Begin typing your search above and press return to search.
இந்தியாவில் புதிதாக 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,132 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,563 பேர். சிகிச்சை பலனின்றி 193 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் கேரளாவில் மட்டுமே 10,691 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 பேராகப் பதிவாகியுள்ளன.
நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2,27,347 பேர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,32,93,478 பேர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,50,782 பேராக உள்ளது.
மொத்த தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 95,19,84,373 பேர்.