Begin typing your search above and press return to search.
புதுவகை கொரோனா 5 மாநிலங்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை
புதுவகை கொரோனா பரவி வருவதால் 5 மாநிலங்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.
HIGHLIGHTS
சீனா , மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் உருமாறிய புதிய கோவிட் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் எக்ஸ் இ வைரஸ் மகாராஷ்ட்டிரா, குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் நாள்தோறும் உருவாகும் தொற்று பாதிப்பு 1,500 ஐ தொட்டது.
கேரளா, மிசோரம், மஹாராஷ்ட்டிரா, புதுடில்லி, ஹரியானா மாநிலங்களில் புதிய கோவிட் வேகமெடுத்துள்ளது. இந்த 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள கடிதத்தில், கோவிட் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தவும், கோவிட் நோய் கண்டறிதல், சோதனை அதிகரித்தல், தடுப்பூசி முழுமைப்படுத்துதல், மேலும் போதிய மருத்துவ வசதிகள் தயார் படுத்துதல் என மாநில அரசு விரைந்து பணியாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.