அக்னிபத் திட்டம் எதிர்த்து 3 வழக்குகள் தாக்கல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கேவியட் மனு...!
இந்திய அரசின் கடற்படை, விமானப்படை, தரைப்படை என, முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான 3 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் மீதான முடிவுகள் மேற்கொள்வதற்கு முன்பு, மத்திய அரசின் கருத்துக்களை கேட்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அக்னிபத் திட்டம் அமல்படுத்துவதில் அடுத்த கட்ட பரபரப்பும், சிக்கலும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்னிபத் திட்டத்தை அமல்படுத்துவதில் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.