/* */

திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வு நடக்குமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகள், திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதற்கு, அதன் தலைவர் பாலசந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வு நடக்குமா? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
X

இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற 21ம் தேதி, திட்டமிட்டபடி குரூப் 2 தேர்வுகள் நடக்கும். அன்றைய தினம், காலை 9.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கும். ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் மையத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என்றார்.

நடப்பாண்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு கடந்த ஆண்டை விட 2 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி மொத்தம் 11,78,175 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளதாக குறிப்பிட்ட பாலசந்திரன், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் குறிப்பிட்ட தாலுக்காக்களை உள்ளடக்கிய 117 தேர்வு மையங்களில் 4,012 தேர்வுக்கூடங்களில் தேர்வு நடைபெறும் என்றார்.

குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜூன் மாதம் இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

Updated On: 17 May 2022 1:18 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?