பிரபல நடிகர் கைது? ரோட்டில் படுத்து போராட்டம்!
பிரபல நடிகரும் ஆந்திர அரசியல்வாதியுமான பவன் கல்யாண் நடுரோட்டில் படுத்து உருண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அனுமதி தராததை அடுத்து தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண். இதனால் அவர் கைது செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேற்று கைது செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த கைது நடவடிக்கைக்கு, தெலுங்கு தேசம் கட்சியினரும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
சந்திரபாபு நாயுடுவின் கைது நடவடிக்கைக்கு, ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர் கூறினார்.
சந்திரபாபு நாயுடுவைப் பார்க்க விமானம் மூலம் புறப்பட பவன் கல்யாண் தயாரானார். ஆனால், காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், அவர் கார் மூலம் ஹைதராபாத் பயணிக்கத் தொடங்கினார். ஆனால், போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
சந்திரபாபு நாயுடு தற்போது உள்ள மங்களகிரிக்கு நடந்து செல்ல பவன் கல்யாண் முடிவு செய்தார். ஆனால், இதற்கும் அனுமதி தராததால், அவர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு காவல்துறை அதிகாரிகள் பவன் கல்யாணிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர் கேட்காததால், காவல்துறை அவரை கைது செய்தது. தடுப்புக் காவலில் கைது செய்துள்ளதால், நீதிபதி முன் ஆஜர்படுத்த தேவையில்லை என்று காவல்துறை கூறியது.
சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் கைது நடவடிக்கை, ஆந்திராவில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினர், பவன் கல்யாண் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.