/* */

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 14,506 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா
X

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதற்கு பின்னர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் கொரனோ பரவல் தலைதூக்கியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,34,33,345 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 11,574 பேர் நலமடைந்ததால், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,28,08,666 ஆனது. தற்போது 99,602 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில், கொரோனா தொற்று காரணமாக 30 பேர் மரணமடைந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,077 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 197.46 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 13,44,788 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு, மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.

Updated On: 2 July 2022 11:57 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்