/* */

இஸ்லாமிய கல்லூரியில் சமஸ்கிருதம்: முன்மாதிரியாக விளங்கும் கேரள கல்லூரி

கல்வியை காவி நிறமாக்குவதாகக் கூறி கேரளாவில் அரசியல் கட்சிகள் முரண்படும் நேரத்தில், திருச்சூரில் உள்ள இந்த இஸ்லாமிய கல்வி நிறுவனம் தனது மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்பிக்கிறது

HIGHLIGHTS

இஸ்லாமிய கல்லூரியில் சமஸ்கிருதம்: முன்மாதிரியாக விளங்கும் கேரள கல்லூரி
X

சமஸ்கிருதம் கற்கும் இஸ்லாம் கல்லூரி மாணவர்கள்

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் நீண்ட வெள்ளை அங்கி மற்றும் வெள்ளை குல்லா அணிந்த மாணவர்கள் தங்கள் இந்து குருக்களின் கண்காணிப்பில் சமஸ்கிருதத்தில் 'ஸ்லோகங்கள்' மற்றும் 'மந்திரங்களை' ஓதுவதில் அந்த கல்வி நிறுவனம் தனித்து நிற்கிறது.

" குருர் பிரம்மா குருர் விஷ்ணு, குருர் தேவோ மகேஸ்வரா, குருர் சாக்ஷாத் பரம் பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ ," என்று ஒரு மாணவர் தனது பேராசிரியரால் சமஸ்கிருதத்தில் கேட்கப்பட்டதைக் கூறுகிறார்.

"உத்தமம் (சிறந்தது)" என்று பேராசிரியர் சமஸ்கிருதத்தில் பதிலளித்தார், ஆசிரியர் கேட்ட வேறொரு 'ஸ்லோகத்தை' மற்றொரு மாணவர் சொல்லி முடித்தார். வகுப்பில் மாணவர் மற்றும் பேராசிரியருக்கு இடையேயான அனைத்து உரையாடல்களும் சமஸ்கிருதத்தில் தான்உள்ளன.

மாலிக் தீனார் இஸ்லாமிய வளாகத்தால் நடத்தப்படும் அகாடமி ஆஃப் ஷரியா மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (ASAS) முதல்வர் ஓணம்பிள்ளி முஹம்மது ஃபைசி கூறுகையில், நோக்கம் மாணவர்களுக்கு கல்வி அறிவையும் பிற மதங்களைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தில், சமஸ்கிருதம், உபநிடதங்கள், புராணங்கள் போன்றவற்றைக் கற்பிக்கப்படுகின்றன. என்றார்.

MIC ASAS இல் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கற்பிப்பதற்கான மற்றொரு காரணம், ஃபைசியின் சொந்த கல்விப் பின்னணியாகும், ஏனெனில் அவர் சங்கர தத்துவத்தைப் படித்தார்.

எனவே, மாணவர்கள் மற்ற மதங்கள் மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் உணர்ந்தேன். ஆனால், சமஸ்கிருதம் மற்றும் 'உபநிடதங்கள்', 'சாஸ்திரங்கள்', 'வேதாந்தங்கள்' போன்றவற்றை முழுமையாக படிப்பது என்பது எட்டு ஆண்டுகாலப் படிப்பின் போது சாத்தியமில்லை, மாறாக, இவை பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதும், மற்றொரு மதத்தைப் பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவதும் தான் இதன் நோக்கமாகும்.

பகவத் கீதை, உபநிடதங்கள், மகாபாரதம் மற்றும் ராமாயணத்தின் முக்கிய பகுதிகள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சமஸ்கிருதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. கல்விப் பணிச்சுமை மிகப்பெரியது. எனவே, அதைக் கையாளக்கூடிய மாணவர்களை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் மற்றும் கடுமையான தரத்தை பராமரிக்கிறோம். மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு உள்ளதுஎன்று ஃபைசி கூறினார்.

இந்நிறுவனம் கோழிக்கோடு பல்கலைக் கழகத்தின் கீழ் முதன்மையாக ஷரியா கல்லூரியாக இருப்பதால், கலைப் பட்டப்படிப்பைத் தவிர, உருது மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் அரபு மொழியைப் போலவே சமஸ்கிருதத்தையும் கற்றுக்கொள்வது கடினமாக இருந்தது, ஆனால் தொடர்ந்து படிப்பதன் மூலமும் பயிற்சி செய்வதன் மூலமும் காலப்போக்கில் அது எளிதானது என்று சில மாணவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஒரு மாணவர் கூறுகையில், அரபியைப் போலவே இது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. ஆனால், அரபியைப் போலவே, அதைத் தொடர்ந்து படித்து, மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தால், அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எளிதாகிவிடும். வழக்கமான வகுப்புகள் மற்றும் தேர்வுகள் அதைக் கற்றுக்கொள்ள எங்களுக்கு உதவுகின்றன, "என்று கூறினார். மற்றொரு மாணவர், சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளவும், 'ஸ்லோகங்களை' கேட்கவும் உற்சாகமாக இருப்பதாக கூறினார்.

மாணவர்களின் பெற்றோரிடமிருந்தோ அல்லது வேறு யாரிடமிருந்தோ எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றாலும், சமஸ்கிருதம், பகவத் கீதை, உபநிடதங்கள் போன்றவற்றை மாணவர்களுக்கு முறையாகக் கற்பிக்க நல்ல ஆசிரியர்களைக் கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளதாக கூறிய முதல்வர் ஃபைசி, அதனால்தான் நாங்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தான் சமஸ்கிருதம் கற்பிக்கத் தொடங்கினோம், மேலும் இது ஏழு கிளைகளில் ஒன்றான இந்தக் கிளையில் மட்டுமே கற்பிக்கப்படுவதற்கும் இதுவே காரணம்" என்று கூறினார்.

"மாணவர்களுக்கு நல்ல பாடத்திட்டத்தை வகுத்த ஒரு சிறந்த ஆசிரியர்கள் எங்களிடம் உள்ளனர். சமஸ்கிருதம் கற்க மாணவர்களின் தரப்பிலிருந்தும்ஆர்வம் காட்டுவதால் அது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது" என்று முதல்வர் மேலும் கூறினார்.

ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் கே.கே. யதீந்திரன் கூறுகையில், நான் இந்துவாக இருந்ததால் அரபு நிறுவனத்தில் கற்பிப்பதில் எனக்கு சம்மதம் இருக்குமா என்று முதல்வர் ​​ஃபைசி கேட்டார். இங்கு இந்து, முஸ்லீம் பிரச்சினை இல்லை என்று சொன்னேன். கற்பிக்கத் தயாராக உள்ளதாக கூறினேன். நெற்றியில் சந்தனத் திலகமிட்டு கல்லூரிக்கு செல்வதைக் கண்டு மக்கள் நான் ஏன் அங்கு செல்கிறேன் என்று கேட்டார்கள். அதற்கு நான், சமஸ்கிருதம் கற்பிக்க அங்கு செல்கிறேன் என்று அவர்களிடம் கூறினேன். என்று கூறினார்

எந்த ஒரு பகுதியிலிருந்தும் எந்த எதிர்மறையான அல்லது ஊக்கமளிக்கும் கருத்துக்களைக் கேட்கவில்லை என்றும் அதைப் பற்றி கேள்விப்பட்ட அனைவரும் அதைப் பாராட்டி எங்களை ஊக்கப்படுத்தினர்," என்றும் முதல்வர் ஃபைசி கூறினார்.

MIC ASAS இல் சமஸ்கிருதம் கற்பிக்கும் டாக்டர் ரமேஷ் கூறுகையில் இங்கு வருவதற்கு முன்பு அங்குள்ள மாணவர்கள் சமஸ்கிருதம் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. அவர்கள் அதை பள்ளியில் கூட கற்கவில்லை. ஆனால் கற்க ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக ​​​​மாணவர்கள் சமஸ்கிருதத்தில் கொஞ்சம் பேசவும், 'பதம்' கற்கவும், சில 'ஸ்லோகங்களையும்' புரிந்துகொள்ளவும் செய்தார்கள் என்று கூறினார்

சமஸ்கிருத வகுப்புகளின் காட்சிகள் நிறுவனத்தின் முகநூல் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகள் உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கல் அல்லது அவை கம்யூனிசத்தின் மையங்களாக மாறிவிட்டதாகக் கூறப்படும் வேளையில், இந்த இஸ்லாமிய நிறுவனம் தனது மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் பகவத் கீதையுடன் அரபு மற்றும் குரானைக் கற்பிப்பதன் மூலம் முன்னுதாரணமாக உள்ளது.

இந்நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஹபீஸ் அபூபக்கர் கூறுகையில், இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம், ஆனால் மற்ற மதங்களைப் பற்றிய அறிவும் முக்கியமானது, அதுவும் சமஸ்கிருதத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க ஒரு காரணம். மாணவர்கள் தங்கள் வரலாறு மற்றும் புராணங்கள் மூலம் மற்றொரு மதத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் இது உதவும். நமது சமயக் கருத்துகளை அவர்களுடன் ஒத்திசைக்கவும் இது உதவும். புதிய இந்தியாவுக்கான புதிய தொடக்கத்தை உருவாக்க இது உதவும். சமஸ்கிருதத்தை பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் பின்னணியில் உள்ள குறிக்கோள் இதுதான் என்று கூறினார்

Updated On: 13 Nov 2022 8:09 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...