/* */

ட்விட்டர் இந்தியா நிர்வாகிகள் கைதாக வாய்ப்பு ?

ட்விட்டர் இந்தியா நிர்வாகிகள் கைதாக வாய்ப்பு ?
X

விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் நிலையில் ட்விட்டர் இந்தியா நிர்வாகிகள் கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியஅரசு அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த குடியரசு தினத்தன்று, விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். போராட்டம் தொடர்பான சிலரின் அவதூறு பக்கங்களை நீக்குமாறு ட்விட்டர் நிர்வாகத்திடம் இந்திய அரசு வலியுறுத்தியது.இதையடுத்து சிலரின் பக்கங்களை ட்விட்டர் நீக்கினாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு மீண்டும் கணக்குகள் செயல்பட அனுமதி அளித்தது. இதனால் அதிருப்தி அடைந்த மத்திய அரசு, 1,178 பேரின் கணக்குகளை முடக்க ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் ட்விட்டர் கணக்குளை நீக்கும் பணியை ட்விட்டர் தாமதப்படுத்தியதால், ட்விட்டர் இந்தியாவின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ட்விட்டர் கணக்குகளை நீக்குவதை தாமதப்படுத்தியதால் தங்கள் பொறுமையை இழந்துவிட்டதாக அரசாங்கம் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 11 Feb 2021 10:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?