பிரதமர், முதல்வருடன் செல்பி எடுத்த அமைச்சரும் நடிகையுமான ரோஜா முகத்தில் பூரிப்பு..!
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா, தமது மொபைலில் எடுத்த செல்பி போட்டோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
HIGHLIGHTS
ஆந்திர மாநிலத்தின் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். இதையடுத்து மற்றொரு சுதந்திர போராட்ட தியாகியின் மகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரதமர், அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்த சம்பவம் தியாகியின் குடும்பத்தினரையும், உறவினர்களை பெரும் நெகிழ்ச்சிப்படுத்தியது.
அதனை தொடர்ந்து டிஜிட்டல் இந்தியா பாஷினி , டிஜிட்டல் இந்தியா ஜெனசிஸ் உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன் ஆந்திர அமைச்சர் ரோஜா அருகில் நின்று, அனுமதி பெற்று, தமது மொபைலில் செல்பி புகைப்படத்தை எடுத்தார். அப்போது அருகில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்தார். பிரதமர் மோடியும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் சிரித்தபடி போஸ் கொடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் தற்போது வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.