Begin typing your search above and press return to search.
ப்ரீ-பெய்டு வாடிக்கையாளரா நீங்க? இதோ உங்களுக்கான நல்ல செய்தி!
மொபைல் போன் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான வேலிடிட்டி எனப்படும் திட்டம் செல்லுபடியாகும் காலம், தற்போதுள்ள 28 நாட்களுக்கு பதிலாக, 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டுமென்று, டிராய் உத்தரவிட்டுள்ளது.
HIGHLIGHTS
நாட்டில் உள்ள பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத வவுச்சருக்கு வேலிடிட்டி எனப்படும் திட்டம் செல்லுபடியாகும் காலத்தை, தற்போது 28 நாட்கள் என்று நிர்ணயித்துள்ளன. இதன் காரணமாக , பிரீ பெய்டு வாடிக்கையாளர்கள், ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 30 நாள் திட்டம் ஒன்றை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய்) உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, பிரீ பெய்டு ஒருமாத வவுச்சர் திட்டத்தில், செல்லுபடியாகும் காலமான வேலிடிட்டி இனி, தற்போதுள்ள 28, நாட்கள் என்பதை, 30 நாட்களாக செல்போன் நிறுவனங்கள் நிர்ணயித்தாக வேண்டும். இது, பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.