/* */

அக்னிபத் திட்டத்தில் விமானப்படையில் சேர்வதற்கு அப்ளிகேஷன் போட்டு காத்திருக்கும் 2.72 லட்சம் பேர்..!

அக்னிபத் திட்டத்தில் விமானப்படையில் சேர இதுவரை, 2.72 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

அக்னிபத் திட்டத்தில் விமானப்படையில் சேர்வதற்கு அப்ளிகேஷன் போட்டு காத்திருக்கும் 2.72 லட்சம் பேர்..!
X

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் (கோப்பு படம்)

அக்னிபத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஒப்புதல் பெற்றார். இதைத்தொடர்ந்து, தரைப்படை, விமானப்படை, கப்பல் படை என முப்படைகளுக்கும், நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. நான்கு ஆண்டுகள் முடிவில் அக்னி வீரருக்கு 12 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஓய்வூதியம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பும் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளுக்கும் அக்னிபத் திட்டத்தின் கீழ் தனித்தனியாக வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 'பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்' என, விமானப் படை தரப்பில் முதற்கட்ட அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், கடந்த ஏழு நாட்களில், அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியில் சேர இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 1 July 2022 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு