/* */

அமெரிக்காவிடம் ராணுவ ட்ரோன்கள் வாங்க இந்தியா முடிவு

இந்திய ராணுவ பயன்பாட்டுக்கு 30 தாக்குதல் ரக ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா விரைவில் வாங்கவுள்ளது

HIGHLIGHTS

அமெரிக்காவிடம்  ராணுவ ட்ரோன்கள் வாங்க இந்தியா முடிவு
X

எம்.க்யூ.-9பி ஆளில்லா சிறிய ரக விமானம் 

தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான ஏவுகணைகளை ஏவுவதற்கு, எம்.க்யூ.-9பி ரக ஆளில்லா சிறிய ரக விமானங்களை (ட்ரோன்கள்) வாங்குவதற்கு பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் அடுத்த சில வாரங்களில் ஒப்புதல் வழங்க உள்ளது. பின்னர் அந்த பரிந்துரை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பப்படும்.

ட்ரோன்களின் விலை, அதில் இணைக்கப்பட வேண்டிய தளவாடங்கள் உள்ளிட்டவை தொடா்பாக அமெரிக்காவிடம் ஏற்கெனவே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு விட்டது.

நடப்பு 2021-22ம் நிதியாண்டிலேயே இவை வாங்கப்படவுள்ளது. அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 ட்ரோன்கள் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தலா 10 வீதம் வழங்கப்படும். .

அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ட்ரோன்கள் வானில் தொடா்ச்சியாக 35 மணி நேரம் வரை பறக்கக் கூடியவை. கண்காணிப்பு, உளவு, இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குதல் போன்ற பணிகளுக்கு இந்த ட்ரோன்கள் பயன்படும்.

Updated On: 17 Nov 2021 6:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...