/* */

கர்நாடக போலீசாரை கைது செய்த கேரள போலீஸ்: ரூ.3.95 லட்சம் பறிமுதல்

Kerala Police arrests Karnataka Police - கர்நாடக காவல்துறை அதிகாரிகளை கைது செய்த கேரள போலீசார், அவர்களது வாகனத்தில் இருந்து ரூ.3.95 லட்சத்தை மீட்டனர்.

HIGHLIGHTS

கர்நாடக போலீசாரை கைது செய்த கேரள போலீஸ்: ரூ.3.95 லட்சம் பறிமுதல்
X

கர்நாடக போலீசாரின் வாகனம்.

கேரளாவின் கொச்சி மாவட்டத்தில் சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்ய, கொச்சி வந்த 4 கர்நாடக போலீசாரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு கர்நாடக போலீசார், மிரட்டி பணம் பறித்ததாக கேரளாவில் போலீஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கேரள காவல்துறை கூறுகையில், கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி கர்நாடகாவில் நடந்த ஆன்லைன் கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு தொடர்பாக அகில் மற்றும் நிகில் ஆகிய இருவரை கைது செய்ய கர்நாடக காவல்துறை குழு கொச்சிக்கு சென்றது. இந்த மோசடி குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களை கர்நாடக காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க, ஒவ்வொருவரிடமும் 25 லட்சம் ரூபாய் கர்நாடக போலீசார் கேட்டதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரூ.1 லட்சமும், மற்றவர் ரூ.2.95 லட்சமும் கொடுத்ததாகவும், அவர்களில் ஒருவர் இது குறித்து தனது வருங்கால மனைவி உதவியுடன் கேரள போலீசில் புகாரளித்தார்.

இதனையடுத்து புகாரின் பேரில், கர்நாடக காவல்துறை அதிகாரிகளை கைது செய்த கேரள போலீசார், அவர்களது வாகனத்தில் இருந்து ரூ.3.95 லட்சத்தை மீட்டனர்.

Updated On: 5 Aug 2023 7:27 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை