கேரளாவில் ஆந்த்ராக்ஸ்: செத்து கிடந்த காட்டுப்பன்றிகள், பொதுமக்கள் அச்சம்
Anthrax In Animals -கேரளாவில் திருச்சூர் அருகே காட்டுப்பன்றிகளுக்கு ஆந்தராக்ஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்
HIGHLIGHTS
Anthrax In Animals -கேரளாவின் திருச்சூர் அருகே அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக இறந்து கிடந்தன. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பினர்.
இதில் பன்றிகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கேரளாவில் மீண்டும் ஆந்த்ராக்ஸ் நோய் பரவியுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மற்ற விலங்குகளுக்கும் இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது என்பதால் கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இறந்த பன்றிகளை புதைப்பதற்கும் பரிசோதனை நடத்துவதற்கும் சென்ற அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஆந்த்ராக்ஸ் நோயால் சில காட்டுப் பன்றிகள் இறந்தது குறித்து கவலைப்படத் தேவையில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொற்று பரவுவதைத் தடுக்க கேரள அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், தொற்றுநோயைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2