/* */

திருமண விருந்து சாப்பிட்ட 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

maharashtra news today- மஹாராஷ்டிரா மாநிலத்தில் திருமண விருந்து சாப்பிட்ட 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருமண விருந்து சாப்பிட்ட 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
X

மருத்துவமனை மாதிரி படம் 

maharashtra news today-மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் உணவு உட்கொண்ட 60க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி பிரஹலாத் சவான் கூறும்போது, பூசாத் தாலுகாவில் உள்ள செம்பலபிம்ப்ரி பகுதியில் திருமண விழா ஒன்று இன்று காலை நடந்தது. அங்கு விருந்து சாப்பிட்ட பலருக்கு வாந்தி மற்றும் வயிற்று கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 45 பேருக்கு மேற்பட்டோர் ஹிங்கோலி மாவட்ட தலைமை மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

maharashtra news today-பூசாத் மருத்துமனையில் 25 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவு தெரிந்த பின்னரே என்ன காரணம் என்பது தெரிய வரும் என்றார். திருமண விருந்தில் பலருக்கு வாந்தி பிரச்னை ஏற்பட்டதும் விருந்தில் உணவு பரிமாறப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. இதுகுறித்து பூசாத் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 7 Jun 2022 7:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?