/* */

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை: 10th, +2, கல்லூரி மாணவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை: 10th, +2, கல்லூரி மாணவ, மாணவிகளில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.8.2021

HIGHLIGHTS

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை: 10th, +2, கல்லூரி மாணவர்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
X

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை: 10th, +2, கல்லூரி மாணவ மாணவிகளில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கிடையே அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்கப்படுத்த மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியான மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இது குறித்த விபரங்கள்:

கல்வி உதவித்தொகையின் பெயர்: Kishore Vaigyanik Protsahan Yojana Fellowship (KVPY-2021)

உதவித்தொகை: மாதம் ரூ.5000/- முதல் 7000/- வரை

கல்வித்தகுதி: மாணவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, அதனடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி அடிப்படையில் 3 பிரிவுகளின் விபரங்கள் வருமாறு:

1. Stream: SA: பத்தாம் வகுப்பில் குறைந்தது 60% மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +1-ல் அறிவியல் அல்லது கணிதப் பாடப் பிரிவில் படித்து கொண்டிருக்க வேண்டும்.

2. Stream: SX: தற்போது +2 அறிவியல் அல்லது கணிதப் பாடப் பிரிவில் படித்து கொண் டிருக்க வேண்டும். குறைந்தது 60% மதிப் பெண்களுடன் +2 தேர்ச்சி பெற வேண்டும். +2தேர்ச்சிக்கு பின் கல்லூரியில் ஏதாவது ஒரு அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும்.

3. Stream: SB: ஏதாவதொரு அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்பில் முதலாமாண்டு மாணவராக இருக்க வேண்டும்.

குறிப்பு: Stream SA, Stream Sx பிரிவிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை முடித்து ஏதாவது ஒரு அறிவியல்/கணிதம்/புள்ளியியல் பாடப்பிரிவில் முதலாமாண்டு மாணவராக கல்லூரியில் சேர்ந்த பின்னரே உதவித் தொகை வழங்கப்படும்.


இடைப்பட்ட காலத்தில் தேசிய அளவில் நடைபெறும் அறிவியல் கல்வி மாநாடு, அறிவியல் கருத்தரங்கு ஆகியவற்றிற்கு KVPY சார்பாக அழைத்து செல்லப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் KVPY-Aptitude Test-க்கு அழைக்கப்படுவர்.

இந்த தேர்வு 7.11.2021 அன்று ஆன்லைன் முறையில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர்கள் ரூ.1250/-

SC/ST மற்றும் மாற்று திறனாளிகள் ரூ. 625 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.8.2021

விண்ணப்பிக்கும்முறை:

இது பற்றிய முழு விபரங்களை தெரிந்துகொள்ளவும் , இணையவழியில் விண்ணப்பம் செய்யவும், மேலும் முழுவிபரங்களை அறிந்து கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகார பூர்வ இணையதளத்தின் லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அதிகார பூர்வ இணையதள லிங்க்: http://kvpy.iisc.ac.in

அதிகார பூர்வ அறிவிப்பை காண லிங்க் : http://kvpy.iisc.ac.in

Updated On: 5 Aug 2021 5:47 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்