/* */

அதானி குழும நிலை அறிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு...!

ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி குழும நிலை அறிக்கையை சமர்பிக்க உச்சநீதிமன்றம் செபிக்கு கெடு விதித்து உத்தரவிட்டது

HIGHLIGHTS

அதானி குழும நிலை அறிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு...!
X

பைல் படம்

அதானி குழுமத்தின் மீது பங்குச் சந்தை மோசடி, பண மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், அதானி குழுமத்தின் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டுமென இந்திய சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்தது.

அதானி குழுமத்தின் மீதான விசாரணையை மேற்கொள்ள செபிக்கு இரண்டு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த அவகாசம் முடிவுக்கு வந்தது. விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய செபி, இன்னும் விசாரணை முடியவில்லை என்றும், மேலும், 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் நியமித்த 6 பேர் கொண்ட நிபுணர் குழு தங்களின் விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் செபி-யின் அவகாசம் கோரிய மனு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான உத்தரவில், ‘இந்திய பங்குச்சந்தை ஆணையத்திற்கு (செபி) வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்படுகிறது. இதற்கிடையே புதுப்பிக்கதக்க நிலை அறிக்கையை வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் செபி தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Updated On: 19 May 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...