/* */

1971 போரில் பாகிஸ்தானை பணிய வைத்த இந்திய தளபதி

அந்த முன்னாள் இந்திய தளபதி பற்றி பலருக்கும் தெரியாது, 1971ல் இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின் போது, மாபெரும் சாகசத்தை அவர் செய்தார்.

HIGHLIGHTS

1971 போரில் பாகிஸ்தானை பணிய வைத்த இந்திய தளபதி
X

எதிரிக்கு எப்போதுமே தோல்வியை பரிசளிக்கும் நமது இந்திய ராணுவம் (கோப்பு படம்) 

அவர் பெயர் Jack Farj Rafael Jacob. அவர் லெப்டினென்ட் ஜெனரல் தரத்தில் இருந்தார். அவர் அன்று காட்டிய மாவீரம் சிலாகிப்புகுரியது. அதுவும் 1971ல் டிசம்பர் 12ம் தேதி நடந்த வீரமான சம்பவம். அந்த ரபேல் ஜாக்கெப் கல்கத்தாவை சேர்ந்தவர். மிக தேர்ந்த வீரரான அவரை, அரேபியாவில் ஊடுருவ முயன்ற எதிரி படைகளுக்கு எதிரான படையில் களமிறக்கியது பிரிட்டன், ஜேக்கப் பாக்தாத் அட்டகாசமாக போரிட்டார், அந்த வெற்றி, அவரை துனிசியாவுக்கு அனுப்பியது.

இந்திய பிரிவினையும் இன்னும் பலவும் வந்த காலங்களில் ராணுவத்தின் தலைமகனாக அவர் இருந்தார், 1948 மற்றும் 1965 யுத்தங்களில் அவரின் பங்களிப்பு பிரமாதமாய் இருந்தது. இந்நிலையில் தான், 1971 யுத்தம் வெடித்தது, அது மார்ச்சில் வெடித்தாலும் டிசம்பர் வரை நீண்டது. இரு விஷயங்கள் அதை நீட்டித்தன. முதலாவது பாகிஸ்தானின் நீர்மூழ்கிகள், அமெரிக்க ஆதரவில் அவை பலமாய் இருந்தன, ஹாஜியினை டிசம்பர் முதல் வாரத்தில் சோலியை முடிக்கும் வரை, இந்தியா கவனமாய் ஆடியது.

ஹாஜி மூழ்கடிக்கட்டது என்றவுடன் அமெரிக்கா களமிறங்க முனைந்தது, அதாவது கிழக்கு பாகிஸ்தானுக்கு சர்வதேச அமைதிப்படை என தன் படையினை அனுப்ப அது முடிவு செய்தது, சீனாவின் மாவோ என்பவருக்கு சீன படைகளை அனுப்பி அப்படியே நாலந்துலா கணவாயினை வெட்டி, கிழக்கு மாநிலங்களை இந்தியாவில் இருந்து பிரிக்கும் திட்டம் இருந்தது.

உலக நெருக்குதல் அதிகமாக, மிக சில நாட்களில் போரை முடிக்க வேண்டிய நிலைக்கு வந்தது இந்தியா. கிழக்கு பாகிஸ்தானில் சில லட்சம் வீரர்களோடு இருந்தார் பாகிஸ்தான் ஜெனரல் நியாசி, அந்த ஆசாமி சாதாரணமானவர் அல்ல., வெகு திறமையானவர் அதே நேரம் கடுமையானவர்.

அவரை நேருக்கு நேர் எதிர்கொள்ள இந்தியாவின் படைகள் நிரம்ப யோசித்தன. இந்திய தளபதி மானெக்ஸா பொறுப்பை ஜேக்கப்பிடம் கொடுத்தார், "ஜேக்கப் உங்களிடம் இருப்பது இந்தியாவின் பாதுகாப்பும் எதிர்காலமும், சிறிய சொதப்பல் நிகழ்ந்தாலும் கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவின் பெரும் தலைவலியாகி விடும், நீங்கள் இதை வெற்றிகரமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு" என்றார் மானெக்ஸா.

ஜெக்கப் பொறுப்பேற்றார், அந்த வியூகம் இன்றளவும் பாராட்டதக்கது. மிக மிக தேர்ந்த திட்டம் அது. ஆம், போர் நடத்தி அவகாசம் கொடுப்பதை விட, துரித கதியில் அந்த நியாசி கழுத்திலே கத்தி வைத்து விட்டால்? , சிரமம்தான் வாய்ப்பில்லை தான் ஆனால் அதை தவிர வேறு வழியில்லை , கால அவகாசமில்லை.

டாக்காவில் நியாசி இருந்த பகுதியில் விமானப்படையில் துரித தாக்குதலை நடத்தினார், பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய கடற்படை குழப்பியது. பாக்., படைகளுக்கு எந்த பொருளும் சப்ளை இல்லாமல் பார்த்து கொண்டது இந்தியா. விமானபடை மூலம் தாக்குதல் நடத்தியபடியே தன் அடுத்த திட்டத்தை அரங்கேற்றினார் ஜேக்கப்.

ஆம், வங்கதேசத்தின் ஆறுகள் வழியே இந்திய கப்பலில் இருந்த வீரர்கள் டாக்காவுக்குள் புகுந்தனர், ரப்பர் படகுகளில் வங்க ஆறுகள் வழியே ஊருக்குள் புகுந்து அசத்தியது இந்திய ராணுவம்

எல்லை தாண்டி நிலம் வழியாக வரும் அல்லது கப்பலில் துறைமுகம் வந்துதான் இந்திய ராணுவம் வரும் என, எதிர்பார்த்த நியாசிக்கு இப்படி ஆறுகள் மூலம் வந்தது பெரும் அதிர்ச்சி. இது யாருமே எதிர்பாரா அதிர்ச்சி, விடாகண்டன் நியாசி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, ஒரே நாளில் டாக்காவினை தன் கட்டுபாட்டில் கொண்டுவந்தார் ஜேக்கப். பாகிஸ்தான் அரண்டது

ஆறுகள் மூலம் ஊடுருவது பலனளிக்காது இதனால் நம் படை நியாசியிடம் சிக்கும் என பல தளபதிகள் பின்வாங்கியபொழுது அதை வெற்றிகரமாக நடத்திகாட்டினார் ஜேக்கப். ஆயினும் நியாசி சாகசம் நிகழ்த்துவார் என எதிர்ப்பார்ப்பு இருந்தது, பதைபதைப்பான நேரம் அது, அந்நேரம் ஜேக்கப் காட்டியவீரமே அவரின் துணிச்சலை உலகுக்கு சொன்னது. ஒரு லட்சம் வீரர்களுடன் நியாசியினை இந்திய ராணுவம் சுற்றி வளைத்த நிலையில் அதாவது ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் நடுவில் இருந்த நியாசியினை தனி மனிதனாக ஆயுதம் ஏதும் இன்றி காணச் சென்றார் ஜேக்கப்.

தோல்வியின் விளிம்பில் இருக்கும் எதிரிபடையிடம், தனியாக ஆயுதமின்றி செல்ல துணிச்சலான தைரியம் வேண்டும். தில்லாக சென்று நியாசியினை சந்தித்து அவர்கள் சிக்கியிருக்கும் நிலைமையினை விளக்கினார், இனி பாகிஸ்தான் ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியாதபடி அவர்கள் சிக்கியிருப்பதை சொல்லி 'சாகிறீர்களா? சரணடைகிறீர்களா?' என, அவர் கேட்டபொழுது நியாசி ஆடிபோய் இருந்தார்.

தனி மனிதனாக பாகிஸ்தான் ராணுவ தலமையகத்தில் புகுந்து, அவர்களை எச்சரித்த ஜேக்கப்பின் வீரம் முன்னால் நிற்கமுடியாமல் பாகிஸ்தான் சரணடைந்தது. சம்பிரதாயத்துக்கு டிசம்பர் 16 போர் முடிந்ததாக சொன்னாலும் 12ம் தேதியே முடித்து வைத்தார் ஜேக்கப். மாபெரும் வெற்றியினை அவரால் இந்திய தேசம் பெற்றது, அந்நிய படைகள் புகமுடியாமல் சட்டென போரை முடித்த அவரின் வீரமும் விவேகமும் மெச்சபட்டது.

மிகபெரும் விருதுகளும் பதவிகளும் வந்தன. அவர் கோவா மற்றும் பஞ்சாப் ஆளுநராகவும் பதவி வகித்தார்.

வாஜ்பாய் காலத்தில் மறுபடியும் இஸ்ரேல் இந்திய உறவுக்கு பாடுபட்டார், கார்கில் சண்டையின்பொழுது முடியா வயதிலும் பல நுணுக்கங்களை சொன்னார். எதிர்ப்பு ஏவுகணைகள் இந்தியாவுக்கு வருவதில் மிகுந்த கவனமாய் இருந்தார், ஏவுகணை ராணுவவியலில் அவருக்கு தனி திறமை இருந்தது, கலாமுக்கும் அவருக்கு அலுவலகத்துக்கு அப்பாலும் நட்பு இருந்தது.

மோடி பிரதமரான பொழுது இந்நாட்டின் ஏவுகனை மற்றும் பாதுகாப்பில் கருத்துக்களை அவரிடம் கேட்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அமெரிக்காவின் பேட்ரியாட் ரகமா? ரஷ்ய எஸ் 400 ரகமா எது சிறந்தது எனும் முடிவினை இங்கு எடுத்தது ஜேக்கப். 1941ல் தொடங்கிய அவரின் சேவை 2016 வரை இருந்தது. காந்தி காலம் தொடங்கி மோடி காலம் வரை இங்கு பெரும் சேவையாற்றியவர் அந்த ஜேக்கப், அந்த சாதனை சாமானியம் அல்ல, வரம். இந்த தேசம் மறக்க முடியா மாவீரன் ரபேல் ஜேக்கப்.

Updated On: 9 Dec 2022 3:02 AM GMT

Related News