/* */

மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கு அவமானம் , குற்றவாளிகள் தப்ப முடியாது: பிரதமர் மோடி

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக ஒரு கும்பலால் இழுத்து செல்லப்படும் வீடியோ நேற்று வெளியானது.

HIGHLIGHTS

மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கு அவமானம் , குற்றவாளிகள் தப்ப முடியாது: பிரதமர் மோடி
X

வைரலாக பரவிய மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அணிவகுத்து நடத்திய கொடூரமான காணொளி குறித்து தனது இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிரம்பியுள்ளதாகவும், குற்றவாளிகள் தப்பமாட்டார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.

"நாட்டிற்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன், எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள். சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது" என்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்

"இந்த ஜனநாயகக் கோவிலுக்குப் பக்கத்தில் நான் நிற்கும்போது, ​​என் இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிரம்பி வழிகிறது. மணிப்பூர் சம்பவம் எந்த நாகரீக தேசத்திற்கும் வெட்கக்கேடானது. ஒட்டுமொத்த தேசமும் அவமானப்படுத்தப்பட்டுள்ளது."

நாடு முழுவதும் மிகப் பெரிய கண்டனத்தையும் இது குறித்து உடனடி நடவடிக்கைக்கான கோரிக்கையையும் தூண்டிய வீடியோ, மே 4 அன்று மணிப்பூரில் இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்வதைக் காட்டுகிறது,

பெண்கள் துன்புறுத்தப்பட்டு வயல்வெளிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்து 77 நாட்களுக்குப் பிறகு முதல் கைது, வீடியோ வைரலான ஒரு நாளுக்குப் பிறகு இன்று அறிவிக்கப்பட்டது.

மணிப்பூர் பயங்கரத்திற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் நடந்த சம்பவங்களையும் குறிப்பிட்டு, “அனைத்து முதல்வர்களும் தங்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும், குறிப்பாக நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அது ராஜஸ்தான், சத்தீஸ்கர் அல்லது மணிப்பூர் எந்த மாநிலமாக இருந்தாலும் என கூறியுள்ளார்

மணிப்பூர் பயங்கரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் அறிக்கையை எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. மணிப்பூர் தொடர்பான விவாதத்திற்காக அனைத்து அலுவல்களையும் நிறுத்தி வைக்குமாறு 15 எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

Updated On: 20 July 2023 6:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு