/* */

பிரிஜ்பூஷனை கைது செய்யாவிட்டால் போராட்டம்: விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை

பிரிஜ்பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால் ஜூன் 9-ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

HIGHLIGHTS

பிரிஜ்பூஷனை கைது செய்யாவிட்டால் போராட்டம்: விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை
X

பிரிஜ்பூஷன் சிங்கை கைது செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவரை கைது செய்ய கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதற்கிடையே ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். பின்னர் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் பிரிஜ்பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால் ஜூன் 9-ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரியானாவில் குருஷேத்திரத்தில் விவசாய சங்கங்களின் மகாபஞ்சாயத்து நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு பாரதிய கிசான் யூனியன் தலைவர் கூறுகையில், மல்யுத்த வீரர்-வீராங்கனைகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களது குறைகளை தீர்க்க வேண்டும். இந்த விஷயத்தை தீர்க்க அரசாங்கத்திற்கு ஜூன் 9-ம் தேதி வரை அவகாசம் அளிக்கிறோம்.

மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் அல்லது ஜூன் 9-ம் தேதி முதல் போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள். பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால் மல்யுத்த வீரர்களுடன் 9-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தருக்கு சென்று போராட்டத்தை தொடங்குவோம். நாடு முழுவதும் மகா பஞ்சாயத்துக்கள் நடத்தப்படும்.

மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மல்யுத்த வீரர்களின் பிரச்சனையில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளதால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

மல்யுத்த வீரர்களின் புகார்களின் அடிப்படையில் டெல்லி காவல்துறை இரண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அவர்களில் ஒருவர் சிறுவயது மல்யுத்த வீரரின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 3 Jun 2023 7:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  2. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  4. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  5. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  6. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  9. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  10. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்