/* */

புதிய விதிமுறைகளை பின்பற்றத் தொடங்கிய சமூக ஊடகங்கள்-குறைதீா்க்கும் அலுவலா்கள் நியமனம்

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளின்படி கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக ஊடகங்கள் குறைதீா்க்கும் அலுவலா்களை நியமித்துள்ளது.

HIGHLIGHTS

புதிய விதிமுறைகளை பின்பற்றத் தொடங்கிய சமூக ஊடகங்கள்-குறைதீா்க்கும் அலுவலா்கள் நியமனம்
X

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகள்

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளின்படி கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக ஊடகங்கள் குறைதீா்க்கும் அலுவலா்களை நியமித்துள்ளது.

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை ஏற்று, கூகுள், ஃபேஸ்புக் (முகநூல்) உள்ளிட்ட பெரும்பாலான சமூக ஊடகங்கள் குறைதீா்க்கும் அலுவலா்களை நியமிக்கத் தொடங்கியுள்ளன. இந்த விவரங்களை அந்த ஊடகங்கள் தங்களது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகள் கடந்த 26-ஆம் தேதி அமலுக்கு வந்தன. அதன்படி 50 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், குறைதீா்க்கும் அலுவலா், கட்டுப்பாட்டு அலுவலா், தலைமை குறைதீா்க்கும் அலுவலா் ஆகியோரை நியமிக்க வேண்டும். இந்த அலுவலா்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

இந்த அலுவலா்களின் பெயா், தொடா்பு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் தங்களுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும். இந்த விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக ஊடகங்கள் குறைதீா்க்கும் அலுவலா்களை நியமித்துள்ளன. இந்த விவரங்களை தங்களது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளன. குறைதீா்க்கும் அலுவலா்களை நியமித்த விவரத்தையும் மத்திய மின்னணு-தொலைத் தொடா்புத் துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளன

கூகுள் நிறுவனம், தங்களது வலைதளத்தின் 'தொடா்புக்கு' பக்கத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி, அவரது தொலைபேசி எண் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.புதிய விதிகளின்படி, குறைதீா்க்கும் அலுவலா், புகார்களை 24 மணி நேரத்துக்குள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தப் புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீா்வுகாண வேண்டும்.

சமூக ஊடகங்களுக்கான மத்திய அரசின் புதிய வழிகாட்டு விதிமுறைகளை ட்விட்டா் நிறுவனம் தவிர பிற சமூக ஊடக நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டன

Updated On: 31 May 2021 3:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  8. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  9. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’