/* */

பிரதமர் மோடியின் 4 மாநில சூறாவளி சுற்றுப்பயணம்

பிரதமர் மோடி சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

HIGHLIGHTS

பிரதமர் மோடியின் 4 மாநில சூறாவளி சுற்றுப்பயணம்
X

பிரதமர் மோடி. (பைல் படம்)

நான்கு மாநிலங்களுக்கு பிரதமர் மோடியின் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் ராய்ப்பூர், கோரக்பூர், வாரணாசி, வாரங்கல் மற்றும் பிகானேர் ஆகிய ஐந்து நகரங்களில் சுமார் ஒரு டஜன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 50 திட்டங்களுக்கு அவர் தொடங்கி வைத்து, அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுவார்.

ஜூலை 7 பிரதமர் மோடி முதலில் டில்லியில் இருந்து ராய்ப்பூருக்குச் செல்கிறார், அங்கு அவர் அடிக்கல் நாட்டினார் மற்றும் பல திட்டங்களை அர்ப்பணிப்பார். ராய்ப்பூர் விசாகப்பட்டினம் வழித்தடத்தின் பல்வேறு ஆறு வழிப் பிரிவுகளுக்கான அடிக்கல் நாட்டுவதும் இதில் அடங்கும். அதன்பின், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர் கோரக்பூர் செல்லும் பிரதமர் மோடி அங்கு கீதா பிரஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதன்பிறகு, அவர் 3 வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பார், மேலும் கோரக்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்காக அடிக்கல் நாட்டுவார்.

கோரக்பூரில் இருந்து தனது தொகுதியான வாரணாசிக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு பல முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

வாரணாசி-ஜான்பூர் நான்கு வழிப்பாதை விரிவாக்கத்தையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மணிகர்ணிகா காட் மற்றும் ஹரிச்சந்திரா காட் ஆகியவற்றின் சீரமைப்பு பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

ஜூலை 8 பிரதமர் வாரணாசியில் இருந்து தெலுங்கானா மாநிலம் வாரங்கலுக்கு பயணம் மேற்கொள்கிறார். இங்கு, நாக்பூர்-விஜயவாடா வழித்தடத்தின் முக்கிய பகுதிகள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார். கரீம்நகர்-வாரங்கல் பகுதியின் நான்கு வழிச்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். அதன்பின், வாரங்கலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.

பின்னர் வாரங்கலில் இருந்து பிகானேர் செல்லும் பிரதமர், அங்கு பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அமிர்தசரஸ் ஜாம்நகர் விரைவுச் சாலையின் பல்வேறு பகுதிகளை அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பசுமை ஆற்றல் வழித்தடத்திற்கான மாநிலங்களுக்கு இடையேயான டிரான்ஸ்மிஷன் லைனையும் பிரதமர் அர்ப்பணிப்பார். அதன்பின், பிகானரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

Updated On: 5 July 2023 8:38 AM GMT

Related News