/* */

திருமணத்திற்கு முக்கியமான 10 பொருத்தங்கள் முதல்ல படிச்சு பாருங்க....

10 Porutham Explanation in Tamil -திருமணம்என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்வார்கள். தமிழகத்தினைப்பொறுத்தவரை அக்காலந்தொட்டே கல்யாணம் என்றால் ஜாதக பொருத்தத்தைத்தான் முதலில் பார்ப்பார்கள். 10 பொருத்தங்கள் பற்றி பார்ப்போம்.

HIGHLIGHTS

திருமணத்திற்கு முக்கியமான 10 பொருத்தங்கள்  முதல்ல படிச்சு பாருங்க....
X

10 Porutham Explanation in Tamil -கல்யாணம் என்றால் ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். இதேபோல் தமிழகத்தினை பொறுத்தவரை பெற்றோர்களின் அனுமதியோடு நடக்கும் திருமணங்கள் அனைத்தும் ஜாதக பொருத்தம் பார்க்காமல் செய்ய மாட்டார்கள். காதல் கல்யாணம் என்பது இதிலிருந்து விதி விலக்கு .,

மேலும் கல்யாணம் என்பது மாப்பிள்ளை, பெண் என இருமனதோடு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இரண்டுகுடும்பங்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக இருக்கிறது. ஒரு திருமணம் நடத்தவேண்டும் என்றால் தமிழகத்தில் எவ்வளவு பார்க்க வேண்டியிருக்குது தெரியுமா? அதனால்தான் அக்கால பெரியவர்கள் கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் என்ற சொன்னார்கள். ஏனெனில் வீடு கட்டுவதும் இதேபோலத்தான் பார்த்து பார்த்து கட்டுவார்கள். வாஸ்து, திசை, அக்னி மூலை உட்பட . அந்த அளவிற்கு கல்யாணமும் பல நாட்கள் தம்பதியினர் சேர்ந்து வாழவேண்டும் என்பதால் பாரம்பரிய முறைப்படி என்னென்ன செய்ய வேண்டுமோ? அதனை செய்துதான் திருமணமே நடத்துகிறார்கள் தற்போது.

மாப்பிள்ளையின் ராசி நட்சத்திரம், அதேபோல் பெண்ணின் நட்சத்திரம் ராசியோடு மொத்தம் 10 வகை பொருத்தங்களில் எத்தனை பொருந்துகிறது என ஜோதிடர் மூலம் பார்ப்பார்கள். இதில் முக்கியமான பொருத்தங்கள் ஓ.கே என்றால் சம்மதம் தெரிவித்து விடுகின்றனர். அந்த வகையில்

தினப்பொருத்தம்:

தினப்பொருத்தம் இருந்தால்தான் தம்பதிகள் மன ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.காரணம் அன்றாடம் நடக்கும்செயல்பாடுகளுக்கும் இது அவசியம் தேவை. இல்லாவிட்டால் பிரச்னைகள்தான் தலைதுாக்கும்.எனவே இது முக்கியமான பொருத்தமாக கருதப்படுகிறது. ஓர் பெண்ணின் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து ஆணின் ஜன்ம நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது, 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24 ஆக அதன் எண்ணிக்கை இருந்தால், தினப்பொருத்தம் இருக்கிறது என்று பொருள். அசுவினி நட்சத்திரத்துக்கு 2-வது நட்சத்திரம் பரணி, 4-வது நட்சத்திரம் ரோகிணி ஆகியவை பொருத்தமானவை.

கணப்பொருத்தம்:

மொத்தம் உள்ளது 27 நட்சத்திரங்கள் இதில் மூன்று வகையான கணங்கள் உண்டு. தேவகணம், மனித கணம், ராக்ஷஸ கணம் என மூன்று வகை உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு நியதி உள்ளது. அந்த வகையில் ஆண், பெண் இருவரின் நட்சத்திரங்களும் அசுர கணத்தில் இருந்தால் கணப்பொருத்தம் கிடையாது. தேவ கணம் மனித கண நட்சத்திரங்களுக்கு ராக்ஷஸ கண நட்சத்திரங்கள் பொருத்தமாக இருக்காது.இருவரின் நட்சத்திரங்களும் மனித கணத்தில் இருந்தாலும், கணப்பொருத்தம் உண்டு. தேவகணம், மனித கணம் ஆகிய பிரிவில் உள்ள நட்சத்திரங்கள் கொண்ட ஆண், பெண் ஜாதகங்களுக்கும் கணப்பொருத்தம் உண்டு எனலாம். மணமகன், மணமகள் இருவரின் நட்சத்திரங்களும் தேவ கணத்தில் இருந்தால், கணப்பொருத்தம் கன கச்சிதம்.

மகேந்திரப் பொருத்தம்:

இந்த பொருத்தம் தம்பதியினர் இருவருக்குமே முக்கியத்துவத்தைத் தரக்கூடியது.அதாவது குழந்தை பாக்கியத்தை குறிக்க கூடிய பொருத்தமாக மகேந்திர பொருத்தம் உள்ளது. அதாவது . பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக அந்த எண்ணிக்கை இருந்தால் மகேந்திரப் பொருத்தம் இருக்கிறதென்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

யோனிப் பொருத்தம்:

திருமண வாழ்வில் தம்பதிகளிடையே நிலவும் இல்லற வாழ்வினைப் பற்றி கூறும் பொருத்தம் இது. முக்கியமானது. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு விலங்கு குறிக்கப்படுகிறத. பகை இல்லாத விலங்கினங்களைச் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் எதிர்கால வாழ்க்கையானதுபாதிப்படைய வாய்ப்புண்டு.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்:

பெண்ணின் ஜன்ம நட்சத்திரத்திலிருந்து ஆணின் ஜன்ம நட்சத்திரம் வரை எண்ணினால், 13-க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் இருக்கிறது எனக் கொள்ள வேண்டும்.

ராசிப் பொருத்தம்:

ஒரு சிலர் இந்த ராசிப்பொருத்தம் மட்டும் பொருந்தினாலே திருமணம் செய்யும் நடைமுறை யினை இன்றும் பல குடும்பங்களில் காண முடிகிறது. அந்த வகையில் பெண்ணின்

ராசியிலிருந்து மாப்பிள்ளையின் ராசி 2முதல் 6 வரை இருந்தால் திருமணத்தைத் தவிர்ப்பார்கள். பெண்ணின் ராசி மேஷம் என்றால், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளில் அமையும் சித்திரை முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களுக்கு ராசிப் பொருத்தம் உண்டு.

ராசி அதிபதி பொருத்தம்:

ஆணின் ராசி அதிபதியும் பெண்ணின் ராசி அதிபதியும் பகை, நட்பு என்ற நிலையும் சம நிலை பகை என்றாலும் ராசி அதிபதி பொருத்தம் கிடையாது.நவகிரகங்களில் ராகு, கேது தவிர்த்து மீதமுள்ள 7 கிரகங்களும், 12 ராசிகளுக்கும் அதிபதிகளாகத் திகழ்கின்றனர். இந்த கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு, சமநிலை, பகை என்னும் மூன்று நிலைகளில் இருப்பார்கள்.

ஆணின் ராசி அதிபதியும் பெண்ணின் ராசி அதிபதியும் நட்பு அல்லது சம நிலை என்னும் அளவில் அவர்களின் உறவு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு.

வசியப் பொருத்தம்:

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்வார்கள். அந்த வகையில் அன்றாட வாழ்வில் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல இந்த பொருத்தம் மிக அவசியம் ஆகும்.மேஷத்துக்கு சிம்மம், விருச்சிகமும் ரிஷபத்துக்கு கடகம், துலாமும் மிதுனத்துக்கு கன்னியும் கடகத்துக்கு விருச்சிகம், தனுசும் சிம்மத்துக்கு மகரமும் கன்னிக்கு ரிஷபமும், மீனமும் துலாமுக்கு மகரமும் விருச்சிகத்துக்கு கடகம், கன்னியும் தனுசு - மீனம்மகரத்துக்கு கும்பமும் கும்பத்துக்கு மீனமும் மீனத்துக்கு மகரமும் வசியப் பொருத்தம் உள்ளவை.

ரஜ்ஜு பொருத்தம்:

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு ரஜ்ஜு உண்டு. இதை கயிறு பொருத்தம் என்றும் கூறுவார்கள். சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, நாபி ரஜ்ஜு, தொடை ரஜ்ஜு,பாத ரஜ்ஜு என ஐந்து வகை ரஜ்ஜு உண்டு. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருக்கக்கூடாது. எனவே, முக்கியப் பொருத்தமாக ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது.

வேதைப் பொருத்தம்:

அசுவினி - கேட்டை, பரணி - அனுஷம், கார்த்திகை - விசாகம், ரோகிணி - ஸ்வாதி, திருவாதிரை - திருவோணம், புனர்பூசம் - உத்திராடம், பூசம் - பூராடம், ஆயில்யம் - மூலம், மகம் - ரேவதி, பூரம் - உத்திரட்டாதி, உத்திரம் - பூரட்டாதி, அஸ்தம் - சதயம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒன்றுக்கொன்று வேதை.

ஒன்றுக்கொன்று எதிரானவையே வேதை என்று சொல்கிறோம். அந்த வகையில் இரண்டும் தாக்கிக்கொள்ளும் தன்மை கொண்டவை. மிக முக்கியமான பொருத்தம் இது. இதுவும் பார்த்து எந்த நட்சத்திரத்துக்கு எந்த நட்சத்திரம் வேதை என்பதை பார்த்து தான் செய்ய வேண்டும்.

ஆனால் இக்காலத்தில் பலர் ஒரு சில பொருத்தங்களை மட்டுமே பார்த்து ஓகே செய்துவிடுகின்றனர். முன்பெல்லாம் 10 க்கு எத்தனை பொருத்தம் பொருந்தி உள்ளது என கரெக்டாக பார்த்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் இதிலும் மாற்றம் அதிகம் வந்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Feb 2024 9:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்