/* */

இந்திய கடற்படையின் படகு போட்டி ஆரம்பம்: மும்பையில் 5 நாட்கள் நடைபெறுகிறது

இந்திய கடற்படையின் படகு போட்டி- இன்று முதல் அக்டோபர் 5 வரை மும்பையில் நடைபெறும்.

HIGHLIGHTS

கடற்படை பிரிவுகளுக்கு இடையிலான மிகப்பெரிய பாய்மரப் படகு போட்டியான 'இந்திய கடற்படை படகு போட்டி-2021'-யை 2021 அக்டோபர் 1 முதல் 5 வரை இந்திய கடற்படை வாட்டர்மேன்ஷிப் பயிற்சி மையம் (INWTC), மும்பையில் நடத்துகிறது.

மேற்கு கடற்படை தலைமையகம், கிழக்கு கடற்படை தலைமையகம் மற்றும் தெற்கு கடற்படை தலைமையகம் ஆகிய இந்திய கடற்படையின் மூன்று பிரிவுகளில் இருந்தும் படகு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மும்பையில் ஐந்து நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

90-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்று, ஏழு வெவ்வேறு வகையான படகுகளில் போட்டியிடுகின்றனர். இதன் ஒட்டுமொத்த வெற்றியாளர் குறித்து 2021 அக்டோபர் 5 அன்று அனைத்து போட்டிகளும் முடிந்தவுடன் அறிவிக்கப்படும்.

2021 அக்டோபர் 1 அன்று 75 பங்கேற்பாளர்களின் படகு அணிவகுப்பு நடத்தப்படும். இது இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை (விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்) முன்னிட்டு இந்திய கடற்படையால் நடத்தப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.



Updated On: 4 Oct 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  2. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  3. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  4. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  5. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  6. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  7. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  8. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  10. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!