/* */

காஷ்மீரில் அடிப்படை உரிமைகளை பறித்த 35ஏ சட்ட பிரிவு: தலைமை நீதிபதி குற்றச்சாட்டு

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 35ஏ சட்டப்பிரிவு, அம்மாநிலத்தை பூர்வீகமாக கொள்ளாத மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை பறித்துள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குற்றம் சாட்டினார்

HIGHLIGHTS

காஷ்மீரில் அடிப்படை உரிமைகளை பறித்த 35ஏ சட்ட பிரிவு: தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
X

இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்

அரசியலமைப்பின் 35 ஏ, ஜம்மு காஷ்மீரை பூர்விகமாக கொள்ளாத அங்கு வசிக்கும் மக்களுக்கு சில முக்கிய அரசியலமைப்பு உரிமைகளை பறித்துள்ளது என்று இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் இன்று தெரிவித்தார்.

இந்த பிரிவு மூலம் சமவாய்ப்பு, மாநில அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு மற்றும் நிலம் வாங்குவதற்கான உரிமை அனைத்தும் குடிமக்களிடமிருந்து பறிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.


கடந்த 2019ல், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் இந்த சட்டப் பிரிவை நீக்கும் மசோதாநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்ததில், 20க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான 11வது நாள் விசாரணையின் போது அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 35ஏ சட்டப்பிரிவு, அம்மாநிலத்தை பூர்வீகமாக கொள்ளாத ஆனால் அங்கு வசிக்கும் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை பறித்துள்ளது.

மாநில அரசின் கீழ் வேலைவாய்ப்பு என்பது விதி 16(1) இன் கீழ் குறிப்பாக வழங்கப்படுகிறது. எனவே ஒருபுறம் பிரிவு 16(1) மறுபுறம், சட்டப்பிரிவு 35A அந்த அடிப்படை உரிமையை நேரடியாகப் பறித்து, இந்த அடிப்படையில் எந்தச் சவாலிலும் இருந்து பாதுகாத்தது

அதுமட்டுமின்றி மாநில அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு மற்றும் நிலம் வாங்குவதற்கான உரிமைகள் அந்த மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டுமே இருந்தது. மற்றவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்க வில்லை.

மாநிலத்தின் வேலைவாய்ப்பு அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். அதேபோல இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19 படி, நாட்டின் எந்தப் பகுதியிலும் வாழவும் குடியேறவும் உரிமையை அங்கீகரிக்கிறது. ஆனால் இவற்றை ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவான 35ஏ பறிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய அரசின் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீர் மக்களை நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இணையாக வைத்துள்ளது என்றார். ஜம்மு காஷ்மீரில் முன்பு அமல்படுத்தப்படாத அனைத்து நலச் சட்டங்களையும் இது செயல்படுத்துகிறது.

"இந்திய அரசியலமைப்பில் செய்யப்பட்ட எந்த திருத்தமும் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு 370 வது பிரிவின் மூலம் செயல்படுத்தப்படும் வரை பொருந்தாது… எனவே 2019 வரை ஜம்மு காஷ்மீரில் கல்வி உரிமை ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை, ஏனெனில் இந்த வழி பின்பற்றப்படவில்லை," என்று அவர் கூறினார். உதாரணமாக, கல்விக்கான உரிமையைச் சேர்த்த அரசியலமைப்புத் திருத்தத்தை அவர் மேற்கோள் காட்டினார்.

Updated On: 29 Aug 2023 9:51 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!