கள் கடைசிவரை தெரியாமல்போய்விடும்!

ஒருவர் உன்னை பிடிக்கும்என்று சொல்லிவிட்டால்வாழ்க்கை முழுவதும் பிடிக்கும்என்று நினைத்து விடாதே இன்று பிடிப்பவர்களுக்கு நாளை பிடிக்காமல் கூட போகலாம்...

உலகில் நாம் விரும்பும் அத்தனையும் இரு முறை தான் அழகாக தெரியும் ஒன்று அடைவதற்கு முன்பு இரண்டு இழந்ததற்கு பின்பு....

காதலில் இருவரில் ஒருவர் மனம் மாறினால் கூட இன்னொருவரின் வாழ்க்கையே போய்விடும் தயவு செய்து உண்மையாய் இருந்தால் மட்டுமே காதலியுங்கள் காலப்போக்கிற்காக காதல் செய்யாதீர்கள்...

நீ அடைவதெல்லாம் இறைவனும் இயற்கையும் உனக்குத் தந்த பரிசு இழப்பது எல்லாம் நீ இன்னொருவருக்கு கொடுக்கும் வாய்ப்பு!

beautiful quotes in tamil


beautiful quotes in tamil

ஈரம் பட்ட மண்ணில் விழும் கால் தடங்களை விட காயம்பட்ட மனதில் எழும் வடுக்கள் வார்த்தையில் அடங்காது காயப்பட்ட யாவும் காலத்தின் கையில் நியாயப்படும்! கலங்காதிரு!

காதல் என்னும் மழையில் நனையாதவர்களும் இல்லை பிரிவு என்னும் துயரை அறியாதவர்களும் இல்லை கனவு என்னும் மாயையில் களிக்காதவர்களும் இல்லை நினைவுகள் என்னும் தீயில் கருதாதவர்களும் இல்லை.

உனக்காக தான் வாழ்கிறேன் என்பவர்கள்.. உன்னை யார் என கேட்கவும் தயங்காதவர்கள்.

உறவுகளை உருகுலைப்பதில் சந்தேகம் ஒரு சாக்கடை.

விருப்பத்தினால் செய்யும் உதவிகளை விட விளம்பரத்திற்காக செய்யும் உதவிகள் அதிகம்!

நடிகர்களுக்கு பஞ்சமா.. எப்பொழுதும் நல்லவர்களாக இருப்பவர்களை இப்படியும் அழைத்துக் கொள்ளலாம்!

அறிஞர்கள் அறிவை தேடுகிறார்கள் அறிவிலிகளோ அதை பெற்றுவிட்டதாக நினைத்துகொண்டு இருக்கிறார்கள்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது அன்று. ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது இன்று.

நமக்குப் பிடித்தமானவை எல்லாம் நமக்கானது என நினைக்கிறோம், ஆசை துளிர்விடுகிறது மெல்லப் பேராசையாகிறது நாம் அடைய நினைத்து வேறொருவருக்குச் சொந்தமாகும் போகும் நிராசை அடைகிறோம் ஒன்றை நினைவில் கொள்வோம்: நமக்கானது நம்மை விட்டு எங்கும் செல்லாது.

ஏழை பணத்தை நேசிப்பதில்லை! பணக்காரன் குணத்தை நேசிப்பதில்லை!

எதிர்பார்க்கும் ஒன்று எதிரில் கிடைக்கும் போது அருமை தெரிவதில்லை! எதிர்பார்ப்பின் ஆர்வம், அது நிறைவேறும் போது இருப்பதில்லை!கவலைகளை அனுபவிக்கும் போதே தெரிகிறது சிலருக்கு, தாம் இத்தனை நாள் இருந்தது சொர்க்கத்தில் என்று!

கஷ்டப்படும் போது உதவி செய்பவர்களை விட, மேன் மேலும் கஷ்டப்படுத்துபவர்களே இங்கு ஏராளம்!

கற்றுக்கொள்ளும் மனம் இருந்தால், நீங்கள் முட்டாள்களிடமிருந்து கூட பாடம் கற்க முடியும்! அந்த மனம் இல்லாவிட்டால், உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்க முடியாது!

சந்திப்பு என்று வரும் போது, மகிழ்ச்சி பிரதானமாக இருக்கிறது! பிரிவு என்று வரும் போது, குறைகள் பிரதானமாக இருக்கிறது! இரண்டும் இல்லை என்றான போது, தனிமை பிரதானமாகிகிறது!

சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்!

வேடிக்கை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்! ஏனென்றால் அவர்களால் நமக்கு எந்த பயனும் இல்லை!

இருள் சூழ்ந்த ஒளிகளே, அதிகம் பிரகாசிக்கின்றன வாழ்க்கை பாதைகளில்!

காயங்களை சுமந்தவன், கனவுகளை இழப்பதில்லை! கண்ணீருடன் இருப்பவன், கனவுகளை வெறுப்பதில்லை!

நம் வாழ்க்கை எளிதல்ல! நாம் தான் எதிர்க்கப்பழக வேண்டும்!

வருத்தம் என்னும் வாழ்க்கையில், இன்பம் என்னும் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

முகம் பார்த்து பேசினாலே போதும். இங்கு பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆனால் அதை யாரும் செய்வதே இல்லை!



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jan 2024 3:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்