சரிந்து விழும் கட்டிடங்கள்... அதிர்ச்சியூட்டும் வீடியோ! சமூக வலைத்தளங்களில் வைரல்..!
சரிந்து விழும் கட்டிடங்களின் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
HIGHLIGHTS
இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு: 200க்கும் மேற்பட்டோர் பலி, ரூ 10,000 கோடி இழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தொடர்ந்து பெய்யும் கனமழையால் இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு சூழ்நிலை நிலவுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 10,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலி, பலர் மாயமாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. 200க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், குலு மாவட்டத்தில் அன்னி நகரில் அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது எட்டு முதல் ஒன்பது பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் யாரும் பலிபடவில்லை, ஆனால் பலர் காயமடைந்தனர்.
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா, “இமாச்சல பிரதேசம் வரலாற்றில் இதுபோன்ற கடுமையான சேதத்தை சந்தித்ததில்லை. மழையால் ஏற்பட்ட பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இமாச்சல பிரதேச அரசு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.