Begin typing your search above and press return to search.
பிரஷாந்த் கிஷோர் 3,000 கி.மீ பாத யாத்திரை
பீகாரில் அக்டோபர் 2 முதல் 3,000 கி.மீ பாத யாத்திரை நடத்துவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்ற ஊகங்களுக்கு மத்தியில் பீகாரில் அக்டோபர் 2 முதல் 3,000 கி.மீ பாத யாத்திரை நடத்துவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர் பீகாரில் புதிய ஆட்சியை உருவாக்க தன்னை அர்ப்பணிப்பதாக கூறினார். பீகாரில் எதிர்காலத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லாததால், அரசியல் கட்சி தொடங்குவது இப்போது தனது திட்டத்தில் ஒரு பகுதியாக இல்லை என்று கூறினார்.
முடிந்தவரை பலரை சந்திக்க அக்டோபர் 3 முதல் 3,000 கிமீ பாதயாத்திரை நடத்தவுள்ளதாகவும் கூறினார்