/* */

தொடங்கியது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்

டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு வெற்றிகமாக நடத்தப்பட்டதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

HIGHLIGHTS

தொடங்கியது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்
X

Parliament begins today- நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. (கோப்பு படம்)

நாடாளுமன்றம் வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என ஆண்டுக்கு 3 முறை கூடும். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாத இறுதியில் தொடங்கி, மார்ச் மாதம் வரை நடைபெறும். மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை, ஆகஸ்டு மாதங்களிலும், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் நடைபெறும்.

இதனிடையே, செப்டம்பர் 18ம தேதி (இன்று) முதல் 22ம தேதி வரை 5 நாட்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளான 18ம தேதி (இன்று) மட்டும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெறும். 19ம தேதி முதல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்புக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்புக்கூட்டத்தொடரில் பிரதமர் மோடி துவக்க உரையாற்ற உள்ளார். இந்த சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, அரசியல் நிர்ணய சபையாக இருந்ததில் இருந்து கடந்த 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம், அதன் சாதனைகள், நினைவுகள், அனுபவங்கள், படிப்பினைகள் ஆகியவை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.

வக்கீல்கள் திருத்த மசோதா, பத்திரிக்கை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா ஆகிய மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகின்றன. இவை ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டன. அஞ்சல் அலுவலக மசோதாவும் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இது, ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாக்கள் மட்டுமே நிகழ்ச்சி நிரல் பட்டியலில் இடம்பெற்றிருந்த போதிலும், இவை தவிர வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு தனி உரிமை உள்ளது. இந்த தனி உரிமை மூலம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு வெற்றிகமாக நடத்தப்பட்டதற்கு மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை சபாநாயகர் ஜக்தீப் தங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Sep 2023 6:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு