/* */

முதல்வர் பதவியை தியாகம் செய்தது பா.ஜ.க: ஷிண்டே உணர்ச்சிகரமாக பேச்சு..!

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை பா.ஜ.க தனக்கு விட்டுக்கொடுத்ததாக சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

HIGHLIGHTS

முதல்வர் பதவியை தியாகம் செய்தது பா.ஜ.க: ஷிண்டே உணர்ச்சிகரமாக பேச்சு..!
X

மகாராஷ்டிரா புதிய முதல்வர் ஏக்னாத் ஷிண்டே.

மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில், சிவசேனா உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். ஆனால், அதிருப்தி தெரிவித்த எம்.எல்.ஏ.,க்கள் ஏக்னாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு சொகுசு விடுதியில் பதுங்கிக்கொண்டனர். இதையடுத்து உத்தவ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் திரும்பிய ஏக்னாத் ஷிண்டே, மகாராஷ்டிரா புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு பின்னர் முதன் முதலாக இன்று சட்டசபை கூடியது. அப்போது, சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், பாலசாகிப் தாக்கரேயின் கனவை தமது தலைமையிலான புதிய அரசு நிறைவேற்றும் என்றார். அனைவரும் பட்னாவிஸ் தான் முதல்வர் ஆவார் என நினைத்தனர் எனவும், முதல்வர் பதவி தனக்கு தானாக வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், பா.ஜ.க தனக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்ததாகவும் பெரிதும் சிலாகித்தும் உணர்ச்சிவசப்பட்டும் பேசினார்.

Updated On: 4 July 2022 11:04 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    துபாயில் வெள்ளம்: விமான சேவை ரத்து! தண்ணீரில் சிக்கிய வாகனங்கள்
  2. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  4. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  5. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  6. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  7. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  8. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  9. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  10. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...