/* */

பிரதமர் மோடியுடன் திரௌபதி முர்மு சந்திப்பு

பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக போட்டியிடும் திரௌபதி முர்மு, பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார்

HIGHLIGHTS

பிரதமர் மோடியுடன் திரௌபதி முர்மு சந்திப்பு
X

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும், பாஜக கூட்டணி சார்பில், ஒடிசாவை சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவும் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கும் முதல் பழங்குடியினப் பெண் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அரசியல் வாழ்க்கையை கவுன்சிலராக தொடங்கிய முர்மு, ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநரானார். தற்போது குடியரசு தலைவர் வேட்பாளராக களம் காண்கிறார்.

இந்நிலையில், நாளை காலை வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக டெல்லி வந்துள்ள திரௌபதி முர்மு பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதை அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும், அடிப்படை பிரச்சனைக்கான புரிதல் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான திரௌபதியின் பார்வை சிறப்பானது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 23 Jun 2022 12:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்