/* */

'மக்களால், மக்களுக்காக' - இன்று உலக மக்களாட்சி தினம்

World Democracy Day -உலக மக்களாட்சி தினமாக, இன்று (செப்டம்பர் 15) கொண்டாடப்படுகிறது.

HIGHLIGHTS

மக்களால், மக்களுக்காக - இன்று உலக மக்களாட்சி தினம்
X

இன்று உலக மக்களாட்சி தினம் கொண்டாடப்படுகிறது.

World Democracy Day -'மக்களால், மக்களுக்காக' நடத்தப்படும் அரசாங்கத்தை, 'மக்களாட்சி' அல்லது 'ஜனநாயகம்' என்கிறார்கள். தற்போது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள், இந்த முறையை கையாண்டு வந்தாலும், இந்தியா அதில் முன்னிலை பெற்று விளங்குகிறது. ஜனநாயகத்தில் சட்டமும், சுதந்திரமும், சட்ட விதிமுறைகளும் அனைவருக்கும் பொதுவானவை. அனைத்து உலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான ஒப்புதல், 2007-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபை கூட்டத்தில் வழங்கப்பட்டது. இந்த தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன. இந்த ஒப்புதலின் படி, உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு தனிமனிதனும், தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் என்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் போன்றவற்றிற்கான கவுரவத்தை அனைவரும் பெறும் வகையிலும் இந்த நடவடிக்கையை ஐ.நா சபை எடுத்துள்ளது. சகல நாடுகளின் பிரதிநிதிகள், ஐ.நாவின் சகல அமைப்புகள், அரசு அமைப்புகள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இந்தத் தினத்தை கொண்டாட ஐ.நா. வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதன்படியே, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி, 'உலக மக்களாட்சி நாள்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 15 Sep 2022 9:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...