/* */

அனுபவத்தின் ஊற்று அப்பா.... அறிவின் களஞ்சியம் அப்பா....

appa quotes மாதா, பிதா, குரு,தெய்வம்... நம் உயிருக்கு உயிரான தாய்க்கு பிறகு தந்தைக்குதான்இரண்டாமிடமே. அந்த தந்தையின் சொல் மிக்க மந்திரமில்லை...படிங்க...

HIGHLIGHTS

அனுபவத்தின் ஊற்று அப்பா....  அறிவின் களஞ்சியம் அப்பா....
X
குழந்தை முழு உலக நடப்புகளையும் காண சுமையில்லாமல் தன் முதுகில்  துாக்கி ஊர்வலம் போகும்  அப்பா.... (கோப்பு படம்)

appa quotes

அப்பா...அப்பா...அப்பா...இந்த மூன்றெழுத்து மந்திரத்தினை இந்த உலகில் யார் பிறந்தாலும் மறக்கவே முடியாது. அந்த வகையில் மிக மிக பவர்புல்லான சொல் அப்பாதான்.அது யாராக இருந்தாலும் இந்த உலகினைக் காண வழி கொடுத்தவர் அப்பாதாங்க... என்னாதான்சொன்னாலும் தியாகத்தின் திருவுருவம் அப்பாதான். தனக்கென எந்த ஒருபொருளையும் விரும்பாதவர். குடும்பத்தின் குத்துவிளக்கு... என சொல்கிறார்கள் அதன்அர்த்தம் என்ன தெரியுமா?

appa quotes


appa quotes

பல குடும்பங்களில் அப்பாதான் அனைத்து வேலைகளையும்பொறுப்பெடுத்து செய்வார். அம்மாவானாவர் வீட்டு வேலைக்கு பொறுப்பு. வாங்கி கொடுப்பதெல்லாம் அப்பாதான். இப்படி இருப்பது மிக மிக தவறு என நான் சொல்கிறேன். அப்பா இருக்கும்போதே அனைத்து அனுபவங்களையும் அவரிடமிருந்து பிள்ளைகள் கற்றுணர்ந்து கொள்ள வேண்டும். அப்பாதான் நமக்கு வாழ்க்கையின் வழிகாட்டி. எந்த அப்பாக்களும் தன் பிள்ளைகள் கெட வேண்டும்எ னவழிகாட்ட மாட்டார்கள். அந்த வகையில் நம்பிக்கையோடு அவரது பாதையில் பயணம் செய்யலாம் அவரது வாரிசுகள்.

அப்பா...அப்பா...அப்பா...ஆம் இந்த மூன்றெழுத்து வசீகர மந்திரத்தின் அருமையை பெரும்பாலானோர் அவர்கள் இருக்கும்போதும், அவர்களுடன் இருக்கும்போதும் உணர்வதில்லை... அவர்களுக்கு பின்னர் தான் அந்த மூன்றெழுத்து மந்திரத்தின் வசீகரமும், பவரும் தெரிகிறது.

appa quotes


appa quotes

இந்த காலத்திலாவது அம்மாவும் சேர்ந்து வேலைக்கு போறாங்க.. அதாவது பெண்களுக்கு விடுதலை, சுதந்திரம் இருந்தது. ஆனால் கடந்த 30 வருஷத்துக்கு முன்பாக அவ்வளவாக பெண்களுக்கு வேலை வாய்ப்பில்லாத காலத்திலும் ஒரே சம்பளத்தில் தன் பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கிய பெருமை பல அப்பாக்களைச் சாரும்.. அவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரே ஒரு கஷ்டம் கூட தெரியாமல் வளர்த்த தகைமைசால் தியாகி என்று கூட சொல்லலாம்

அக்கால அப்பாக்களுக்கு மகன்கள் செலுத்தியது மரியாதை. அதேபோல் அப்பாக்களும் மகனிடம் தேவையில்லாமல் பேசவே மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.. எல்லாம் அம்மாவின் மூலம்தான் தகவல் பரிமாற்றங்கள்... நீங்கதான் அக்கால சினிமாவில பார்க்கிறீங்களே அதுபோலவே தாங்க..

appa quotes


appa quotes

கவிஞர் பாரதி தாசன் எழுதிய நுால்தான் குடும்ப விளக்கு.. ஆனால் தமிழகத்தினைப்பொறுத்தவரை ஒவ்வொரு அப்பாக்களுமே ''குடும்ப விளக்கு'' தாங்க...அந்தவிளக்கு அணைந்த பின்னர்தான் அதன் வெளிச்சம் எவ்வளவு துாரத்திற்கு பயனடைந்தது என்பது தெரிகிறது. எப்படி இருளை அகற்றி வெளிச்சத்தினை அந்த விளக்கு பரவச்செய்கிறதோஅதுபோல் குடும்ப கஷ்டங்களை தாம் ஒருவரே தாங்கிக்கொண்டு தகர்த்தெறிந்தவர்.

ஆனால் இக்காலத்திலோ அப்பாக்களெல்லாம் முதியோர் இல்லத்தில்... இதை நினைத்துதான் பார்த்திருப்பார்களா? அவர்கள் தங்கள் வாழ்க்கையில்... வாழ்ந்து பாருங்க... அப்போதுதான் அருமை பெருமை தெரியும்..இன்று அவர்களுக்கு நாளை... நமக்கு...இவ்வளவுதாங்க வாழ்க்கை....வேறொன்றுமில்லீங்க...

appa quotes

எதிர்பாராது உதவும் மனம் படைத்தவர்தான் அப்பா...

உலகில் நம் வாரிசுகளும் சிறந்து வாழ வேண்டும் எனவழி ஏற்படுத்தி நமக்குவிடை கொடுப்பவர்தான் அப்பா..

தாய்க்கு தரும் சிறப்பிடம் தந்தைக்குமில்லைதாயின் சிறப்பிடத்திற்கே வழிகாட்டி தந்தைதான்

பாதுகாப்பு ,துணிவு, பாசம், நேசம்,மரங்களின் ஆழத்தினை அந்த வேர்கள் தாங்கி பிடிப்பது யாருடைய கண்களுக்கும் நமக்கு தெரிவதில்லை..

appa quotes


appa quotes

அதுபோலவே குடும்ப கஷ்டத்தினை தாங்கும் பல அப்பாக்களின் அருமையை உழைப்பை பலரும் உணர்வதில்லை...

கண்டிப்பில் அவர் ஒரு ஆங்கிலேய அவதாரம்...கனிவில் அவர் அம்மாவின் மறு பிரவேசம்...

படிப்பில் அவர் ஒரு கண்டிப்பான ஆசிரியர்பொறுப்பில் அவர் ஒரு ... பொறுமை சாலி...

துன்பத்தினை மனதில் பூட்டி வைத்துக்கொண்டுவெளியில் அட்டகாசமாக சிரித்திடுவார் அப்பா..

அப்பப்பா... எப்படிப்பா...இது... என கேட்க தோன்றுகிறதே... இப்போது? ....எப்படிப்பா?

மனதில் துாக்கியது பத்தாது என்று திருவிழாக் காலங்களில்நம்மை தோள் உயரத்திற்கு துாக்கி காட்டியவர்தான் அப்பா....

அம்மா... பத்து மாதம் கருவில் சுமந்தாள்...அப்பா...வாழ்நாள் முழுக்க இதயத்தில் சுமப்பார்...

தாயில் சிறந்த கோயிலும் இல்லை...தந்தை சொல்மிக்க மந்திரம்இல்லை... அனுபவ சாலி அப்பா....

கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும்..அதுதாங்க... அப்பா.... கண்டிப்பின்மறு உருவம்..

பாசத்திற்கு பாசம்... கண்டிப்பிற்கு கண்டிப்பு... அப்பா...குடும்ப முன்னேறத்திற்காக நேரம் பார்க்காமல்

உழைக்கும் உழைப்பாளிதாங்க அப்பா...ஊராரும் மெச்சும் வகையில் பிள்ளைகளை படிக்க

கஷ்டப்படுபவர்தாங்க....அப்பா.... அப்பா...அப்பா...அழுததை நான் ஒரு நாளும் பார்த்ததில்லை...

பேசிய வார்த்தைகளி்லும் வலி இருந்ததில்லை... பாசம்..மனதிலிருந்த வேதனைகளை வெளியில் சொன்னதும் இல்லை... உருகிய மெழுகுவர்த்தி தான் அப்பா...

அப்பாவுக்கு அகராதியில் ஆயிரம் பொருள் இருந்தாலும் அன்பு, பாசம், நேசம்... ஒருங்கே இணைந்தவர் அப்பா...

நடக்க தெரியாத போது நடை காட்டிய ஆசான்...சைக்கிள் ஓட்டகற்றுக்கொடுத்த குரு...

தாம் கற்ற பாடங்களை அனுபவத்தின் வாயிலாககற்றுக்கொடுக்கும்...இல்லத்து ஆசிரியர் அவர் அப்பா...

உழைத்த உழைப்பு வெளித்தெரியாமல் இருப்பார் அப்பா...கவலைகளை மனதில் போட்டு பூட்டிக்கொள்வார் அப்பா..

அவரது பல தியாகங்களே இன்று நம்மைஆளாக்கின... அப்பா... தியாகத்தின் மறு உருவம்தான் அப்பா... அப்பா...

வாழ்க்கையில் எத்தனை அவமானங்கள் பட்டாலும்அமைதியின் பிறப்பிடமாய் சாந்த சொரூபியாய்...

வீட்டினைக் கட்டிக் காத்தவர்தான் அப்பா...வாழ்வின் முன்னேற்றம் வரை சலிக்காது உழைத்தவர் அப்பா...ஈடு இணையில்லாமல் கிடைப்பதுதான் தந்தை பாசம்இவையனைத்தும் பிறந்த இடம் அப்பா...

இன்றைய இளைய தலைமுறைகள் நாட்டின் தொழில்நுட்பத்தினை கற்றுக்கொண்டு அயல் நாட்டில் சென்று வேலை வாய்ப்பு பெற்று விடுகின்றனர். பலர் அங்கேயே பச்சை கார்டு உரிமம் பெற்று நிரந்தரமாகவும் தங்கிவிடுகின்றனர்.

ஆனால் இவ்வளவு வளர்ச்சிக்கு வித்திட்ட ஆலமரத்தினை அடியோடு மறந்துவிடுகின்றனர் அதாவது பெற்றோர்களை. அவர்களும் பல தியாகங்கள் செய்த வகையில் இதனையும் ஒரு தியாகமாக எடுத்துக்கொண்டு வாழ்ந்து முடிகின்றனர்.தன் இளமைக்காலத்தினை குடும்பத்திற்காக செலவிட்ட பல பெற்றோர்கள் வயதான போது தன்னைக்காக்க மகன்இருப்பான், மகள் இருக்கிறாள் என்று மார்தட்ட முடியாத நிலைதான் என்று? என்ன செய்ய?

Updated On: 7 Dec 2022 9:11 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு